சனி, டிசம்பர் 04, 2010

அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம்

அண்ணல் அம்பேத்கரின் உருவத்தை பயன்படுத்தாத கட்சிகள் இந்தியாவில் இல்லை, புதிதாக முளைக்கும் கட்சிகளும்,  அண்ணலுடன் முற்றிலும் முரண்படுவோரும் உள்பட


அனைவருக்கும் பொருந்தும் நெறிமுறைகள் புத்தருக்கு முன் இந்தியாவில் எந்த மதமும் வரைந்தது இல்லை. புத்தருக்கு பின் அறிவர் அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்தியாவில் இந்தியர்கள் மதத்தினால், மொழியால், சாதியால் சமமானவர்கள் இல்லை. சமத்துவத்தில் நம்பிக்கை இல்லாத வன்முறையை துணைகொண்டு மக்களை வேறுபடுத்தி பிறப்பின் அடிப்படையில் ஆளுக்கொரு நீதி வழங்கப்பட்டது. மனுவை எரித்து மானுட விதியை படைத்த அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தினால் மட்டுமே இந்தியர்கள் அனைவரும் சமமானார்கள்


கபிலர், புத்தர், மகாத்மா சோதி ராவ் போன்ற சமுதாயச் சீர்திருத்தவாதிகளை தாம் வழிகாட்டியாக கொண்டவர்.


எதற்கும் உதவாத திரைப்படத்திற்கு எல்லாம் வகைவகையான எண்ணிக்கை அடங்காத விளம்பரங்கள். அறிவர் அண்ணலின் திரைப்படத்தை தமிழில் வெளியிட முட்டுக்கட்டைகள் தான் எத்தனை எத்தனை

பகுத்தறிவாளிகளை இருட்டடிப்பு செய்வது அரசு பட புத்தகங்களில் மட்டும் அல்ல தொலைகாட்சி, திரைப்படம் என அனைத்து ஊடகங்களிலும். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், நினைவு நாளில் ஒரு செய்தியாக கூட தொலைகாட்சிகளில் கண்டது இல்லை (பொதிகை தொலைக்காட்சியை தவிர). ஆனால் எந்த ஆண்டும் இல்லாத இந்த ஆண்டு மட்டும் ஏன் தமிழர் பிணம் தின்னும் இந்த காங்கிரஸ் அம்பேத்கரின் மீது இவ்வளவு பற்று. சென்னையில் காணுமிடங்களில் எல்லாம் அம்பேத்கரின் நினவு நாள் குறித்து காங்கிரசுகரர்களின் பதாகைகள்



இந்தியாவிற்கு தற்போது உள்ள மதங்கள் ஏதும் இந்தியாவில் தோன்றியது இல்லை. இந்தியாவில் தோன்றியவை சைனாமும் பௌத்தமும்.

உலக நாடுகளில் பண்டைய இந்தியாவின் பெருமைக்கு காரணம் புத்தர் அன்றி வேறு யாரும் இல்லை. புத்தர் பெருமானின் 2550 வது பரி நிப்பாண ஆண்டை இந்தியா அரசு ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்தது. அந்த ஆண்டு கூட அரசு விடுமுறை அளிக்கவில்லை. சமத்துவத்தின் மீது நம்பிக்கை அற்று வன்முறையை கையாண்ட மதங்களுக்கு எல்லாம் விழாக்கள், அரசு விடுமுறை. துவக்க விழா நிறைவு விழா இவ்விரண்டையும் அரசியல் விழாவாக விழா நடத்தி முடித்து விட்டது கலைவாணர் அரங்கில் தமிழக அரசு. பண்பாற்ற அறிவுக்கு ஒவ்வாத கதை பூரான பாத்திரங்களுக்கு திராவிட கட்சி என்று சொல்லும் தொலைகாட்சிகளில் தடை இன்றி வளம் வருகிறது. (காணுங்கள் இந்தியாவின் புத்தருக்கான முதல் தொலைக்காட்சி http://lordbuddhatv.com ) பௌத்தத்தை மீண்டும் இந்தியாவிற்கு தந்தவர் அறிவர் அண்ணல் அம்பேத்கர்.


தலித் இன தலைவன்,
அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவான் என்று சொல்லி அரசியல் வியாபாரம் செய்கின்றவன்கூட இந்தப் படம் தமிழில் வெளிவராதது குறித்து கவலைப்படவில்லை. அடிவருடி எலும்பு பொறுக்கி தின்னிகளை இனியாவது அடையலாம் கண்டு புறம் தள்ளுவோம்.

இத்திரைப்படம் வெளிவர உழைத்த அனைவருக்கும் நன்றி
வழக்கறிஞர் சத்தியசந்திரன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
திரு எடிட்டர் பி. லெனின்
வே. மதிமாறன்
பா.லெமூரியன்

1 கருத்து :

  1. அருமையான கட்டுரை மிகவும் நேர்த்தியாக இருந்தது, அடிவருடிகளை சாடியது வாசகர்களின் உள்ளக்குமுறலை வெளிபடுத்துவதாக அமைந்து இருக்கிறது வாழ்த்துக்கள்

    எழுமலை இளங்கோவன்

    பதிலளிநீக்கு