திங்கள், டிசம்பர் 28, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் X பட்டு

பட்டு
அமைவிடம் 
ஊர்                            : பட்டு, மாங்காடு அருகில்
வட்டம்                    : திருபெரும்புதூர் வட்டம் (Sriperumbudur Taluk)
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து 6.50 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது  பட்டு என்னும் கிராமம் அல்லது போரூரில் இருந்து  5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்னும் கிராமத்தில் ஒரு விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், புத்தர் உருவச்சிலையொன்று இருந்தது. இதற்கு அருகில் 200 அடி தொலைவில் தர்மராஜா கோயிலும் இருக்கிறது. இங்கு ஆதியில், புத்தர் கோயிலை அழித்து விநாயகர் கோயிலையும் தர்மராஜா கோயிலையும் கட்டியிருக்க வேண்டும். புத்தர்கோயிலை, விநாயகர் கோயிலாகவும், தர்மராஜர் கோயிலாகவும் அமைப்பது பிற்காலத்து வழக்கம்.   
பட்டு என்னும் கிராமத்தில் விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த புத்தர் உருவச்சிலை சென்னைப் அருங்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது என்றுரைக்கிறார் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற தம் நூலில்.  
தற்பொழுது இச்சிலை  ஆசியவியல் நிறுவனத்தில் (Institute of Asian Studies) உள்ளது. அதன் முகவரி. ஆசியவியல் நிறுவனம், வீர வாஞ்சிநாதன் தெரு, (Prof. S.A. Teacher Training Institute (அ) Jeppiaar Salt pvt Ltd அருகில்)  செம்மண் செரி, சோளிங்கநல்லூர் வட்டம், காஞ்சீவரம் மாவட்டம், http://www.instituteofasianstudies.com/index.html

சிலையமைப்பு   
கை  சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது, முழு தோரணம், பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளது, சிலை உயரம் 2 1/2 அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 13 ஆம் நூற்றாண்டு,


சிலையின்  பின்புறம் 


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக