திங்கள், ஜனவரி 10, 2011

The Makers of the Universe

அக்ஸ்போர்ட் பல்கலைகழகம் "உலகை படைத்தவர்கள்" என்ற ஒரு நூலை தற்போது வெளியிட்டிருக்கிறது. 10,000 ஆண்டுகளில் யாரெல்லாம் சிறப்பான பங்களிப்பை உலகிற்கு அளித்தார்களோ, எவர்களின்   பங்களிப்பை கண்டு உலகம் வியந்ததோ அவர்களில் 100 பேரை வரிசைப்படுத்தியுள்ளது.  முதலிடத்தில் உயர் வெய்திய பகவான் புத்தரையும் நான்காவது வரிசையில் அறிவர் அண்ணல் அம்பேத்கரையும் வரிசைபடுத்தியுள்ளது. இது பெறும் மகிழ்ச்சியான செய்தி  

புத்தர் என்பது ஒரு பொது பெயர். மனிதனாக பிறந்த எவரும் புத்தராகலாம். கௌதம புத்தர் 25வது புத்தர். எனவே இறந்தகால  புத்தருக்கும், நிகழ்கால புத்தருக்கும் வருங்காலங் புத்தருக்கும் வணக்கம் செலுத்தப்படுகிறது. பௌத்தத்தின் திரிசரணம் (அ) மும்மணி என அழைக்கப்படுவது "புத்தம் தம்மம் சங்கம் ".

அறிவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திரிசரணம் என அழைக்கப்படுவது  " கற்பி புரட்சி செய் ஒன்று சேர் "

 பகவான் புத்தர் துன்பத்திற்கான காரணத்தை அறிய பல அறிஞர்களை நோக்கி நடந்தார். பல முறைகள கற்று தேர்ந்தார். ஆனால் அவர்களிடமிருந்து அதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.  தனது சுய முயற்சியினாலே அதற்க்கான காரணத்தை கண்டுபிடித்தார். அவற்றை  தாம் கடைபிடித்தும் பிறருக்கும் 45 ஆண்டுகள் போதித்தார்.

அறிவர் அண்ணல் அம்பேத்கர் பெரும்பான்மையான மக்களின் இழிவான நிலைக்கான காரணத்தை அறிய பல நூல்களை பயின்றார். சட்டம் இயற்றினார், சட்டத்தின் முன் அனைரையும் சமமாக்கினார். சமத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாத மதத்தில், செயலின் அடிப்படையில் இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மதம் பெரும்பான்மையான மக்களின் சமயம் அல்ல பெரும்பான்மையான மக்கள் பூர்வகுடி பௌத்தர்கள் என்பதை பல ஆய்வுகள் நடத்தி நிருபித்து தாமும் இலட்சகணக்கான மக்களும் பௌத்தம் பூண்டனர்.

அண்ணல் அம்பேத்கர் தமது வழிகாடியா  கொண்டவர்கள்
01 தத்துவ ஞானி கபிலர்
02 . உயர் வெய்திய புத்தர் மற்றும்
03 . சமுக புரட்சியின்   தந்தை ஜோதி பா பூலே

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக