வியாழன், ஆகஸ்ட் 11, 2011

புத்தரின் பதில்கள் 2


புத்தரின் ஆசிரியர் யார்?


தம்மத்தை போதிக்க காசி செல்லும் வழியில், துறவியாக திரிந்து கொண்டிருந்த உப்பகன் என்ற பெயர் கொண்ட ஒரு துறவி அவரை பார்த்து, நண்பரே! உமது புலன்கள் மிகவும் தெளிவடைந்துள்ளன. உமது உடற்பொலிவு துயதாகவும் தெளிவாகவும் உள்ளது. நண்பரே!

யார் பொருட்டு நீர் துறவு மேற்கொண்டீர்?
உமது ஆசிரியர் யார்?
யாருடைய கொள்கைகளை நீர் பின்பற்றுகீறீர்? என்று கேட்டார்

புத்தர் பதிலளித்தார்
அனைத்தையும் வென்று விட்டேன்
அனைத்தையும் அறிந்து விட்டேன்
அனைத்திலும் பற்றறுத் தேன்
அனைத்தையும் துறந்து விட்டேன்

ஆவாவெலாம் அழித்து நிற்கும்
அரகந்த நிலையில் நானே
அமிழ்ந்து கிடக்கின்றேன்
அனைத்துமே முழுமையாக
அனைத்தையும் நானாய்த் தானே
அறிந்துமே புரிந்து கொண்டேன்

ஆசிரியர் என்றேனக்கு
யாருமே இல்லை இங்கு
நிகராக இருப்பவர் இல்லை
இவ்வுலகத்தில் எவ்விடத்தும்

தெய்வங்கள் உள்ளடங்க
எனக்கெதிர் நிற்க வல்லார்
யாருமே இல்லை இங்கு
மெய்யேதான் நான் இப்பாரில்
அரகந்த னாயிருத்தல்
ஒப்புயர்வற்ற ஆசான்
இங்கு நான் ஒருவனே தான்

பூரண மெய் ஞானம் பெற்றோன்
புவியில் நான் ஒருவனே தான்

தன்மையாடு சாந்தி
மேவிய வாழ்கின்றேன் நான்
தம்ம சக்கரத்தை காசி
நகரிலே நாட்டுதற்குச்
செல்கின்றேன், மரணமில்லாப்
பெருவாழ்வு முரசு தன்னைக்
கொட்டுதற்கே

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக