வெள்ளி, ஜூலை 30, 2010

இந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்

புத்தர்

கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார்.

தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்)
தயார் - மகா மாயா (சித்தார்த்த பிறந்த 7ம் நாள் இறந்தார்)

இயற் பெயர் - சித்தார்த்த (பொருள் வீருப்பம் நிறைவேரியவர்)
குடும்ப பெயர் - கௌதமர்
குலப் பெயர் - சாக்கியர்

மகாமாயாவின் மறைவினால் சுத்தோதனர் மகாமாயாவின் தங்கை மகா பிரஜாபதியை மணந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் நந்தா. நந்தா சித்தார்த்தவின் இளைய தம்பி. அத்தை மகன் தேவதத்தன்.

8 வயதில் கல்வியை தொடங்கினர். 16ம் வயதில் ஒத்த வயதுடைய மாமன் மகளான யசோதரையை மணந்தார். 20 வயதில் சக்கிய சங்கத்தில் ஊறுப்பினரானார். 28 வயது அடைந்த போது பெரும் மோதல் நீகழ்ந்து விட்டது. துறவு மேற்கொண்ட போது அவருக்கு வயது 29 , ஓர் ஆண் குழந்தை இராகுலன் பிறந்து இருந்தது. கபில வசதுவில் இருந்த பரத்வாஜரிடம் துறவு ஏற்றார்.

கபில வசதுவை விட்டு மகத நாட்டின் தலைநகரான இராஜகிரகத்தை 400 மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

நிலையான வசிபிடத்தை வைத்துக்கொள்ளாமல் ஒரு மரத்தின் நிழல் அல்லது தனிமையான குகையிலேயே தங்கினர். வெறுங்காளோடும் வெறுந்தலையோடும் பல மைல்கள் நடந்தே சென்றார். தலையையும், முகத்தையும் மழித்துக்கொண்டும், உணவு ஏற்பத்ற்கு ஒரு பாத்திரமும் ஊடலை மறைக்க போதுமான உடையுடன் பல அறிஞர்களை நோக்கி நடந்தார்.

தவ முறை, பக்தி முயற்சி, யாக முயற்சி இவற்றை தேர்ந்து எடுக்கவில்லை. வைசாலியில் உள்ள ஆராதகலாம் என்பவரிடம் தியான மார்க்கத்தின் 7 நிலைகளையும் நன்கு கற்று அறிந்தார். உத்தக ராமபுத்தகர் என்பவரிடம் தியான மார்க்கத்தின் 8 நிலையை கற்று அறிந்தார். கொண்டண்ண, பத்திய, வாப்பா, மகா நாமா, அச்சாசி என்ற 5 துறவிகளுடன் சேர்ந்து கயாவில் உள்ள நிரஞ்சனை ஆற்றங்கரையில் உடலை வருத்தி கடும் வீரத முயற்சியில் ஈடுபட்டார்.

வாழ்வின் உண்மைத் தன்மையை அவர்களால் விளக்க இயலவில்லை என்பதால் உண்மையை உணரத் தாமே முயற்சி செய்ய முடிவேடுத்தார். எனவே கடும் வீரத முயற்சியை சுஜாதா என்ற பெண் கொண்டுவந்த ஊணவை பெற்றுக்கொண்டு வீரதத்தை முடித்துக்கொண்டார்.

தம்முடைய 35 வயதில் புத்தரானார். இது வரை 25 புத்தர்கள் தோன்றினார்கள். அவர்களில் கடைசியாக வந்தவர் கௌதம புத்தர். தமது 80 வது வயதில் கி. மு 483ல் குசி நகரில் (பீகார் உத்தர பிரதேஷ்) நிர்வான மோட்சம் அடைந்தார்.

சைன சமயத்தின் நிறுவனரான
வர்த்தமான மகாவீரர்
ஆசிவக மதத்தின் நிறுவனரான
கோசலி மக்கலி என்பவரும் புத்தர் காலத்திலேயே வாழ்ந்து
இருக்கிறார்கள்.

இயல்பு

01 . புத்தராய் ஆவதற்கு முன் 10 வாழ்வுகளில் போதி சத்துவராக இருந்தாக வேண்டும்.

02 . ஆண், பெண், அரசன், செல்வந்தர், வறியவர், கொள்ளையர் என எந்த சிறு வேறுபாடும் பாராட்டாமல் அனைத்து வகுப்பர்க்கும் அவருடைய போதனைகளை தொடர்ந்து 45 ஆண்டுகள் அளித்தார். தீண்டாமை, சாதி, உயர்வு, தாழ்வு என்பது ஏதும் இல்லை.

03 . முன் மாதிரியாக வாழ்ந்தார். தாம் கடைபிடித்தவையே போதித்தார், போதித்தவையே கடைபிடித்ததார்.

04 . புத்தர் பிறரை போன்று இயல்பன மனிதர் என்பதற்கு மேலான எதையும் அவர் கோரவில்லை. அவரை கடவுள் அல்லது இறைதூதர் என வருணிக்கப்படுவதையும் மறுத்தார்.

05 . புத்தரின் போதனைகள் அனைத்தும் அவருடைய புதியகண்டுபிடிப்பேயாகும். அனைத்தும் விஞ்ஞான தன்மை
உடையவை. அவற்றில் அதிசயங்கள் விசிதிரங்கள் ஏதும் இல்லை. இயற்கை மீறிய சக்தி (தெய்விகம்) இருப்பாதகவும் கூறவில்லை.

௦06 . புத்தர் ஒருவரே மோட்சம் அளிப்பதாக உறுதிமொழி எதையும் அளிக்காத போதகர். தானே தனக்கு பாதுகாவலன், ஒருவனை மற்றவன் காக்க இயலாது.

07. தம் சமயத்தில் தனக்கு என இடத்தை வைத்துக்கொள்ள புத்தர் முனையவில்லை. தன் சமயத்துக்கு வெளியிலேயே தன்னை நிறுத்திக்கொண்டர்.
08 . தம்மீது உள்ள மதிப்பின் காரணமாக மட்டும் அவருடைய போதனைகளை ஏற்றுக்கொள்ளகூடாது என முழு சிந்தனை சுதந்திரத்தை அளித்தார். இயற்கை மீறிய சக்திகளின் பால் கொள்ளும் அச்சத்தை அகற்றவும், குருட்டு நம்பிக்கைகளை நிராகரிக்கவும், உள்ளதை உள்ளவாறு அறிய சிந்தனை சுதந்திரத்தை வழங்கி தர்க்கத்தை ஊக்குவித்தார்.

09 . உண்மைகளை உணர்ந்துக்கொள்ள போதனைகள் புத்தரிடமிருந்து வருகிறதா அல்லது வேறு ஒருவரிடமிருந்து வருகிறதா என்று பார்க்கக் கூடாது. அப்போதனைகளில் உண்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும்

10 . குறைகள் அற்றவை என ஏதுமில்லை. இறுதியானது என ஏதுமில்லை. மறுபரிசிலனைக்கும் மறுபரிசோதனைக்கும் உரியவை. உண்மையை அறிய கருத்து சுதந்திரம் வேண்டும். யாரும் கேள்விகளால் பரிசிலிக்கவும் எவ்வளவு தூரம் அதில் உண்மையுள்ளது என்று அறிய கூடிய வகையில் அவருடைய போதனைகள் வெளிப்படையாக மக்கள் நன்கு அறிந்த அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய் மொழியிலேயே அளிக்கப்பட்டது.

11 . வந்து நம்புங்கள் (Come and Believe) என்று இல்லாமல், புத்தரின் போதனைகள் புரிதல் மற்றும் கண்டுணர்தல் இவற்றை அடிப்படையாக கொண்டவை (Come and See).

நம்பிக்கை என்பதில் கண்டுணர்தல் என்பது இல்லை. அறிவு என்பது முதுமை போன்று ஒருவர் விரும்பினாலும் விரும்பிபாவிட்டாலும் அவரை வந்து அடையும் ஒரு பொருள் அல்ல.

அறிவை பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும்.

எனென்றால் ஐயம் ஐயமில்லை என்றால் ஆய்வு நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவு வளராது.

புரிந்துணர்தல் இல்லாமல் ஒருவரை சந்தேகம் கொள்ளக் கூடாது என்று சொல்லுவதும் அப்படியே ஏற்க்க வேண்டும் என கட்டாயப்படுதுவதும் அறிவுடமையாகாது.

எனவேதான் புத்தர் இறக்கும் தருவாயிலும் பிக்குகளிடம் ஐயம் இருக்குமாயின் கேட்கும் படி பல முறை கேட்டுக்கொண்டார்.

12 . புத்தர் தன்னிடம் கேட்கப்பட்ட எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்கவில்லை. உத்தேசமான வினாக்களுக்கு விடை தேடுவதை விட அவசியமானதுயாதுவெனில் உண்மையான பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றிற்கான சரியான தீர்வை காண்பதே என்பதால் மாலுங்யாபுத்த என்பவருடைய 10 வினாக்களுக்கு விடை அளிக்கவில்லை.

13 . வேள்வி செய்வது - கடவுளுக்கு அர்பணம் செய்வது - பேய் பிசாசு விரட்டுதல்- ஜாதகம் கணித்தல் - நல்ல நாள் குறித்தல் இவைகளில் இருந்து புத்தர் விலகி இருந்தார்.

14 . புத்தர் பௌத்தர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல. புத்தருக்கு பின் வந்த எல்லா மதங்களும் பல நல்ல கருத்துகளை புத்தரிடம் இருந்து பெற்றுக்கொன்டுள்ளது. அனைவருக்கும் பொருந்தும் நெறிமுறைகள் புத்தருக்கு முன் இந்தியாவில் எந்த மதமும் வரைந்தது இல்லை.

15 . தம் கோட்பாட்டை போன்று பிற மத கோட்பாட்டுக்கும் மதித்தது மட்டும் அல்லாமல் ஒருபோதும் கடிந்தது (Condemn) இல்லை. தவறுதலாக கூட ஒருபோதும் கனிவற்ற வார்த்தைகள் அவர் உதடுகள் உச்சரித்து இல்லை, கோபத்தில் கொதித்ததும் இல்லை.

16 . மனித வரலாற்றில் முதன் முறையாக உயிர்களை பலி இடுதல் கூடாது, காணிக்கை அளிக்கக்கூடாது என மக்களிடம் முறையிட்டார். பௌத்தத்தில் வழிபடுதல் என்பது ஏதும் இல்லை மாறாக மரியாதையை செலுத்துவதாகவே உள்ளது.

17 . பெண்களுக்கான முதல் சமய மரபை நிறுவினவர்- அடிமை முறையை முதன் முறையாக அகற்றுவதர்க்கு முயற்சித்தவர்.

18 . கடவுளின் உதவி ஏதும் இன்றி மனிதன் தன் வாழ்நாளில் தாமே விடுதலை (முக்தி) அடையமுடியும் என முதன் முதலில் உரைத்தவர் புத்தர்.

தம்மம்
01 . புத்தரின் போதனைகள் தம்மம் என அழைக்கப்படுகிறது. தம்மம் அனுமானத்தை அடிப்படையாக கொண்டது இல்லை. இது காரண காரியத்தை (Cause and Effect) அடிப்படையாக கொண்டது.

02. பௌத்ததில் நம்பிக்கை, புனிதம், பாவம், சொர்க்கம், நரகம் என்பது இல்லை.

03 . புத்தரின் போதனைகள் விரக்தி தத்துவமோ அல்லது களிப்பு தத்துவமோ அல்ல மாறாக நடுநிலையானது

04 . புத்தரின் போதனைகள் மனித வாழ்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை துன்பத்தின் இருப்பிடத்தை அறியவும் அவற்றை நீக்கும் வழியைக் கூறுவதாகவும் உள்ளது.

05 . அவருடைய போதனைகள் கடவுள் மற்றும் ஆன்மாவோடு எந்தத் தொடர்பும் இல்லாததாய் இருக்கிறது.

06 . அவருடைய போதனைகள் இறப்புக்கு பின்னான வாழ்க்கையோடு எந்தத் தொடர்பும் இல்லாததாய் இருக்கிறது. இங்கு வாழும் வாழ்க்கைக்கே உரியது.

07 . சடங்குகள், சம்பிரதாயங்கள் எதையும் அவருடைய தம்மம் பொருட்படுத்துவாதயில்லை .

08. அவருடைய போதனைகள் பல பிற மதங்களில் பின்பற்றபடுகின்றன

I )
a ) இந்து மதம் வேள்விகளில் உயிர் கொலைகளை நீக்கி மாமிச
உணவை நீறுத்தி சைவ உணவை ஏற்கத் தொடங்கியது.
b ) அரச மர வணக்கத்தை ஏற்றுக்கொண்டது
c ) பௌத்த மடங்களை பின்பற்றி இந்து மதத்தினர் மடங்களை
அமைத்தது
d ) சங்கரர் சூனியவாத பெளத்தத்தின்று மாயாவாத கருத்தினை
பெற்றுக்கொண்டார்

II ) புத்தர் புதுப்பித்தவை
a ) கர்மா கோட்பாட்டை புதிய கம்மா என்றும்
b ) கூடு விட்டு கூடு பாய்தல் கோட்பாட்டை புது பிறப்பு என்றும்
c ) ஆன்மாவின் மோட்சம் என்ற கோட்பாட்டை நிப்பணம்
என்றும் புதுப்பித்தார்

III ) புத்தர் மிகச் சிறந்தவையாக அப்படியே ஏற்றுக்கொண்டது
கபிலரின் சாங்கிய தத்துவமே. இது காரண காரியத்தை ( Cause
and Effect) அடிப்படையாகக் கொண்டது.

"உலகம் எக்கலாத்திலும் அறிந்துள்ள
ஒழுக்க கோட்பாடுகளில் முழு நிறைவனது
 புத்தரின் கோட்பாடகும்"  பேராசிரியர் மாக்ஸ் முல்லர்

வியாழன், ஜூலை 08, 2010

அறிவர் அண்ணல் அம்பேத்கர்

எவ்வளவு அறிவு சிந்தனையும், கல்வி அறிவும் கொண்டு சமுக புரட்சி செய்து இருந்தாலும், புராணத்திற்கும், முடநம்பிக்கைக்கும் முக்கியத்துவம் அளிபவர்கள் சமுக புரட்சிக்கு, அறிவுசிந்தனைக்கு மதிப்பு அளிப்பது இல்லை.


அறிவாளிகள், நற்குணம் உடைவர்கள் என எந்த ஒரு சாதியையும், மதத்தினரையும், மொழி பேசுபவர்களையும், நாட்டவர்களையும் சொல்ல முடியாது


அறிவர் அண்ணல் அம்பேத்கர்ரை குறை சொல்பவர்கள்,அவறுடன் ஒப்பிட்டு சமுக புரட்சி செய்தவர்கள் யார் யார்? எவ்வாறு என்று சொல்லுங்கள்.

மெத்த படித்த பலர் இருந்தாலும், அரசியல் சட்டம் எழுத முடியவில்லை. இந்து சட்டம் ஒன்றை எழுத, மெத்த படித்த பலர் இருந்தாலும் அதை ஆங்கிலேயன் எழுதி விட்டு சென்றான்.

பெண் கல்வி, சொத்து உரிமை, மறுமணம், கோவில் செல்ல அனுமதி போன்ற பல சமுக உயர்வுக்கு (சமத்துவம்) இவற்றுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்களை (புத்தர், மகாத்மா ஜோதிப புலே, அண்ணல் அம்பேத்கர், மற்றும் பலர்) சாதி மதம் மொழி என பிரித்து பார்த்து, பிறப்பின் அடிபடையில் மரியாதை அளிக்காமல், செயல் அடிபடையில் மரியாதை அளியுங்கள்.

எந்த சாமியாராவது பெண் கல்வி, சொத்து உரிமை, மறுமணம் பற்றி சீரிய சிந்தனை போதித்தனறா.

கல்வி கடவுள் என சொல்லப்படும் சரஸ்வதி கூட
-கல்வி (அறிவு) முக்கியத்தை பற்றி ஏதும் வாய் திருந்தது இல்லை
-பெண் கல்வி பற்றி நீனைததும் இல்லை
-கல்வி கடவுள் என சொல்லபடாத கடவுள், புனிதம் என சொல்லப்படும் "பகவத் கீதை" அளிக்கும் போது, ஏன் இந்த கல்வி கடவுள் என சொல்லப்படும் சரஸ்வதியால் கொடுக்கமுடிவல்லை?

இக்கல்வி கடவுள் சரஸ்வதியால் எப்படி பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். இதை போன்று செல்வக்கடவுள் என சொல்லப்படும் இலட்சுமியால் எப்படி பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

அறிவர் அண்ணல் அம்பேத்கர்ரை குறை சொல்பவர்கள், அவரால் அனுபவிப்பதை பெற மறுபிர்களா. உங்கள் பெண் குழந்தைகளுக்கு கல்வி, சொத்து உரிமை, கோவில் செல்ல மறுபிர்களா?

இந்தியாவின் மே தின தந்தை

                   இந்தியாவின் முதல் தொழிலாளர் நல அமைச்சர்
                        [1942  பிரிட்டிஷ் வைசிராய் கவுன்சில்]

          இந்தியாவின் தொழிலாளர் - அரசு  உழியர்களின் சட்ட பாதுகாப்பின் தோழர்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் - M.A., Ph.D., M.Sc., D.Sc., L.L.D., D.Litt, BAR-AT-LAW



1942ம் ஆண்டு பிரிட்டிஷ் வைஸ்ராய் மாண்புமிகு லின்லித்தோ பிரபுவின் அமைச்சரவையில் முதல் தொழிலாளர் நல அம்மைச்சரக "இந்தியாவின் தொழிலாளர்கள் - அரசு உழியர்களின் சட்ட பாதுகாப்பு தோழராக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜூலை 20ம் தேதி பதவியேற்றார் .


1880ல் ஐரோப்பா, வட, தென் அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரிய ஆகிய நாடுகளில் முதல் முறையாக 8 மணி நேர வேலை வேண்டி பாட்டாளி வர்க்கம் வேலை நிறுதத்தை ஆரம்பித்தது. 1888ல் ஜப்பானிலும் 1885ல் ரஷ்யாவிலும் 1886ல் பிரான்சிலும் வேலை நிறுத்தமும் ஆரம்பித்தனர். 1886ல் சிக்காகோ நகரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி 8 மணி நேரம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போதிருந்த அமெரிக்க முதலாளிகள் கூட்டம் அரசின் துணையோடு காவல் துறையை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டு கொல்லபட்டர்கள்.  இரத்த ஆறு வெள்ளமென ஓடியது. அந்நிகழ்வில் இன்று வரையில் அங்கு எத்தனை தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற விவரம் உலகிற்கு புரியாத புதிராகும். அதன் பின்னர் 1888ல் லண்டனில் கூடிய சர்வதேச காங்கிரஸ் மகா சபை மே தினத்தை சர்வதேச தொழிலாளர்களின்   போரட்ட தினமாக கருத வேண்டுமென தீர்மானம் நீறைவேற்றியது.  1891ல்  மே தினம் அதிகரபூர்வமாக சர்வதேச தொழிலாளர் இயக்கதின்  நினைவு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 1917ல் ரஷியாவில் அக்டோபர் புரட்சிக்கு பின் மே தினம் அதிகரபூர்வமான தேசிய விடுமுறையாக அறிவிக்கபட்டது.


ஆனால் அதிகபடியாக எந்தவகையான போராட்டமும், உயிர் இழப்புகளும் இன்றி, ஒரு சொட்டு இரதம் கூட சிந்தாமல், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய தொழிலாளர்களின் அரசாங்க கூட்டத்தில் மத்திய மாநிய அரசுகளின் சார்பாக 8 மணி நேர வேலையை பெற்றுத்தந்தார்கள்.


அப்போது 8 மணி நேர வேலைகோப்பில் கையெழுத்து இட்டுவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வருகின்றபோது அந்த அலுவலகத்தை விட்டு வெளிய வருகின்ற போது அந்த அலுவலகத்தின் 18 படிகளிலும் 18 தொழிலாளர்கள் குப்புர படுத்துகொண்டு இருந்தார்கள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் உதவியாளர் திரு நானக் சந்த்ரட்டுவை அழைத்து வினவிய போது, நமது நாட்டிற்கு அருகில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்தல் தோழர். சுப்பையா அவர்களது தலமையில் 8 மணி நேர வேலை வேண்டி நடத்திய போரட்டத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் 8 மணி நேர வேலை வாங்கித்தந்த அண்ணலுக்கு  நன்றி கடன் செலுத்தும் வகையில் அண்ணலுடைய காலால் எங்கள் முதுகுமீது நடந்து செல்லவேண்டும் என
தொழிலாளர்கள்  கூறி படுத்து கொண்டு இருகிறறார்களம் என உதவியாளர் கூறினார். அப்போது அண்ணல் அவர்கள் இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்று கூறி, அவர்களை எழுந்திருக்க வைத்து பின் அண்ணல் அவர்கள் வீடு திரும்பினர்கள்.


மேற்கண்ட 8  மணி நேர வேலையை பெற்றுத் தந்த பிறகு.

1.  வேலைக்கு உத்தரவதம்

2 . சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு விடுமுறை

3 . தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் குறித்த சட்டம் (Trade Union Act)

4. தொழிலாளர்கள் வீபத்துகாலங்களில் விடுப்பு யிடுதல் (Medical Leave)

5 . தொழிற்சங்க கூட்டங்களில் கலந்துகொண்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

6. பெண் ஊழியர்களுக்கு மகப்பெறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Maternity Benefit Act)

7. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு

8.ஊழியர்களின் வீடுப்புகளை சேர்த்து அதனை பணப்பயனாக மற்றிகொள்ளும்   ஈட்டிய விடுப்பு ( Earned Leave)

9. அலுவலக நேரம் போக மிகுதி நேரம் பணிபுரிந்தால் அதற்க்கு தனிச்சம்பளம் வழங்குதல் (Over Time OT)

போன்றதொழிலாளர் நலச்சட்டங்களை இந்திய திருநாட்டில் கொண்டுவந்த மாமேதை தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

1942ல் ஆகஸ்ட் மதம் 7 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் டெல்லியில், முதலாளி-தொழிலாளிகளின் இணைப்பு மாநாடு நடத்தி தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும், தத்தமது பிரச்சனைகளை நேரிலே சந்தித்து ஊரையாடி சமரசம் (Conciliation) செய்துகொள்ள வழிவகை கண்டார். அந்த நடைமுறைகள் தான் இன்றும் தொழிலாளர் நல துறையில் பிரதான பணியாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அதன் பின்னேர் 1946ல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை (Minimum Wages Act) தாக்கல் செய்து  குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948ல் நடைமுறைக்கு வர ஊழைத்த உத்தமராவார்.


1945ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி மத்திய தொழிலாளர் நல  ஆணையர் (Central Labour Commissioner) என்ற புதிய பதவியினை ஏற்படுத்தி தொழிலாளர்களின் நலனை பாதுகாத்த மாபெரும் மகான் ஆவார்.

ஆகவே   இந்தியாவின் மே தினத்தையும், தொழிலாளர்கள் - அரசு ஊழியர்களின் சட்டபாதுகாப்பு தோழராகவும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அன்றும் இன்றும் என்றும் உள்ளார்.

  G . ஆறுமுகம் B.Sc., M.A., B.L.,