வெள்ளி, டிசம்பர் 18, 2015

பகவன் புத்தரின் தலைமுடி

நீண்ட தலைமுடியும், நீண்ட தாடியும், நீண்ட மீசையுடன் துறவிகள் வாழ்ந்து வந்திருந்த காலத்தில், உடலை தூய்மையாக வைத்திருக்க தலைமுடி, தாடி மீசை ஆகியவற்றை மழித்து துறவு வாழ்வை மேற்கொண்டார் பகவன் புத்தர். புத்தரும் நிகண்ட நாத புத்திரர் என்ற மகாவீரரும் தான், தங்களது சீடர்கள் தலையை மழித்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு புதிய முறையை ஏற்படுத்தினார்கள்.

இது இந்திய துறவியல் முறைக்கு முற்றிலும் புதியது மட்டுமல்ல முரண்பட்டதும் கூட ஏனெனில் இந்திய யோகிகளும், துறவிகளும் தவசீலர்களும் நீண்ட ஜடாமுடியைக் கொண்டு மரஉரி ஆடைகள் அல்லது மான், புலி போன்ற விலங்கினங்களின் தோல்களை ஆடையாக அணிந்து இருந்தினர்.

வைதிகத்தில் தலைமுடி மழித்தல் நீண்டகாலமாக ஒரு அபசகுனமாக இருந்தது. பௌத்தத்தின் மீது இருந்த வெறுப்பும் எதிர்பும் தான் அதற்க்கு காரணம். வைதிகத்தில் அர்ச்சகர் பலரும் தலைமுடியை மழித்து இருப்பர். ஆனால் தலையின் பின்புறம் ஓர் மயிர் கற்றையை விட்டு மழிப்பர். முழுமையான தலைமுடி மழிப்பு இருக்காது. வைதிக மரபில் ஆண்கள் தங்கள் இல்லத்தில் தமது மூத்தோர் இறந்தால் தான் தலைமுடியை மழிகின்றனர். பெண்கள் கணவர் இறந்தால் தான் தலைமுடியை மழிகின்றனர். முடி மழித்தலை துக்கமாக (அ) துக்கத்தை கடைபிடிக்கும் நேரமாக பார்க்கிறது வைதிகம். முடி மழித்தல் என்பது வைதிக தம்மத்திற்கு எதிரானது. 

ஆனால் அவர்கள் தற்பொழுது கோவிலில் சென்று தலைமுடி மழிப்பது பௌத்த நடைமுறையை பின்பற்றித்தான். அதிலும் பெருமாள் கோவிலுக்கு சென்று தலைமுடி மழிப்பதில்லை. திருப்பதி பாலாஜி கோவிலுக்கு சென்று தலைமுடி மழிப்பது அத்தளம் பௌத்த தளமாக இருந்ததால் அந்த நடைமுறையை பின்பற்றபடுகிறது.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிக்குகளும் பிக்குனிகளும் முடியை மழிக்க வேண்டும் (அ) இரண்டு அங்குலத்திற்கு மேல் வளர்ந்தால் மழிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் பகவன் புத்தர். மீசை நீண்டு இருந்தால் பிக்குகள் மீசையை மழிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் பகவன் புத்தர்.

01. பகவன் புத்தர் தலைமுடியுடன் காணப்பட்டார் என்பதற்க்கு அளிக்கப்படும் விளக்கங்கள்.

01.01 பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி குறிப்பிடும் போது புருவங்களின் மத்தியில் ஒரு வெள்ளை முடி கற்றை உள்ளது என தீக நிகாயம் (DN30)  மற்றும் மஜ்ஜிம நிகாயம் (MN91)  குறிப்பிடுகிறது.
01.02. பகவன் புத்தர் துறவு மேற்கொள்ளும் போது தமது வாள் கொண்டு தமது முடியை வெட்டினார். அவரது தலை முடியின் நீளம் இரண்டு அங்குலமாக குறைக்கப்பட்டு, வலது பக்கம் சுருண்டு அது நெருக்கமாக அவரது தலையில் இட்டிருந்தது. அதனால் மேலும் தலையை மழிக்கும் எந்த தேவையும் எழவில்லை என்று திரு ரைஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.
01.03. பர்மா (அ) மியன்மாரில் உள்ள  பொன்மலையில் (Golden Rock) ஒரு பெரிய பாறை ஒன்று இருக்கின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து 3600 சதுர அடி உயரத்தில் உள்ளது. இப்பாறை புத்தரின் தலை முடியை தாங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. பகவன் புத்தரின் பல வருகையில் ஒரு முறை தம் தலைமுடி ஒன்றை துறவி ஒருவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துறவி பகவன் புத்தரின் தலை முடியிழையை தம் தலை முடியில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் அதனை அரசனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

02. பகவன் புத்தர் தலைமுடியை மழித்து இருந்தார் என்பதற்க்கு அளிக்கப்படும் விளக்கம்
02.01. வசல சுத்தத்தில் (Vasala Sutta):ஒரு நாள் பகவன் புத்தர் உணவு ஏற்கும் பொருட்டு ஜெதவனத்தில் உள்ள சாவதி நகருக்குள் சென்றார். அப்பொழுது பாரத்வாஜர் என்ற அந்தணர் பிரம்மயாகத்தை முடித்து ஒரு நல்ல சகுணத்திற்காகக் காத்திருந்த பொழுது புத்தர் தனது இல்லத்தை நோக்கி வந்து கொண்டுருப்பதை கண்ணுற்ற அவர், புத்தரை நோக்கி கடுஞ் சொற்களில் கூறலானார்.
அங்கேயே நில்லும்!
தலையை மழித்திருக்கும் துறவியே!
அனுதாபத்திற்க்குரிய யோகியே! தீண்டத்தகாதவனே!
'Stay there, you shaveling,stay there you wretched monk, stay there you outcast.'
புத்தர் பதிலுரைத்தார் உமக்கு தெரியுமா அந்தணரே யார் ஒருவன் தீண்டத்தகாதவன் என்று? நாம் கூறுபவைகளை மனதில் நன்கு இருத்திக் கொள்வீர் என புத்தர் மனிதனின் தீய குணங்களை பகவன் புத்தர் இந்த வசல சுத்தத்தில் (Vasala Sutta)  பட்டியல் இட்டுக் காட்டுகிறார். இந்த சுத்தத்தை விரிவாக படிக்க யார் தீண்டத்தகாதவன்? பார்க்கவும் 
02.02. மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரத்தில் (புக்குசாதி)புத்த பகவான் ஒரு குயவனுடைய சாலையில் இரவைக்கழித்தார். அதே சாலையில் ஏற்கனவே அங்குவந்து சேர்ந்த ஒரு இளம் சந்நியாசியும் இருந்தார். ஆனால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவில்லை. இந்த வாலிபர் இல்லறத்தைத் துறந்து சந்நியாசங் கொண்டது தம்முடைய தருமத்தைப் பின்பற்றியே என்பதை புத்தர் உணர்ந்தார். தான் இன்னார் என்பதைக் காட்டிக் கொள்ளாமலே பகவன் பின்னர் சத்தியம் என்றால் என்ன என்பதைப் பற்றி மிகச் சிறந்த உபதேசத்தைப் செய்தார். பகவனுடைய அறிவுரையை கேட்டு முடியுந்தருவாயில் தனக்கு தரும போதனை செய்தவர் புத்தர் என்பதை உணர்கிறார் புக்குசாதி. மேலும் விரிவாக பார்க்க  பகவான் புத்தர் அருளிய போதனைகள் -புக்குசாதி
03. பகவன் புத்தர் தலைமுடியை மழித்து இருந்தார் என்பதற்கு பொருந்தும் காரணங்கள்
03.01அங்க அடையாளங்கள் மறுப்பதற்கான காரணங்கள்( 01.01 )
பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி நீண்ட பேருரையிலும் (தீக நிகாயத்தில்) (DN30) இலட்சன சுத்தத்திலும் இடைப்பட்ட பேருரையிலும் (மஜ்ஜிம நிகயத்தில்) (MN91) பிராமயு சுத்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
a) இந்த அங்க அடையாளங்கள் வைதிக சிந்தனை. இதனை பௌத்தத்தில் பின்னர் இணைக்கப்பட்டுள்ளது. அசித்தர் பிறந்த குழந்தையை (சித்தார்த்த கெளதமரை) பார்க்க வந்தபொழுது மகா புருஷர் அங்க அடையாளங்களை குறிப்பிடுகிறார். இவைகள் பௌத்த சிந்தனைகளுக்கு முந்தியவை.
உயர்வானவர்கள் (Maha Purusan) உடல்கூறுகள் மூலம் அறியப்படுதல் என்பது வைதிக சிந்தனை என்பதை பகவன் புத்தர் நன்கு அறிந்து இருந்தார் மேலும் இக்கருத்தை அவர் நிராகரித்தார். ஒருமுறை ஒருவர் பகவன் புத்தரிடம் வினாவினார் உயர்வான மனிதர் என்பவர் யார்? எது ஒருவரை உயர்வான மனிதர்க்குகிறது? என்று. மனதினை விடுவிப்பதினால் (Freeing the mind) தான் ஒருவர் உயர்வான மனிதராக முடியும். மனதினை விடுவிக்காமல் ஒருவரால் உயர்வடைய முடியாது என பதிலுரைத்தார். (S.V,157) தம்மவிக்கி
b) அந்த காலத்தில் இந்த இலட்சணங்களின்  மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பக்தர்கள் புத்தருடைய பெருமை பாராட்ட வேண்டும் என்பதற்காக நடந்த முயற்சி இது. ஆதலால் இதில் தனிப்பட்ட உண்மை இருப்பதாக கருத வேண்டிய   அவசியம் இல்லை. தர்மானந்த கோசம்பி.
c) இந்த இலட்சணங்கள் புத்த ஜாதகத்து நிதானங்களில், லலிதாவிஸ்தரத்திலும், திரி பீடாக இலக்கியத்திலும் இவற்றை பற்றிய விரிவுகள் வருகின்றன.  உதாரணமாக  
திக நிகாயம் - அம்பட்ட சுத்தம்
போக்கரஸாதி என்னும் அந்தணன் இளைஞன் அம்பஷ்டன் என்பவனை பகவன் புத்தரின் உடலில் இந்த 32 இலட்சணங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று பார்பதற்கு அனுப்பினார். அம்பஷ்டன் 30 இலட்சணங்களை தெளிவாக பார்த்தான். ஆனால் இரண்டு இலட்சணங்கள் அவன் கண்களுக்கு புலப்படவில்லை. புத்தர் அவற்றை அவனுக்கு காண்பித்தார். (புத்த பகவன் - தர்மானந்த கோசம்பி பக்கம் 110)
பகவன் புத்தர் அம்பஷ்டனுக்கு காண்பித்ததாக சொல்லப்படுகின்ற அந்த இரண்டு  அங்க அடையாளங்கள்.  ஆண் உறுப்பு மற்றும் நீளமான நாக்கு. முதலில் ஆண் உறுப்பை காண்பித்தார் என்பதை ஏற்க முடியவில்லை. பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி அறிய 32 அங்க அடையாளங்கள் 
d) பகவன் புத்தர் 32 அங்க அடையாளங்கள் கொண்டிருந்தால் பகவன் புத்தரை பிறர் எளிதாக அடையாளம் கண்டிருக்க முடியும் 
அரசன் அஜாதசத்து பகவன் புத்தரை காண சென்ற பொழுது பகவன் புத்தரை அவருடன் இருந்த சீடர்களிடம் இருந்து கண்டறிய முடியவில்லை (D.I,50). 
புக்குசாதி என்ற துறவி பகவன் புத்தரை கண்ட உடனே பகவன் புத்தர் என்று அடையாளம் கண்டிருக்க முடியும். பகவனுடைய அறிவுரையை கேட்டு முடியுந்தருவாயில் தனக்கு தரும போதனை செய்தவர் புத்தர் என்பதை உணரதேவையில்லை.   
03.02 திரு ரைஸ் டேவிட்ஸ் கருத்தை மறுப்பதற்கான காரணங்கள் ( 01.02 )
a) பௌத்த சமய துறவு வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சமண சமய துறவு வாழ்க்கையிலும் தலைமுடி மழிப்பு என்பது முதன்மையானது. பகவன் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் வடிவங்கள் மட்டுமல்லாமல் சமண சமய தீர்த்தங்கரின் சிலைகளும் தலைமுடி மழிக்கபடாமல் அமைக்கப்பட்டிருப்பதால் சிலைகளை அமைக்கும் முறையில் பகவன் புத்தரின் தலைமுடி அமைக்கப்பட்டிருக்கலாம்.
பகவன் புத்தரை தலை முடியுடன் சித்தரித்து இருப்பது வரலாற்று அடிப்படையில் அல்ல, சிற்ப மரபு படியாக இருக்கலாம் என்றுரைக்கிறார் வண. தம்மிக்கா.  வண. S தம்மிக்கா
b) பகவன் புத்தர் எதனை கடைபிடித்தாரோ அதனையே போதித்தார். எனவே தலைமுடியை மழிக்காமல், பிக்குகளுக்கு, பிக்குணிகளுக்கு தலைமுடி  மழிப்பை கட்டாயப்படுத்தி இருக்கமாட்டார்.
c) பகவன் புத்தரின் தலை முடி வலது பக்கம் சுருண்டு அது நெருக்கமாக புத்தரின் தலையில் இட்டிருந்தது  என்றுரைக்கிறார் திரு ரைஸ் டேவிட்ஸ். 
நத்தையின் சுருள் போன்று இருக்கும் தலை முடி தீர்த்தங்கரின் சிலைகளிலும் அமைத்துள்ளது. எனவே சிற்ப மரபு படியாக தலை முடி அமைக்கப்பட்டிருக்கலாம். 
மேலும் பகவன் புத்தரின் தலை முடி இரண்டு வகைகளில் அமைக்கப்பட்டுள்ளது.  ஒன்று நத்தையின் சுருள் போன்று, மற்றொண்டு நீண்ட அலை போன்று ஒரு முடிச்சுடன் காணப்படும் தலை முடி. நீண்ட அலை போன்று ஒரு முடிச்சுடன் காணப்படும் தலை முடியை பெரும்பான்மையானவர்கள்  அது சிற்ப மரபு என்று கூறுகின்றனர்.  
03.03 பொன்மலையில்  புத்தரின் தலை முடி உள்ளது என்ற கருத்தை மறுப்பதற்கான காரணங்கள் ( 01.03 )

பொன்மலையில் உள்ள பாறை பகவன் புத்தரின் தலைமுடியை தாங்கி இருப்பதால் தொங்கும் நிலையில் உள்ளது  (Hanging). இந்த நம்பிக்கை நம் முன்னோர்களின் அறிய அறிவியல் நுட்ப சிந்தனையை அடைய முடியாததால் ஏற்பட்ட நம்பிக்கையே. The Hanging Pillar of Lepakshi Temple

குறிப்புகள் 
01. பகவன் புத்தர் காலத்தில் இருந்த தீண்டமை வேறு தற்பொழுது உள்ள தீண்டமை வேறு (தலித் சமுகத்தின் மீது உள்ள தீண்டமை).