புதன், ஜனவரி 17, 2018

தமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் அமராவதி சிற்ப தொகுதி

தமிழக தொல்லியல் துறை அமராவதி கலைப்பாணி சிற்ப தொகுதி இரண்டை  சென்னையில் கண்டறிந்தது. இத்துறையால் கண்டறியப்பட்ட முதல் அமராவதி கலைப்பாணி சிற்பம் இராயப்பேட்டை புத்தர் சிலை. இரண்டாவது கண்டறியப்பட்ட சிற்பம் திருவல்லிக்கேணி பௌத்த சிற்பம். இவை பால் நாடு கல்லால் செய்யப்பட்ட சிற்பம்.  இது 3-4 நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள். 

இராயப்பேட்டை

கோவில் அமைவிடம்: பெரிய பாலயத்து அம்மன் கோவில், சீனிவாச பெருமாள் சன்னதி தெரு, கணபதி காலனிஇராயப்பேட்டை, சென்னை 600 014

Dr.D.தயாளன் (தொல்லியல் துறை இயக்குனர்)
இஸ்துபாவின் இரு புறமும் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உயரம் 15 cm (அரை அடி) அகலம் 35 cm  (ஒரு அடி). சிற்பங்கள் தெளிவாக இல்லை. சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியாகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

மகா பண்டிதர் க. அயோத்திதாசர்
அயோத்திதாச பண்டிதர் இலங்கை மலிககந்த விகாரையில்  வண. சுமங்கள மகாநாயக்க அவர்களிடம் பஞ்சசீலம் ஏற்று சென்னையில் 1898ல் இராயப்பேட்டையில் சாக்கிய பௌத்த சங்கம் (SBS) ஒன்றை நிறுவினார். இதன் தலைவராக சிக்காகோவை  சேர்ந்த திரு Dr பால் கரசு (Paul Carsu)ம்   பொது செயலராக பண்டிதரும் இருந்தனர். இங்கு ஒவ்வொரு ஞாயிறும் பௌத்த சங்க கூட்டம் நடைபெறும். ஹொலண்ட், சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை, சியாம், சிங்கப்பூர், பெனாரஸ், புத்தகயா மற்றும் இன்னும் பிற இடங்களில் இருந்து பிக்குகளும் பிறரும் இங்கு அழைக்கப்பட்டு வந்து தங்கியிருந்திருக்கின்றனர். பல சாக்கிய பௌத்த சங்கம் உருவாக்கப்பட்டு அவற்றிக்கு மையமாக சென்னை சாக்கிய பௌத்த சங்கம் செயல்பட்டது.
01. மைசூர் - மாரிக்குப்பம்
02. மைசூர் - பெங்களூரு
03. வடஆற்காடு - திருப்பத்தூர்
04. ஹைட்ரபாத் - செகந்திராபாத்
05. பர்மா - ரங்கூன்
06. தென் ஆப்பிரிக்கா, டர்பன்   (பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி இரண்டு பக்கம் 180 ).    
திருவல்லிக்கேணி
கோவில் அமைவிடம்: 48, எல்லையம்மன் கோவில் (அ) எல்லம்மன் கோவில், சுந்தர மூர்த்தி விநாயகர் (S M V ) கோவில் தெரு, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகில் திருவல்லிக்கேணி, சென்னை 600005. எல்லையம்மன் கோவிலும்  சுந்தர மூர்த்தி விநாயகர்  கோவிலும் ஒரே தெரு முனையின்  இரு பக்கமும் அமைந்துள்ளது.

ஆர். வசந்த கல்யாணி, கல்வெட்டாய்வாளர்,  தமிழக தொல்பொருள் ஆய்வு துறை 
கோவில் புற சுவரில் மாடம் போன்ற ஒரு பகுதியில் பௌத்த சிற்பம் ஒன்றை தமிழக தொல்லியல் துறை கண்டறிந்தது. அந்த சிற்ப தொகுதி அரை அடி அகலமும் ஒன்றரை அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது.
சிலையமையப்பு இச்சிற்பத்தில் ஆடவர் ஆறு பேர் உள்ளனர். முன்னும் பின்னுமாக மூவர் மூவராக வணங்கிய நிலையில் இருவரிசைகளில் காட்டப்பட்டுள்ளனர். தலையில் தடித்த தலைபாகை, காதுகளில் பத்ர குண்டலங்கள், இடையில் இடைகச்சம்,  இடையில் கட்டிய துணி கட்டு இருபுறமும் முழங்கால் வரை தொங்குகின்றது. 
சிற்பகலைப்பாணி சிற்பகலைப்பாணி அமராவதி ஸ்துப சிற்ப கலைப்பாணியை ஒத்ததாகும். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில்  கி. பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக அமைந்திருந்த பௌத்த ஸ்தூபத்தின் சிற்பங்கள் சென்னை அரசு அருங்காட்சியகத்திலும் பாரிஸ் அருங்காட்சியகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அச்சிற்ப தொகுதியில்  ஒன்றாக இது இருக்க வேண்டும். (ஆவணம் இதழ் 7 ஆண்டு 1996 தலைப்பு 51 பக்கம் 187-188 )


கோவில் புற சுவரில் மாடம் போன்ற ஒரு பகுதியை இணைத்து கோவில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மாடம்  போன்று இருப்பதால் சிறிய விநாயகர் சிலையும் பிற பொருள்களை வைக்கும் இடமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.

ஆவணம் இதழ் 7 1996 பக்கம் 187-188 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக