செவ்வாய், டிசம்பர் 03, 2019

பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 



பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1
பகுதி 1 சாதி பற்றியவை
01. இந்தியாவில் சாதிகள்
02.சாதி ஒழிப்பு
பகுதி 2 மொழிவாரி மாகாணங்கள் குறித்து 
01. மொழிவரி மாகாணமாக மகாராட்டினம்
02. வரைமுறை தராத நிர்ணய அவசியம்
03. மொழிவாரி மாகாணங்கள் பற்றிய சிந்தனைகள்  
பகுதி 3 வீரரும் வீர வழிபாடும்
ரானடே, காந்தி, ஜின்னா
பகுதி 1  அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தம் பற்றியவை
01. சவுத்பரோ குழுவின் முன் அளித்த சாட்சியம்
02. கூட்டாச்சியா, சுதந்திரமா
03. சமூகத்தடையும் அதை தீர்க்கும் வழியும்
04. மாநிலங்களும் சிறுபான்மையினரும்     
பகுதி 2  பொருளாதார பிரசனைகள் குறித்து
01. இந்தியாவில் சிறு நிலவுடமைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்
02. திரு ரஸ்ஸலும் சமுதாய மறுசீரமைப்பும்
பம்பாய் சட்ட மன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் 

டாக்டர் அம்பேத்கர் சைமன் குழுவுடன் (இந்திய சட்டப்படியான குழு 

வட்ட மேசை மாநாடுகளில் டாக்டர் அம்பேத்கர் 
பகுதி 1 இந்துமத தத்துவம் 

பகுதி 2 இந்தியாவும் பொதுவுடமைக்கான முற்பட்டு தேவைகளும்
01இந்து சமூக அமைப்பு அதன் இன்றியமையாக் கோட்பாடுகள்
02. இந்து சமூக அமைப்பு அதன் தனித்தன்மைகள்
03. இந்து மதத்தின் அடையாளங்கள் 
பகுதி 1 பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும்
01. மறைவிலிருந்து வெளிப்பட்ட பண்டைய இந்தியா
02. பண்டைய அமைப்பு முறை ஆரிய சமூகத்தின்  நிலை
03. மதிப்பிழந்து போன புரோகித தொழில்
04. சீர்திருத்தகாரர்களும் அவர்களுக்கு நேர்ந்த கதியும்
05. பௌத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும்
06. பிராமணிய இலக்கியம்
07.  பிராமணியத்தின் வெற்றி
08. குடும்ப ஒழுக்க நெறிகள்
09. பகவத் கீதை பற்றிய கட்டுரைகள் -எதிர்புரட்சிக்குத் தத்துவ அடிப்படையில் பாதுகாப்பு :கிருஷ்ணனும் கீதையும்
10. விராட பருவம் மற்றும் உத்தியோக பருவம் பற்றிய பகுப்பாய்வு குறிப்புகள்: விராட பருவம் 
11. பிராமணர்கள் சத்திரியர்கள் போராட்டம்
12. சூத்திரர்களும் எதிர் புரட்சியும்
13. மகளிரும் எதிர் புரட்சியும் 
பகுதி 2 
புத்தரா காரல் மார்க்ஸா 
பகுதி 3
புத்தகங்களுக்கான திட்டங்கள் 
இந்து மதத்தில் புதிர்கள் 
01. முன்னுரை
02. ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு
03. வேதங்களின் தோற்றம் - பிராமணிய விளக்கம் அல்லது சுற்றி வளைத்து பேசும் தந்திரம்
04. வேதங்களின் தோற்றம் பற்றி மற்ற சாத்திரங்களின் சான்று
05. பிராமணர்கள் திடீர் என்று வேதங்கள் பொய்யாதவை என்றும் கேள்விகேட்கக் கூடாதவை என்றும் ஏன் அறிவிக்கிறார்கள்
06. பிராமணர்கள் அதற்க்கு மேலும் சென்று வேதங்கள் மனிதராலோ கடவுளாலோ படைக்கப்படாதவை என்று ஏன் அறிவித்தார்கள்
07. வேதங்களின் உள்ளடக்கம் அவை அறநெறி அல்லது ஆன்மிகப் பண்புகொண்டவையா
08. தலைகீழ் மாற்றம் அல்லது பிராமணர்கள் வேதங்களை தங்களுடைய மிகத்தாழ்ந்த சாஸ்திரங்களும் தாழ்ந்தவையாக எவ்வாறு அறிவித்தார்கள்
09. உபநிடதங்கள் எவ்வாறு வேதங்கள் மீது போர் தொடுத்தன
10. உபநிடதங்கள் எவ்வாறு வேதங்களுக்கு கீழ்ப்பட்டவையாக ஆக்கப்பட்டன
11. பிராமணர்கள் இந்து கடவுளர்களை ஒருவருடன் ஒருவர் ஏன் சண்டையிட செய்தார்கள்
12. இந்து கடவுளர்களை பிராமணர்கள் ஏன் எழுச்சியும் வீழ்ச்சியும் பெற செய்தார்கள்
13. பிராமணர்கள் ஏன் கடவுள்களை அரியணையிலிருந்து இறக்கிவிட்டு பெண் தெய்வங்களை அரியணையில் அமர்த்தினார்கள்.
14. அகிம்சை என்ற புதிர்
15. அகிம்சையிலிருந்து மீண்டும் இம்சைக்கு
16. பிராமணர் எப்படி ஓர் அகிம்சை கடவுளை இரத்த வெறிகொண்ட பெண் தெய்வத்திற்கு மனம் செய்வித்தார்கள்
17. பின் இணைப்பு I வேதங்கள் குறித்து புதிர்
18. பின் இணைப்பு II வேதாந்தம் பற்றிய புதிர்
19. பின் இணைப்பு III திரிமூர்த்தி சம்மந்தமான புதிர்
20. பின் இணைப்பு IV இஸ்மார்த்த தர்மமும் தாந்திரிக தர்மமும்
21. பின் இணைப்பு V வேதங்களின் பொய்யாமை
22. நான்கு வருணங்கள் - பிராமணர்கள் இவற்றின் தோற்றத்தை பற்றி உறுதியாக கூறுகிறீர்களா
23. நான்கு ஆசிரமங்கள் - இவை ஏன் எப்படி தோன்றின
24. மனுவின் பைத்தியம் அல்லது கலப்பு சாதிகள் பற்றிய பிராமண விளக்கம்
25. தந்தை வழியிலிருந்து தாய் வழிக்கு மாற்றம் பிராமணர்கள் இதன் மூலம் என்ன ஆதாயம் பெற விரும்பினார்கள்
26. கலிவர்ஜயா அல்லது பாவத்தை பாவம் என்று கூறாமல் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் பிரமணியக்கலை
27. பின் இணைப்பு I வர்ணாசிரம தர்மத்தின் புதிர்
28. பின் இணைப்பு II கட்டாய திருமணம்
29. மன்வந்தரக் கோட்பாடு
30. பிரமம் என்பது தம்மம் அல்ல பிரம்மத்தால் என்ன பயன்
31. கலியுகம் பிரமணர்கள் ஏன் அதை முடிவற்றதாக செய்தார்கள்
32. கலியுகம் குறித்த புதிர்
33. பின்னிணைப்பு - இராமன் கிருஷ்ணன் பற்றிய புதிர்
பகுதி 1  
தீண்டப்படாதவர்கள் அல்லது இந்தியச் சேரிகளின் குழந்தைகள் 
பிரிவு 1 தீண்டப்படாதவர்கள் என்ற நிலைமையின் கொடுமைகள்
இயல் 1 - தீண்டாமை அதன் மூல ஊற்று
இயல் 2 - தீண்டாதோர் அவர்களின் எண்ணிக்கை
இயல் 3 - அடிமைகளும் தீண்டாதோரும்
இயல் 4 - இந்திய சேரி தீண்டாமையின் மையம்
இயல் 5 - மனித உறவுக்கு தகுதியற்றவர்கள் 
பிரிவு 2
இயல் 6 - தீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும்
இயல் 7 - சட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டபூர்வமாகின்றன   
பிரிவு 3 - பிரச்சனையின் மூலங்கள்  
இயல் 8 - இணையான வழக்குகள்
இயல் 9 - இந்துக்களும் பொது மனசாட்சி இல்லாமையும்
இயல் 10 - இந்துக்களும் அவர்களது சமூக உணர்வற்ற தன்மையும்
இயல் 11 - இந்துக்களும் சாதியில் அவர்களது நம்பிக்கையும் 
பிரிவு 4 -தீண்டத்தவர்கள் எதிர்கொள்ள வேண்டிருப்பவை 
இயல் 12 - நிர்வாகத்தின் எதிர்ப்பு  நிலை
இயல் 13 - பாரபட்ச பிரச்சனை
இயல் 14 - தனிமை பட்டு நிற்கும்  பிரச்சனை 
பகுதி 2  சமூகம் 
இயல் 15 - நாகரிகமா கொடுங்குற்றமா இயல் 16 - இந்துக்கள் கட்டிய வீடு
இயல் 17 - இந்து சமுதாயத்தின் அடிக்கல்
இயல் 18 - தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக தீண்டத்தக்கவர்கள்
இயல் 19 - சாதியின் சாபக்கேடு

பகுதி 3  அரசியல் 
இயல் 20-பல இலட்சங்களில் இருந்து பின்னத்துக்கு
இயல் 21 - தீண்டத்தவர்களின் எழுச்சி
இயல் 22 - இக்கட்டான நிலைகள்
இயல் 23 - அவர்களுடைய விருப்பாங்களே எமக்கு சட்டங்கள்
இயல் 24 - திருவாளர் காந்தியின் சமுதாய நோக்கு
இயல் 25 - காந்தியும் அவரது உண்ணாவிரதமும்
 இயல் 26 - தாழ்த்தபட்ட மக்களுக்கு ஓர் எச்சரிக்கை 

பகுதி 4  சமயம்  
இயல் 27 - இந்துக்களிடமிருந்து விலகி செல்லுதல்
இயல் 28 - சாதியம் மதமாற்றமும்
இயல் 29 - தீண்டப்படாதர்களை கிறித்துவர்களாக்குவது
இயல் 30 - சமயம் மாறியவர்களின் நிலை





பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 11
நூல் 1
கிழக்கிந்த கம்பெனியின் நிர்வாகத்துறையும் நிதித்துறையும் 
நூல் 2
பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதி ஆதாரங்களின் பரிமாண வளர்ச்சி ஆசிரியரின் முன்னுரை
பேராசிரியர் எட்வின் ஆர்.ஏ செலிக்மானின்  அணிந்துரை
முகவுரை - பொருளின் விளக்கமும் சுருக்கமும் 
பகுதி 1 மாகாண நிதி அமைப்பு :அதன் தோற்றுவாய் 
1 ஏகாதிபத்திய முறை : அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2 ஏகாதிபத்தியமும் சமஸ்டி அமைப்பும்
3 உடன்படிக்கை - ஏகாதிபத்திய நிர்வாக அமைப்பு இல்லாத ஏகாதிபத்திய நிதி அமைப்பு 
பகுதி II மாகாண நிதி அமைப்புபும் அதன் வளர்ச்சியும் 
4 ஒதுக்கீடுகளின் மூலம் பட்ஜெட்
5 ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய்களின் அடிப்படையில் அமைந்த பட்ஜெட்டுகள்
6 பகிர்வு வரி வருவாய்களினால் ஆனா பட்ஜெட் 
பகுதி III மாகாண நிதி :  அதன் செயல் அமைப்பு 
7 மாகாண நிதிகளின் வரையறைகள்
8 மாகாண நிதியின் இயல்பு
9 மாகாண நிதியின் செயல் பரப்பை விரிவு படுத்துதல் 
பகுதி IV இந்திய அரசின் 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் மாகாண நிதி  
10 மாற்றத்திற்கான அவசியம்
11 மாற்றத்தின் இயல்பு
12 மாற்றம் ஒரு திறனாய்வு குறிப்பு 
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 12
இந்திய செலாவணி, வங்கித்தொழிலின் வரலாறு
01. இரட்டை உலோக நாணய மதிப்பிலிருந்து வெள்ளி நாணய மதிப்பீட்டிற்கு
02. வெள்ளி நாணய மதிப்பும் அதன் நாணய சம மதிப்பில் குலைவும்
03. வெள்ளி நாணய மதிப்பும் அதன் நிலையற்ற தன்மையின் தீங்குகளும்
04. தங்க திட்டத்திற்கு வழிகோலல்
05. தங்க திட்டத்திலிருந்து தங்க மாற்று திட்டத்திற்கு
06. செலாவணி மாற்று திட்டத்தின் நிலைத்தன்மை
07. தங்க நாணய மதிப்பிற்கு திரும்பி வருதல்

பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13
சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ ஆரிய சமூகத்தில் நான்காம் வருணத்தவர் ஆனார்கள்
01. சூத்திரர்களை பற்றிய புதிர்
02. சூத்திரர்கள் தோற்றம் பற்றிய பிராமணியக் கொள்கை
03. சூத்திரர்களின் நிலை பற்றிய  பிராமணியக் கொள்கை
04. சூத்திரர்களுக்கு எதிராக ஆரியர்கள்
05. ஆரியர்களுக்கு எதிராக ஆரியர்கள்
06. சூத்திரர்களும் தாசர்களும்
07. சூத்திரர் என்போர் யார்
08. வருணங்களின் எண்ணிக்கை மூன்றா (அ) நான்கா
09. பிராமணர்களுக்கு எதிராக சூத்திரர்கள்
10. சூத்திரர்கள் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுத்தல்
11. சமரசத்தின் கதை
12. உரைக்கல்லில்   சோதிக்கப்படும் கோட்பாடு   
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 14
தீண்டப்படாதர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர் ஆயினர்?
  
பகுதி 1 ஓர் ஒப்பு நோக்காய்வு
01. இந்துக்கள் அல்லதவர்களிடையே தீண்டாமை
02. இந்துக்களிடையே தீண்டாமை
 பகுதி 2 வாழ்விடம் பற்றிய சிக்கல்
03. தீண்டப்படாதர்கள் கிராமத்திற்கு வெளியே வசிப்பது ஏன்?
04. தீண்டப்படாதர்கள்  சிதறுண்ட பிரிவினரா?
05. இது போன்று வேறு எங்கேயானும் நடைபெற்று இருக்கின்றனவா?
06. சிதறுண்ட பிரிவினரின் குடியேற்றங்கள் ஏனைய இடங்களில் எவ்வாறு மறைந்தன 
பகுதி 3 தீண்டாமையின் தோற்றம் பற்றிய பழைய கோட்பாடுகள்
07. தீண்டாமையின் தொற்றுவாயாக இன வேறுபாடு
08. தீண்டாமையின் தொழில்ரிதிலானா மரபு மூலம் 
பகுதி 4 தீண்டாமையின் தோற்றம் பற்றிய பழைய கோட்பாடுகள் 
09.  பௌத்தர்களின்பாலான வெறுப்பு - தீண்டாமைக்கு ஒரு மூல காரணம்
10. மாட்டிறைச்சி உண்பது தீண்டாமைக்கு ஓர் அடிப்படை காரணம் 
பகுதி 5  புதிய கோட்ப்பாடுகளும் சில அரிய கேள்விகளும்
11. இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா?
12. பிராமணர் அல்லாதோர் மாட்டிறைச்சி உண்பதை ஏன் கைவிட்டார்கள்?
13. பிராமணர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்?
14. மாட்டிறைச்சி உண்பது சிதறுண்ட பிரிவினரை ஏன் தீண்டப்படாதவர்களாக ஆக்க வேண்டும் 
பகுதி 6 தீண்டாமையும் அது தோன்றிய காலமும்
15. தூய்மையற்றவர்களும் தீண்டப்படாதவர்களும்
16. சிதறுண்ட சமூகத்தினர் எப்போது தீண்டப்படாதவரானார்
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 15
பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை   
பகுதி 1 பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக முஸ்லிம்கள் முன்வைக்கும் வாதம்
01. லீக் முன் வைக்கும் கோரிக்கை என்ன?
02. தாயகம் கோரும் ஒரு தேசம்
03. இழிந்த நிலையிலிருந்து விடுபடுதல் 
பகுதி 2 பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிரே இந்துக்களின் வாதங்கள்
04. ஒருமைப்பாடுச்     சிதறல்
05. பாதுகாப்பு வலிமை குன்றல்
06. பாகிஸ்தானும் வகுப்பு நில்லிணக்கமும்
 பகுதி 3 பாகிஸ்தான் இல்லை என்றால்?
07. பாகிஸ்தானுக்கு இந்து மாற்று ஏற்பாடு
08. பாகிஸ்தானுக்கு முஸ்லீம் மாற்று ஏற்பாடு
09.  வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் 
பகுதி 4 பாகிஸ்தானும் நாட்டை பிடித்துள்ள பிணியும்
10. சமூகத் தேக்க நிலை
11. வகுப்பு வெற்றி
12. தேசிய அளவிலான ஏமாற்றம் 
பகுதி 5
13. பாகிஸ்தான் என்ற ஒன்று இருக்க வேண்டுமா?
4. பாகிஸ்தானின் பிரச்சனைகள்
15. யார் தீர்மானிப்பது 




பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 16
தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?
01. ஒரு வினோதமான சம்பவம் தீண்டப்படாதவர்களையும் காங்கிரஸ் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறது
02. ஓர் அருவருப்பான காட்சி காங்கிரஸ் தனது திட்டத்தை கைவிடுகிறது
03. ஓர் அற்புதமான பேரம் அதிகாரத்தை கைவிட காங்கிரஸ் மறுப்பு
04. ஓர் இழிவான சரணாகதி காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது
05.அரசியல் அருளிரக்கம் தீண்டப்படாதவர்களை கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்
06. ஒரு தவறான கூற்று காங்கிரஸ் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா
07. ஒரு பொய்யான குற்றசாட்டு தீண்டப்படாதவர்கள் பிரிட்டிஷாரின் கைக்கூலிகளா
08. உண்மையான பிரச்சனை தீண்டப்படாதவர்கள் வேண்டுவது என்ன
09. அயல் நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைபடுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர்
10. தீண்டப்படாதவர்கள் கூறுவது என்ன? திரு காந்தியை பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்
11. காந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்கு மேல் தொங்கும் வாள்
 பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 17
திரு காந்தியும் தீண்டப்பட்டதோர் விடுதலையும்
01. தீண்டபடாதோரின் மொத்த மக்கள் தொகை
02. தீண்டபடாதோரின் முக்கியத்துவம்
03. தீண்டபடாதோரின் அரசியல் கோரிக்கைகள்
04. இந்துக்களின் எதிர்ப்பு
05. கூட்டு தொகுதிகளும் தனி தொகுதிகளும்
06. ஆட்சி துறை
07. அரசு பணி துறை
08. தனிக்குடியேற்றங்கள்
09. சாதியம் அரசியல் அமைப்பு சட்டமும்
10. இந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்
11. பின் இணைப்பு சம்பந்தமான ஒரு குறிப்பு  
01. வைஸ்ராய்  கவுன்சில் உறுப்பினர்கள் யார், எவர்?
02. வைஸ்ராய்  கவுன்சிலில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக நியமனம் 03. தொழிலார்களுக்கான   சட்டங்கள் ஒரே சீராக அமைவதன் அவசியம்
04. இந்திய மண்ணில் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டு கிளையின் ஆலோசனை குழுவுக்கு ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுத்தல்
05. இந்தியாவில் உள்ள நிலைமை
06. இந்திய மண்ணில் நிறுவனப் பயன்பாட்டுக்கு கிளையின் ஆலோசனை குழுவுக்கு ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுத்தல்
07. யுத்தத்தில் வெற்றி பெற்ற இந்திய தொழிலார்கள் ஏன் உறுதி பூண்டுள்ளனர் 08. காகித கட்டுப்பாட்டு ஆணை
09. தொழிலார்களுக்கு கிராக்கிப்படி வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு
10. இந்திய நிதி மசோதா
11. தொழிலாளர் நலத்துறையின்  நிலைக்குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்வு
12. இந்திய தேயிலை கட்டுப்பாடு (திருத்த) மசோதா
13. போர்க்காயங்கள் (இழப்பீடு காப்பீடு) மசோதா
14. தேர்ச்சி பெற்ற மற்றும் பகுதி தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நிலையங்கள்
15. இந்தியக் கொதிகலங்கள்   (திருத்த) மசோதா
16. மோட்டார் வாகன (திருத்த) மசோதா
17. சுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா
18. போர்க்காயங்கள் (இழப்பீடு காப்பீடு) மசோதா
19. விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் முதல் கூட்ட தொடர்
20. தொழிலார்களும் நாடாளுமன்ற ஜனநாயகம்
21.இந்திய தொழில் சங்கங்கள் (திருத்த) மசோதா
22. யுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி
23. தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் ஜாரியா நிலக்கரி சுரங்கங்களுக்கு வருகை
24. தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் நிலக்கரி சுரங்கங்களுக்கு வருகை  25.இந்தியாவில் தொழிலாளர்களின் சேம நலனை மேம்படுத்துதல்
26. நிலக்கரி சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கிருந்த தடை நீக்கம்
27. நிலக்கரி சுரங்கங்கள் (பராமரிப்பு) திருத்த மசோதா
28. தொழிலார் சம்பந்தமாக அரசாங்கத்தின் கொள்கை 29. பல்வேறு வகைப்பட்ட துறைகள்
30. புது டெல்லில் மசூதிகளை பாதுகாத்தல்
31. தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா
32. நிலக்கரி சுரங்கங்கள் சேம நல நிதியத்துக்கான   ஆலோசனை குழு
33. மைக்காத் தொழிலுக்கு வலுவான, நிலையான அடித்தளம் அமைத்து கொடுத்தல்
34. தொழிற் சங்கங்களை அங்கீகரிப்பது சம்பந்தமாக தொழிலாளர் நிரந்தர குழுவில் விவாதம்
35. தேர்ச்சிபெற்ற  தொழிலாளர்களுக்கு யுத்த பிற்காலத்தில் வேலைவாய்ப்பு 36. விரிவடைந்த முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டின் கூட்டம்
37. தொழிற்சாலைகள் (இரண்டாவது) திருத்த மசோதா
38. ஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா
39. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு
40. யுத்த பிற்காலத்தில் மின்விசை துறையின் வளர்ச்சி
41. இந்தியாவில் கனிம வளங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தின் கொள்கை
42 தொழிலார் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்தின் கொள்கை
43. சுரங்கங்களில் நிலத்தடியில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு மீண்டும் உடனடியாக தடை விதிப்பது அவசியம்
44. தொழிலார் நலத்துறை
45. சுரங்க தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா
46. தொழிற்சாலைகள்      இரண்டாவது (திருத்த) மசோதா
47. சுரங்க தொழிலாளர் மகப்பேறு நல (திருத்த) மசோதா
48. தொழிற்சாலை பணியாளர் நலக்   காப்பீடு
49. தேசிய பணி தொழிலாளர் நடுவர் மன்றங்களின் போர்க்கால பணிகள்
50. தாமோதர் பள்ளத்தாக்கின் பன்னோக்கு வளர்ச்சி
51. இந்திய தொழிற்சாலை பணியாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம்
52. தொழிலார்களுக்கு அரசின் கடமை
53 ஒரிசாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்கு திட்டம்
54. ரயில்வே தொழிலாளர் சம்மேளத்தின் கோரிக்கைகள் மறுப்பு : ஆட்குறைப்பு 55. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்திற்க்காக கிராமங்களை கலி செய்யும் திட்டம்
56. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா
57. இந்திய சுரங்கங்கள் (திருத்த) மசோதா
58. தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா
59. மறுவாழ்வு திட்டம்
60. தொழிலார் நலமும் சமூகப் பாதுகாப்பும்
61. தொழிலாளர் நலத்துறையில் முகமதியர்களின் சிறப்பான நிலை
62. இந்திய நிதி மசோதா
63. இந்திய அரசாங்க அச்சகத் தொழிலார்கள் வேலை நிறுத்தம், கல்கத்தா
64. தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா
65. மைக்க சுரங்க தொழிலாளர்கள் சேம நல நிதி மசோதா
66. தொழில் துறை வேலைவாய்ப்பு (நிலையணைகள்) மசோதா
67. மைக்க சுரங்க தொழிலாளர்கள் சேம நல நிதி மசோதா 
68. கதம்ம செய்திகள்         
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 19
பகுதி I
பாகம் 1 - அரசியல் குறைகள்
பாகம் 2- கல்வி சம்பந்தபட்ட குறைகள்
பாகம் 3- ஏனைய குறைகள்
பாகம் 4- இன்னல் படும் மக்கள் பால் சர்க்காரின் கடமை
பகுதி II
01. சர் எஸ் கிரப்சின் குறிப்புகள்'
02. சர் எஸ் கிரப்சுக்கு டாக்டர் அம்பேத்கர் திரு ராஜாவும் எழுதிய கடிதம் 
03. லின்லித்கோ கோமானுக்கு சர் ஆர் லும்லே (பாம்பாய்) எழுதிய கடிதம் ஒரு 
04. கிரிப்ஸ் திட்டம் 
05. கிரிப்ஸ் திட்டம் பற்றி டாக்டர் அம்பேத்கர் அறிக்கை 
06.திரு அமெரிக்கு லின்லித்கோ கோமான் தந்தி 
07. யுத்த அமைச்சரவையின் அறிவிப்பு 
08.திரு அமெரிக்கு லின்லித்கோ கோமான் கடிதம் 
09. திரு அமெரிக்கு லின்லித்கோ கோமான் தந்தி 
10. திரு லின்லித்கோ கோமானுக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம் 
11. வைஸ்ராய் நிர்வாக சபையில் நடைபெற்ற விவாதத்தின் சுருக்கம் 
12. திரு அமெரிக்கு பீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவல் தந்தி 
13. பீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவலுக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம் 
14. பெதிக் லாரன்ஸ் பிரபுவுக்கு பீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவல் கடிதம் 
15. அமைச்சரவை தூதுக்குழு பீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவல் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரிடையில் 1946 ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெற்ற கூட்டம் பற்றிய குறிப்பு 
16. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வேவல் பிரபுவுக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம்
17. பீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவலுக்கு நிர்வாக சபை உறுப்பினர்கள் எழுதிய கடிதம் 
18.அமைச்சரவை தூதுக்குழு உறுப்பினர் ரைட் ஹானரபிள் திரு ஏ வி அலெக்சாண்டருக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம் 
19. பெதிக் லாரன்ஸ் பிரபுவுக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம் 
20. டாக்டர் அம்பேத்கர் பெதிக் லாரன்ஸ் பிரபுவுக்கு கடிதம் 
21. பீல்ட் மார்ஷல் வைகவுண்ட் வேவலுக்கு ராவ் பகதூர் சிவராஜ் கடிதம் 
22. டாக்டர் அம்பேத்கருக்கு திரு அட்லி கடிதம் 
23. திரு அட்லிக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம் 
24. திரு அட்லிக்கு பெதிக் லாரன்ஸ் பிரபு கடிதம் 
25. திரு அட்லிக்கு பெதிக் லாரன்ஸ் பிரபு கடிதம்
பகுதி III பி ஆர் அம்பேத்கர் எழுதிய திறனாய்வு கட்டுரை
01. பூர்வாங்க தேர்தல்களின்  முடிவுகள் பற்றி ஓர் ஆய்வு 
02. அமைசச்சரவை தூதுக்குழுவும் தீண்டபத்தவர்களும்   
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 20
வினா விடை 1942 செப்டம்பர் 14 முதல் 1946 ஏப்ரல் 12 முடிய 





பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 21
வினாக்களும் விடைகளும் 255 முதல் 472 வரை

பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 22
புத்தரும் அவரது தம்மமும் 
நூல் 1 சித்தார்த்த கௌதமர் ஒரு போதி சத்துவர் எவ்வாறு புத்தர் ஆனார்
நூல் 2 சமய மாற்ற செயற்பாடுகள்
நூல் 3 புத்தர் எவற்றை போதித்தார்
நூல் 4 மதமும் தம்மமும்
நூல் 5 சங்கம்
நூல் 6 புத்தரும் அவருடைய சமகாலத்தவரும்
நூல் 7 மகான் பரிவ்ராஜரின் இறுதிப்  பயணம்
நூல் 8 சித்தார்த்த கௌதமர் என்ற மாமனிதர்
முடிவுரை 
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 23
பகுதி I 
இயல் 1 பண்டையகாலா இந்திய வணிகம்
இயல் 2 வரலாற்றின் இடைநிலை காலத்தில் இந்தியாவின் வணிக உறவுகள் (அல்லது) இஸ்லாமின் தோற்றமும் மேற்கு ஐரோப்பாவின் விரிவாக்கமும்
இயல் 3 மன்னர்பிரான் அரசு ஆட்சி பொறுப்பை ஏற்கவிருந்த தருணத்தில் இந்தியா
பகுதி II 
இயல் 1 தீண்டப்படாதோரும் பிரிட்டிஷ் பேரரசும் 
பகுதி III 
இயல் I இங்கிலாந்தின் அரசியல் சாசனம் குறித்த விரிவுரைகள்
இயல் 2 தலைமை அதிகார உரிமையும் இந்திய சமஸ்தானங்களின் சுதந்திர கோரிக்கையும்  
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 24
பொது சட்ட நெறி
டெமினியன் அந்தஸ்து பற்றிய குறிப்புகள்
குறித்தவகை மாற்றீடுச் சட்டம்
பொறுப்புரிமை சட்டம்
இந்தியக் காலவரையறை சட்டம்
பிரிட்டிஷ் இந்தியாவில் குற்ற விசாரணை முறைத் தொகுப்பு சட்டம் சொத்துரிமை மாற்ற சட்டம்
சான்று சட்டம்
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25
பபாசக்கிப் நினைவலைகள்
ஒரு விசாவுக்காக காத்திருத்தல் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு)
பலவகை குறிப்புகள் 
01. பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம்
02. நாடாளுமன்ற நடைமுறைகளைப்  பற்றிய குறிப்புகள்
03. இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள்
04. மனுவும் சூத்திரர்களும்
05. சமூக அமைப்பை பாதுகாத்தல்
06. இந்துக்களுடன்
07. ஏமாற்றம்
08. அரசியல் அடக்குமுறை பிரச்சனை
09. எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா? தீண்டாமையா? 





பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 26
01. நோக்கங்கள் மாற்றும் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானம்
02. அடிப்படை உரிமைகள் பற்றிய இடைக்கால அறிக்கை
03. ஒன்றிய அரசியல் சாசனக் குழுவின் அறிக்கை
04. வரைவு அரசியல் சாசனத்தை ஆழ்ந்து பரிசீலிப்பதற்கான குழு
05. அரசியல் நிர்ணய சபையின் பணிகள் குழுவின் அறிக்கை
06 கிழக்கு பஞ்சாபிற்கு கூடுதல் பிரதிநித்துவம்
07. புதிய விதியின் 38-ஏ ஐ 38 வியுடன்  சேர்த்தல்
08. வரைவு அரசியல் சாசனம் குறித்த தீர்மானம்
09. 1948 பிப்ரவரி 21ம் தேதியிட்டு அரசியல் நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு டாக்டர் அம்பேத்கர் எழுதிய கடிதத்துடன் 1948 பிப்ரவரி 26ஆம்  தேதியிட்டு தி கெஜட் ஆப் இந்தியா சிறப்பிதழில் வெளிட்ட இந்திய அரசமைப்பின் முன் வரைவு
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 27
பகுதி நான்கு
விதி வாரியாக விவாதம் 1948 நவம்பர் 15 முதல் 1949 ஜனவரி 8 வரை 

பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 28
பகுதி ஐந்து 
விதி வாரியாக விவாதம் 1949 மே 16 முதல் 1949 ஜூன் 16 வரை  

பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 29
பகுதி ஆறு 
விதி வாரியாக விவாதம் 1949 ஜூலை 30 முதல் 1949 செப்டம்பர் 16 வரை

பகுதி ஏழு
விதி வாரியாக விவாதம் 1949 செப்டம்பர் 17 முதல் 1949 நவம்பர் 16 வரை






பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 31
பாகம் ஒன்று
பிரிவு I
இந்து சட்ட தொகுப்பு மசோதா பொறுப்பு குழுவுக்கு சமர்பித்தப்படி (1947 நவம்பர் 17 முதல் 1948 ஏப்ரல் 9 வரை)
பிரிவு II 
டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் வரைவு இந்துச்   சட்டத்தொகுப்பு மசோதாவும் பொறுப்பு குழு ஏற்படுத்திய மாற்றங்களுடன் அப்போதிருந்த இந்துச்  சட்ட தொகுப்பும்
பிரிவு III 
பொறுக்குக் குழுவிலிருந்து திருப்பி அனுப்ப்பட்டதற்க்குப் பின்னர் இந்து சட்ட தொகுப்பு மசோதாவின் மீது நடைபெற்ற விவாதம் (1949 பிப்ரவரி   11 முதல் 1920 டிசம்பர் 14 வரையில்)
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 32
பிரிவு IV
 இந்துச்  சட்ட தொகுப்பு மசோதா கூறுவரியான விவாதம் 
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 33
பிரிவு 1
1947 நவம்பர் 20 முதல் 1949 மார்ச் 31 வரை 
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 34
பிரிவு 1
பிரிவு II
பிரிவு 1II

பிரிவு 1
மகத் சத்தியாகிரகம்
டாக்டர் அம்பேத்கர் - மகாத்மா காந்தி சந்திப்புகள்
தீண்டப்படாதவர்களை இந்தியாவின் அரசியல் வானில் கொண்டு வருவதிலும் இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் பி ஆர் அம்பேட்கரின் பங்கு
நாசிக்கில் உள்ள கலாராம் கோவில் நுழைவுச் சத்தியகிரகமும் கோவில் நுழைவு இயக்கமும்
பிற இயக்கங்கள்





பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 36
பிரிவு I 
கட்டுரைகள், செய்திகள், முன்னுரைகள் 
பிரிவு II 
டாக்டர் அம்பேத்கர் அமைச்சரவை   தூதுக்குழுவும் அதிகார மாற்றமும் 
பிரிவு III
தேசத்தையும் அதன் ஜனநாயகத்தையும் வளர்த்து மேம்படுத்துவது சம்பந்தமாக 
பிரிவு IV 
நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அவற்றின்  சட்ட விதிமுறைகள்    
பாபாசாகேப்   டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 37
159 தலைப்புகள் அடங்கிய நூல் 


வழக்கறிஞர் அரும்பு.ப.குமார் அவர்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் அடங்கிய தமிழ் தொகுப்பு நூல் ஒன்றில் இருந்து நூல் தொகுப்பு 37 வரை தம் வலைத்தளத்தில் பதிவு செய்த்துள்ளார். அதே பதிவை இங்கு விரிவாக அளித்துள்ளேன். பயனுள்ள பதிவு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வெள்ளி, நவம்பர் 22, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXV பல்லவமேடு (அ) பாலி மேடு


அமைவிடம்
பாலி மேடு (அ) பல்லவமேடு, பிள்ளையார்பாளையம் அருகில், காஞ்சிவரம் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம் 631501. இவ்விடம் புத்த காஞ்சியில் அமைந்துள்ளது.

விரிவாக அறிய இந்த வலைத்தளத்தை பார்க்கவும் பல்லவமேடு

பாலி மேட்டினை பல்லவர் மேடு என்றே பல அறிஞர்கள் கூறுகின்றனர். உதாரணமாக வரலாற்று ஆசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கம் பல்லவர் வரலாறு  பக்கம் 329 கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

டாக்டர் மா.இராசமாணிக்கம்  
பல்லவமேடு இன்று ‘பாலி மேடு’ எனக் கூறப்படுகிறது. இந்த இடம் பெரிய காஞ்சிக்கும் சிறிய காஞ்சிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது பண்டைக் காலத்தில் பல்லவர் அரண்மனை இருந்த இடமாதல் வேண்டும்.  
இம்மேடு காஞ்சி நகரமட்டத்திற்கு மேல் ஏறத்தாழ 30 அடி உயரம் உடையது. இதன்மீது நின்று நாற்புறமும் காணின், சுற்றிலும் பள்ளமான நிலப்பரப்புண்மையை உணரலாம். மேட்டின்மீது தென்னை மரங்கள் வளர்ந்துள்ளன. ஒரு பால் சிறிய கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் உள்ள ஆவுடையார் செங்கல்லாலும் சுதையாலும் அமைந்தது. லிங்கம் கல்லால் இயன்றது. அக்கோவிலை அடுத்து இரண்டு கல் மண்டபங்கள்.  
ஒரு மண்டபம் மகேந்திரன் தூண்களை கொண்டது. அம்மண்டபத்தில் இரண்டு வரிசை தூண்கள் உள்ளது. மண்டபத்தை அடுத்து சில அறைகள் உள்ளது. ஒன்று மிக சிறிய அறை. அது புஜை அறை. அதனை அடுத்த அறை இருண்டது. அதன் ஒரு மூலையில் சுரங்கம் ஒன்று படிக்கட்டுகளை உடையதாக இருக்கிறது. அச்சுரங்கம் கைலாசநாதர் கோவிலுக்கு செல்கிறது. மற்றோரு மண்டபம் இடிந்தது. அதில் உள்ள தூண்கள் ஐவகைபட்டது. பல்வேறு காலத்தவை. இப்பல்லவ மேடு அகழப்பெறும் நாளே பல்லவரை பற்றி நற்குறிப்புகள் கிடைக்கும் நாள் என்று 1944 ல் குறிப்பிட்டுள்ளார். 
ஒன்பது ஆண்டுகள் கழித்து டாக்டர் மா.இராசமாணிக்கம் விரும்பியது போன்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1953-54ல் அகழாய்வு மேற்கொண்டது. ஆனால் இங்கு எந்த பல்லவ பழங்கதைகளும் மீட்கப்படவில்லை. அவர் இயற்க்கை எய்தியபின் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் 1970-71ல் ஆர்.நாகசாமியின் வழிகாட்டுதலின் கீழ் ஏ. அப்துல் மஜீத் மற்றும் கே.தாமோதரன் ஆகியோர் அகழாய்வு பணியை மேற்கொண்டனர். இந்த அகழாய்வில் பல்லவர் கால கற்றளி மற்றும் மட்கலன்கள் வெளிக்கொணரப்பட்டது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தெற்கு வட்டம் 1953-54 (Southern Circle of Archaeology Survey of India)  
பல்லவமேடு பல்லவர்களின் நினைவுச்சின்னங்களைக்கொண்டது என்று நம்பிக்கை கொண்டுள்ளது. தொல்லியல் துறை தெற்கு வட்டாரத்தினால் இங்கு ஒரு சோதனையை (Trial) மேற்கொள்ளப்பட்டது. அகழ்வாராய்ச்சி நான்கு தொடர்ச்சியான கட்டமைப்பு காலத்தை வெளிப்படுத்தியது.

அவற்றில் மிகக் குறைவானது கட்டமைப்பு காலம் I, சில வளைய-சுவர்களைக் கொண்டிருந்தது. மூன்று கட்டங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன, அவை கட்டமைப்பின் மிகைப்படுத்தலின் அடிப்படையில் மட்டுமே வேறுபடுகிறது. மட்பாண்டங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.
கிளிஞ்சல் சிப்பி வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தளத்தை கிளிஞ்சல் சிப்பி வளையல்கள் உற்பத்திக்கு ஒரு தொழிற்சாலையாக வழங்கியுள்ளது. ஒரு பல்லவ காலம் தீர்த்தப்படவில்லை என்றாலும், எந்த பல்லவ பழங்கதைகளும் மீட்கப்படவில்லை. (பக்கம்12)

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு 1970-71
இந்த அகழாய்வு மூன்று பண்பாட்டுக் காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வகழ்வாய்வில், சிவப்பு மட்கலன்கள், பளிங்குக் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் எனப் பலவகையான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலம், இங்கு கி.பி. 600 முதல் கி.பி. 900 வரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்
அகழாய்வு தொல்பொருட்கள்: வட்ட உறைகிணறு, செங்கல் தரைத்தளம், கோயில் விமானம் கட்டட உறுப்புகள் (உடைந்த நிலையில் புதையுண்டது), வீரபத்திரர் கற் சிற்பம்
விளக்கம் பல்லவமேடு அகழாய்வில் பல்லவர் கால கற்றளியின் தள உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. வட்ட உறைகிணறு, மற்றும், செங்கல் கட்டடப்பகுதியும் வெளிக்கொணரப்பட்டது. மிக அதிக அளவில் பானையோடுகள் கிடைக்கப்பெற்றன. இவை பல்லவர் காலத்திய (கி.பி.600-900) பயன்பாட்டு மட்கலன்களாகும். பல்லவ ஆட்சிக் காலங்களை தொடர்புபடுத்தியுள்ளது
அகழ்வாராய்ச்சி நடந்த இடங்கள் கடுமையான ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. பாலி மேடு ஆக்கிரமிப்பில் முழுமை சில மாதத்திற்குள் அடையப்போகிறது. அரசும் அகழ்வாராய்ச்சியும் இந்த ஆக்கிரமைப்பை கண்டுகொள்வதில்லை (அ) துணையாக உள்ளது. தொல்லியல் துறை அறிவிப்பு பலகையை கண்டுபிடிப்பதே கடினமானதாக உள்ளது. சிலர் அதனை அழித்து விட்டதாக கூறுகின்றனர்.



பாலி மேடு என்று அழைத்தாலும் பல்லவ மேடு என்று அழைத்தாலும் அது பல்லவர் மேடு என்று பொருள் கொள்ள முடியாது. காரணம் 


01. பாலி (Pali) மொழியாகும்.
பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் (திரிபிடகம்) கொண்ட மொழி பாலி. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். மேலும் காஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகம், தச சீல பல்கலைக்கழகம்  இருந்தது. இது பாலி மேட்டில் இருந்தது என்றுரைக்கின்றனர்.  
பாலி என்ற தொன்மையான பெயரில் பல கிராமங்கள், மலை, மாவட்டம் என இந்தியா முழுவதும் உள்ளது.
01. பாலி நாகா, பாலி  மலை, மும்பை, மகாராட்டிணம் (Pali Naka, Pali Hill, Mumbai, Maharashtra) 
02. பாலி, இரத்தனகிரி,  மகாராட்டிணம் (Pali, Ratnagiri, Maharashtra)
03.  பாலி, பாட்னா, பீகார்  (Pali, Patna, Bihar)
04.  பாலி மோகன், பீகார் 
05. பாலி, இராய்கர், சத்தீஸ்கர்  (Pali, Raigarh, Chhattisgarh)
06.  இராய்ப்பூர், பாலி, ராஜஸ்தான்  (Raipur, Pali, Rajasthan)
07.  இராணி, பாலி, ராஜஸ்தான்   (Rani, Pali, Rajasthan)
08.  பாலி, ரேவரி, ஹரியானா   (Pali Rewari Haryana)
09. பாலி மூக்கு ,கொல்லம், கேரளா  (Palimukku Kollam, Kerala)  
02. மணிபல்லவ மேடு 
"மணிபல்லவ மேடு" என்பதை "பல்லவ மேடு" என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றுரைக்கிறார் பேராசிரியர் அ.மு பரமசிவானந்தம். (சொர்ணாம்பாள் நினைவு சொற்பொழிவுகள்- Page 69-70, 1972 )
மணிமேகலை வரவை முன்னமே அறிந்த மன்னன் மணிபல்லவத்தை போன்ற திட்டு, புத்த பீடிகை, கோமுகி பொய்கை முதலியவற்றை இயற்றி மணிமேகலை வந்தால் தங்க தக்க ஏற்பாடுகளை செய்தான். மணி பல்லவத் திட்டில் மணிமேகலை அறவண அடிகளிடம் மாதவியுடன் அறம் கேட்டு புத்த நெறி போற்றி வாழ்ந்து வந்தாள். இந்த மணிபல்லவம் இன்றும் பல்லவமேடு என்ற பெயரால் வழங்குகின்றது.
இதைச் சிலர் பல்லவர் ஆட்சி செய்த மேடு எனக் குறிப்பினும் மணிபல்லவமாகிய மேடு எனக் கொள்வதே சாலப் பொருந்துவதாகும். தீவகம் போன்ற காவகம்' எனச் சாத்தனர் கூறியபடியே இன்றும் இம் மணிபல்லவமாகிய பல்லவமேடு தீவகமென விளங்குகின்றது. 
03. மணிபல்லவம்
தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி  
மணிமேகலையில் மணிபல்லவம் வருகிறது. இந்த மணிபல்லவத்திற்கும் பல்லவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மணிமேகலை பல்லவர் வருகைக்கு முன் இயற்றப்பட்ட நூல். பல்லவர் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 'மணிமேகலை' இயற்றப்பட்டது 
சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப்பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாக, தமிழ் நாட்டு வேந்தர்களை ஆங்காங்கு குறிப்பிட்டுச்செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. 
பல்லவர்கள் காஞ்சீபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் வடபகுதியை அரசாண்ட பேர்பெற்ற மன்னர். இவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. பல்லவர் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 'மணிமேகலை' இயற்றப்பட்டிருக்கவேண்டும்.
அழிசி வலைத்தளம்
புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது. மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச் சென்று காப்பாற்றியதாகக் கூற்றப்படும் தெய்வம் இது. மணிபல்லவம் என்பது இன்றைய நயினாதீவு ஆகும். இத்தீவைச் சிங்களத்தில் நாகதீப, அதாவது நாகர்தீவு என அழைக்கப்படுகிறது.
இலங்கை வரலாற்று நூலான தீபவம்சம், மகாவம்சம் மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. இந்த யுத்தம் நடந்த இடம் ‘நாகதீபம்’ என்று மகாவம்சம் கூறுகின்றது. இதே யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. ஆகவே, ‘மணிபல்லவமும் நாகதீபமும் ஒன்றே
மணிபல்லவம் என்பது மணிபல்லங்கம் என்பதன் திரிபு எனத் தோன்றுகிறது. பல்லங்க என்னும் பாலி மொழியின் பொருள், பலகை அல்லது ஆசனம் என்பது. மணிபல்லங்க என்றால் மணியாசனம் எனப் பொருள்படும். மணிபல்லங்க என்னும் சொல் தமிழில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கியது போலும். இலங்கையிலேயுள்ள பௌத்தர்கள் பாராயணம் செய்யும் செய்யுள்களில் ரத்னத்திரய வந்தனர் காதா என்பதும் ஒன்று. இத்தோத்திரச் செய்யுள்களில் ஒன்று இது:
பஹினி ஸத மாது லேஹி தின்ன
மணிபல்லங்க வரே யஹிங் நிஸின்னோ
முனி தம்ம மதேஸயீ முனீனங்
ஸிரஸாதங் பணமாமி நாகதீபங் 
இந்தப் பாலிமொழிச் செய்யுளின் பொருள் வருமாறு
பாஹினி ஸத - தங்கையின் மகனும்
மாது லேஹி - மாமனும்
தின்ன - கொடுத்த
வரே- உத்தமமான
மணிபல்லங்க - மணி ஆசனமானது
யஹிங் - எந்த இடத்தில் உள்ளதோ அங்கு
நிஹின்னோ - அமர்ந்து
முனி - புத்தபகவான்
முனீனம் - பிக்ஷக்களுக்கு
ஸிரஹா - தலை வணங்கி
பணமாமி - வணங்குகிறேன்
மேலும் விரிவாக அறிய உதவும் வலைத்தளம் அழிசி
04. மஞ்சள் நீர் கால்வாய்
இக்கால்வாய், பிள்ளையார்பாளையம், பல்லவமேடு, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு, நேதாஜி நகர் வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இக்கால்வாய், படிப்புகள் மொத்தம் ஆறு கி.மீ. இக்கால்வாய், தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது. 
காஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகம் இருந்தது. பிக்குகளும் பிக்குணிகளும் இங்கு வந்து பௌத்தத்தை கற்று தேர்ந்தார். தமிழகத்தில் மகாயானம் காஞ்சியில் நாகர்ஜுனா அவர்களால் கொண்டுவரப்பட்டது. எனவே பௌத்தர்களின் எண்ணிக்கை மற்றும் புத்த விகாரங்கள் பெருமளவில் இருந்தது. பிக்கு மற்றும் பிக்குணிகள் நீராடவும், சீராவ ஆடையை துவைக்கவும் மற்றும் சாயமிடும் இடமாக இருந்தது. பௌத்தர்களுக்கு உடல் நிலை சரியற்று பின்னர் தேர்ச்சி பெற்று நலமடைந்தால், மொட்டை அடித்து மஞ்சள் ஆடை அணிந்துகொள்வர் என்றுரைக்கிறார் மகா பண்டிதர் அயோத்திதாசர். எனவே தான் இந்த நீரோடை மஞ்சள் நீர்  என்ற பெயர் பெற்றது.   

குறிப்புகள் 
பல்லவர் வரலாறு.pdf/349

01. மணிபல்லவம் என்னும் தீவகம் - மணி. 21- ஆம் காதை

02. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது - மணி. 6-ஆம் காதை

03. சாவக நாடு (ஜாவா தீவு), காழக நாடு (பர்மா நாடு) முதலிய கீழ் நாடுகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு மரக்கலம் ஓட்டிச்சென்ற தமிழ் வணிகர், இடைவழியிலே மணிபல்லவத் துறைமுகத்தில் தங்கிச் செல்வது வழக்கம். இதனை, மணிமேகலை 14ஆம் காதையினால் அறியலாம்.

சனி, அக்டோபர் 26, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXIV கட்டவாக்கம்


கட்டவாக்கம்
கட்டவாக்கம், (தென்னேரி அருகில்)
வாலாஜாபாத் வட்டம்,
காஞ்சிவரம் மாவட்டம் 631604.

கட்டவாக்கம் வாலாஜாபாத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது (அ) காஞ்சிவரத்திலிருந்து 17  கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி
காஞ்சிவரம் ஏனாத்தூர் சந்திரசேகரேந்திர விசுவ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் (SCSVMV University) பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு கட்டவாக்கத்தில் 2001-02 அகழாய்வு செய்தது. இந்த ஆய்வில் கீழ்க்கண்டவை கண்டறியப்பட்டது

01. பௌத்த கட்டிட அமைப்பு (Stupa)
02. திரிரத்தினம் (Triratna)
03. மெல்லிய துணியில் பீடத்துடன் கிண்ணங்கள்
04. கருப்பு  மற்றும் சிவப்பு  மட்பாண்டங்கள்
   
இங்கு மேட்டின் உச்சியில் (விளைநிலம் அருகில்) இலிங்க வடிவத்தில் சிவாபெருமான் காணப்படுகிறார். இந்த இலிங்கம் 1.75 மீ அளவு உடையது, இன்றும் காணப்படுகிறது. இந்த ஆய்வு முதல் கட்டம் (Phase I) மற்றும் இரண்டாம் கட்டம் (Phase II) என வகைப்படுத்துகிறது.  

முதல் கட்டம் I  (Phase I)
இது பௌத்த தளம் என்றுரைக்கிறது. இங்கு பௌத்த அமைப்பு (Buddhist Structure), நீண்ட எரிந்த செங்கற்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது. சுவரின் சீரமைப்புகள் மட்டுமே முதல் கட்டமைப்பில் காண முடிந்தது. செங்கற்கள் ( 38 x 28 x 7 cm), நடைமேடை (Platform) மூன்று பக்கங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட மட்பாண்டங்கள் உள்ளன. 

குடியிருப்பு மற்றும் வழிபாட்டுப் பகுதிகள் கொண்டுள்ளது, பானைகளுடன் செங்கல் தளம் உள்ளது, மெல்லிய துணியில் பீடத்துடன் கிண்ணங்கள் உள்ளது. பழுப்பு நிறம் பூசப்பட்ட பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என ஆய்வில் கிடைத்துள்ளது. கட்டவாக்கத்தில் ஒரு பிராமி எழுத்து கண்டறியப்பட்டது.

இரண்டாம் கட்டம் I  (Phase II)
இரண்டாம் கட்ட மக்கள் முதல் கட்டமைப்பை (Phase I) விரிவாக மீண்டும் பயன்படுத்தி இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டது. கட்டம் I மற்றும் கட்டம் IIன் பிற விவரங்கள் தெரியவில்லை. காரணம் அவை மோசமாக சேதமடைந்தும், கல் செதுக்கல்கள் மற்றும் செங்கற்கள் மீண்டும் நவீன குடியேற்றங்களால் பயன்படுத்தியதால் தான் பிற விவரங்கள் தெரியவில்லை. செங்கற்கள் ( 28 x 7 x 5 cm ).

ஆய்வு செய்யும்பொழுது, பல மறுபயன்படுத்திய புத்தர் கற்சிற்பங்கள் வெவ்வேறு தோரணையில் சுவர்கள் மற்றும் தூண்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கட்டவாக்கம் மட்பாண்டம் காலம் 200 - 100 BCE. 
கட்டவாக்கம் அகழ்வாராய்ச்சியிலிருந்து ஒற்றை அச்சு தகடு (A Single Mould Plaque) கண்டறியப்பட்டது. (ஆனால் பிள்ளையார்பாளையம் இரட்டை வார்ப்பட பொருள்கள் மனித மற்றும் விலங்கு வடிவங்களில் காணப்பட்டன). வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டது.

கட்டவாக்கத்தில் கண்டறியப்பட்ட சுடுமண் சிற்பம் 

மேலும் விரிவாக அறிய 
National Seminar on Pristing Glory of Kanchipuram

02. Early Historical Archaeology of Kanchipuram: A Study of Pre-Pallava culture. Thesis submitted for partial fulfillment of the degree of Doctor of Philosophy in Archaeology- Research Scholar S.Shanmigavel Supervisor Prof.S.Ramakrishna Pisipathy
 

செவ்வாய், செப்டம்பர் 24, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXIII வைகுண்ட பெருமாள் கோவில்

அமைவிடம்
வைகுண்ட பெருமாள் கோவில் தெரு, பெரிய காஞ்சிவரம், காஞ்சீவரம்  631502. காஞ்சீவரம் பேருந்து நிலையம் அருகில் வைகுண்டப் பெருமாள் அமைந்துள்ளது.

பகவன் புத்தரை அவதாரமாக தவறாக கருதப்பட்டதால் மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டிலும், காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலிலும் திருமாலை புத்தராக வடிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை இயக்குனர் அறிஞர் திரு Dr.D.தயாளன் 
பல்லவர் கல்வெட்டு மாமல்லபுரத்தில் உள்ள ஆதிவராக குகையில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பிடும் போது புத்தரை குறிப்பிட்டுள்ளது (K.R.Srinivasan 1964, P173)
நந்திவர்மன் II பல்லவ மல்லாவின்  காலத்தில் (731-796 ) வைகுண்ட பெருமாள் கோவிலின் சுவரில் புத்தர் விஷ்ணு அவதாரம் போன்று நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. (Digital documentation of Buddhist sites in Tamilnadu)
ஜப்பான் ஆய்வாளர் டி . ஜிக்சின்  காம்பே  (Dr. T. Jixin Kambe)
போதி தர்மா டோஜோ பௌண்டேசன் இயக்குனர் (Bodhidharma Dojo Foundation -Founder Director) டி. ஜிக்சின்  காம்பே ஆசிய வரலாறு குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்துள்ளார். அவர் டிசம்பர் மதம் 2018ல் காஞ்சிவரம் வருகை புரிந்து வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சென்று, இங்கு யுவாங் சுவாங் என்று குறிப்பிடுபவரை போதி தருமர் என்று குறிப்பிடுகிறார். சீனாவில் உள்ள தியான் டாங் விகாரில் உள்ள போதி தர்மாவின் ஓவியத்தையும் காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் உள்ள சிற்பத்தையும் ஆய்வு நோக்கில் ஒப்பிட்டு இந்த கருத்திற்கு வந்துள்ளார்  

போதிதர்மத்துடன் தொடர்புடைய காஞ்சிபுரத்தின் இரண்டு நேரடி சான்றுகள் உள்ளன என்றுரைக்கிறார்.
01. போதிதர்மா தனது இறுதி பயணத்தில் ஷாலின் விகாரை விட்டு வெளியேறிய போது, ஷாலினில் இரண்டு நூல்களை விட்டுவிட்டு சென்றார். அவை மூடப்பட்ட இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டன. கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு பிக்கு அதைத் திறந்த பொழுது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இரண்டு நூல்களைக் கண்டார். அவற்றில் ஒன்று “தசை மாற்றம் / தரமான தசைநார் “Change muscle/tendon classic மற்றோன்று மூளையை கழுவும் சுத்தா Wash-brain sutra
02. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 5 வேறு வேறு காட்சிகள் உள்ள புடைப்பு சிற்பம் கண்டு வியந்தார். அதில் நான்கு காட்சிகள் போதி தர்மாவின் அரசு குடும்ப வாழ்வை விளக்கும் காட்சிகள். 
02.01.  இடது புறமாக உள்ள சிற்பத்தில் கி.பி 436-460 ஆம் ஆண்டுகளில் அரசாட்சி செய்த பல்லவ மன்னரான இரண்டாம் சிம்மவர்மன் உள்ளார். அவர் புத்தரின் போதனைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடப்பவர். 
02.02 நடுப்பகுதியின் மேல் பாகத்தில் உள்ள சிற்பத்தில் யானைகள், குதிரைகள், போர் வீரர்கள் இடம் பெற்றுள்ள காட்சியள்ளது. 
02.03. வலது மேல் புறத்தில் போதி தர்மாவின் இரண்டு சகோதரர்கள் இடம் பெற்றுள்ளனர். 
02.04. வலது பக்கம் கீழ் புறத்தில், அரசவையில் நடனமாடும் பெண்களின் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. 
02.05. கீழ் நடுப்பகுதியில் 5வது உருவமாக கி பி 440 முதல் 536 வரை வாழ்ந்த போதி தர்மாவின் கட்சி நின்ற நிலையில் இடம் பெற்றுள்ளது.    
 

அவரின் விளக்கத்தில் சில சந்தேகம் எழுந்தது. என்னுடைய சந்தேகத்தை போக்க போதி தர்மா டோஜோ பௌண்டேசனிடம் விளக்கம் கேட்டு இருக்கிறேன். 

01. போதி தருமரின் சகோதரர்கள் இருவர் அமர்ந்திருக்கும் சிற்பத்தில் மேலும் ஒரு உருவம் காணப்படுகிறது. அவ்வுருவம் தலைப்பகுதியை மட்டும் கொண்டுள்ளது. அவர் யாராக இருக்கக்கூடும்?

02. நடனமாடும் பெண்கள். என்று குறிப்பிடுவது ஏற்புடையதாக இல்லை. காரணம் அங்கிருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்.

03. மேலும் போதி தருமர்க்கு முன் அரசரை வணங்கி நிற்பவரை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

போதிதர்மரை பற்றிய குறிப்புக்கள் எல்லாம் சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் இருந்தே எடுக்கப்பட்டது. சீனா போதி தர்மர்க்கு மட்டுமல்ல போதிதர்மரை காண வந்த அவரது சகோதரருக்கும் சீனா மொழில் பெயர் அளித்தது. தாமோ என்று போதிதர்மருக்கும் தாச்சி தாமோ என்று அவரது அண்ணனுக்கும் பெயரிட்டது.


Sculpture of Bodhidharma at Kanchi Temple
Dr.Kambe

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXII வராதராசா பெருமாள் கோவில்


அமைவிடம்
வராதராசா பெருமாள் கோவில், நேதாஜி நகர், காஞ்சிவரம் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம் 631501

காஞ்சி வராதராசா பெருமாள் கோவில் 108 வைணவ கோவில்களில் முதன்மையான மூன்றாவது கோவில் என்ற பெயர் கொண்டுள்ளது. வைணவ அறிஞர்களை இங்கு ஆழ்வார் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த கோவில் சுமார் 360 கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. 1000 கல் மண்டபத்தை கொண்டது. ஆனால் 1000 கல் மண்டபத்துடன் இக்கோவில் தற்பொழுது இல்லை.

A.சிவன் கோவிலை அழித்து வரதராஜ பெருமாள் கட்டப்பட்டது
01. பம்மல் சம்பந்தம் 
காஞ்சிவரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் என்பது மாற்றப்பட்ட சிவா ஆலயம் என்று சிவாலய சிற்பங்கள் நூல் பக்கம் 36ல் குறிப்பிடுகிறார்.
01. கிழக்கு கோபுரம்
சிவாலயங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி இருக்கும். இது சிற்ப சாஸ்திரத்திற்கும் சைவ ஆகமங்களிலும் குறித்த முறையாகும். அப்படி வேறு எத்திசையிலாவது நோக்கிருந்தால் அதற்க்கு ஏதாவது அவசியமான காரணம் இருக்கவேண்டும் (பக்கம் 15). 
பழைய ஆலயம் கிழக்கு நோக்கி இருந்தது. பெரிய கோபுரம் சைவ முறைப்படி கிழக்கில் தான் இருந்தது. தென் கிழக்கு மூலையில் தான் மடப்பள்ளி இருந்தது. வராதராஜா பெருமாள் பார்க்கபோவது என்றால் மேற்க்கு பக்கம் நுழைந்து கிழக்கில் இருக்கும் படிகளின் மீது எறி மறுபடியும் திரும்பி போகவேண்டும். 
தற்கால வரதராஜ பெருமாள் கோவில் விழாக்கள் எல்லாம் மேற்கில் இருக்கும் சிறிய கோபுர வழியாகத்தான் நடந்து வருகிறது. சிவா ஆலயங்களில் சுவாமிகளின் (கர்ப்பகிரகம்) கருவறை முதலிலும் அம்மன் இடம் பிறகும் இருப்பதும் வழக்கம். தற்காலம் மேற்கு கோபுர வழியாக நுழைந்தால் அம்மன் இடம் முந்தியிருக்கிறது. 
02. புண்ணிய கோடி விமானம்.
இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அத்தியூர் என்றே இருக்கிறது. அத்தியுரில் இருந்த சிவா ஆலயத்திற்கு புண்ணிய கோடிஸ்வரர் கோவில் என்ற பெயர் இருந்தது. தற்பொழுது உள்ள வராதராஜாருடைய விமானத்திற்கு புண்ணிய கோடி விமானம் என்று பெயர்.
03. ஆழ்வார்கள் பாடல்கள்
காஞ்சிவரத்தில் உள்ள பல கோவில்களுக்கு பாடல்கள் (பாசுரங்கள்) உள்ளது ஆனால் பழைய வைணவ ஆழ்வார்கள் வரதராஜரைப்பற்றி பதிகங்கள் பாடியதாக இல்லை. 

04. சிவா ஆலயத்தை பெருமாள் ஆலயமாக மாற்றப்பட்டது
குண்டு கோபாலராயர் என்பவரால் சிவா ஆலயத்தை விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டது. (சிவா ஆலயங்கள் இந்தியாவிலும் அதற்க்கு அப்பாலும் தொகுதி II பக்கம் 14 )  

ஆங்கிலேயர் ஒருவர் (District Gazetteer என்னும் புத்தகத்தில்) ஆதியில் சிவா ஆலயத்தை வைணவ ஆலயமாக மாற்றப்பட்டது என உறுதியாக குறியிருக்கிறார். 
மறைந்த பண்டித நடேச சாஸ்திரிகளும் சிவா ஆலயத்தை வைணவ ஆலயமாக மாற்றப்பட்டது என்ற கருத்தை கொண்டுள்ளார் என்றும் மேலும் பல ஆதரங்கள் இருக்கிறது அவற்றை இங்கு கூற இடமில்லை என்று முடிக்கிறார் பம்மல் சம்பந்தம். 
05. மலைமீது இருப்பவர் வரதராஜர்.
வரதராஜ பெருமாள் மலைமீது இருப்பதாக கருதுவது மரபு ஆனால் இங்கு (காஞ்சியில்) மலையே கிடையாது. முந்திய சிவா ஆலயத்தை நான்கு புறமும் மூடிவிட்டு வரதராஜ பெருமாள் கட்டப்பட்டு இருப்பது உறுதி
வரதராஜப் பெருமாள் / தேவராஜப் பெருமாள்
தற்போது கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் (லட்சுமி நரசிம்மசுவாமி கோயில்) பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள் தான். புதிய வரதராஜ பெருமாள் சிலை பழைய சீவரம் 20 கி மீ தொலைவில் உள்ள இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. பழயசீவரம் கிராமம், வாலாஜாபாத் வட்டத்தில் இருக்கிறது.

வரதரின் சிலைக்கு பழைய சீவரத்தில் தான் கல் எடுக்கப்பட்டது. இந்த நினைவை போற்றும் வண்ணம் பொங்கலுக்கு மறுநாள் பழைய சீவரத்திற்கு காஞ்சி வரதராஜ பெருமாள் கொண்டுவரப்படுகிறது. முதல் நாள் இரவு 10 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு பழயசீவரத்தில் காட்சியளிப்பார். பிறகு மீண்டும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை  வரதராஜப் பெருமாள் கோவிலில் காட்சியளிப்பார். 

பழைய சீவரம் பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக திகழ்ந்துள்ளது. காஞ்சியை அடுத்த பல ஊர்களில் அக்காலத்தில் சீவரத்தார் ஆகிய பௌத்தர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் சிறக்க வாழ்ந்த ஊர்கள் சில சீவரம் எனவும் பழைய சீவரம் எனவும் வழங்கப் பெற்றன. பின்வந்த சைவர்கள் தம் ஊராக்கி, சீவரத்தைச் சிவபுரமாக்கினார்.

எனினும் பின்வந்த முகமதிய (இஸ்லாமியர்) மன்னன் சீவரத்தை தன் மனைவியின் பெயரால் வாலாஜாபாத் என வழங்கினன். ஆனால் அவ்வூரைச்சுற்றியுள்ள மக்கள் இன்றும் அதைச் சீவரம் என்றே அழைத்து வருகின்றனர். பெருங்குடி, சென்னை அருகில் அருள்மிகு விநாயகர் கோவில் அருகிலும் சீவரம் என்ற ஊர் அமைந்துள்ளது. சீவரம் என்பது பௌத்த துறவிகள் (பிக்கு மற்றும் பிக்குணி) அணியும் ஆடை.

வராதராஜா பெருமாள் அத்தி வரதரானார். 
அத்தி வரதர் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள். திருக்குளத்தில் 40 ஆண்டுகள் இருக்கிறார். பின்னர் குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி அத்திவரதரின் சிலையை வெளியெடுத்து, கோயிலில் வைத்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பர். படுத்த நிலையிலும் நின்ற  நிலையிலும் வைத்திருக்கப்படும்.

இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் திங்கள் கிழமை முதல் ஜூலை 31 ஆம் நாள் புதன்கிழமை வரை படுத்த நிலையிலும் ஆகத்து மாதம் 1ஆம் நாள் வெள்ளிக்கிழமை முதல் ஆகத்து மாதம் 17 ஆம் நாள் சனிக்கிழமை வரை நின்ற நிலையிலும் 48 நாட்கள் வழிபடப்படும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு என்பதால், லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் தற்போதும் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் 1939 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் அத்தி வரதர் வெளியெடுத்து வழிபடப்பட்டது.

கி பி 1688 முதல் கி.பி 1710 வரை 22 ஆண்டுகள் வரதராஜர் காஞ்சியிலிருந்து வெளியேறி திருச்சியில் உடையார் பாளையத்தின் அருகில் உள்ள காட்டில்  பாதுகாப்புடன் இருந்தார். 1688ஆம் ஆண்டே முகலாயர் படையெடுப்பு வரக்கூடும் என்று உணர்ந்து இவ்வாறு செய்யப்பட்டது. 

ஆனால் அப்பகுதியை ஆண்ட அரசன் சிலையை மீண்டும் காஞ்சியில் நிறுவ அனுமதிக்கவில்லை. ஆத்தான் ஐயர் என்பவர் லாலா தோடர்மால் உதவி வேண்டினார். லாலா தோடர்மால் படை எடுத்து சென்று வென்று பெருமாள் சிலையை காஞ்சிக்கு கொண்டுவந்தார். இந்த செய்தி தயார் சன்னதி அருகில் உள்ள நீண்ட கல்வெட்டில் உள்ளது. 8.2.6 அருள்மிகு வரதராஜர் காஞ்சியிலிருந்து வெளியேற நேர்ந்த நிகழ்ச்சி என்ற  தலைப்பை  கல்வெட்டு அறியப்படும் செய்திகள்  இணைப்பை பார்க்கவும். ஆற்காடு நவாபின் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்த இஸ்லாமியரான ராஜா தோடர்மால் குடும்பத்துக்கு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மட்டுமல்லாமல் திருமலை திருப்பதியிலும் சிற்பங்கள் உண்டு.

1781ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று முதல் முறையாக அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஒரு மண்டலம் கோயிலில் வாசம் செய்த பின் மீண்டும் குளத்துக்குள் இறக்கப்பட்டிருக்கிறார். அதற்கு முன் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதர் வெளியே தோன்றியதாகவோ, 40 ஆண்டுக்கொரு முறை தோன்றி சேவை சாதித்ததாகவோ ஆழ்வார்கள் பாசுரங்களிலோ, கல்வெட்டுகளிலோ குறிப்புகள் இல்லை. 


ராபர்ட் கிளைவ் (Robert Clive) 
ராபர்ட் கிளைவ் மற்றும் அவரது இராணுவம் நவம்பர் 1751 சென்னையிலிருந்து காஞ்சிவரம் வரை அணிவகுத்து, காஞ்சிவரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்புற வளாகத்தில் தங்கினார். அப்பொழுது ராபர்ட் கிளைவுக்கு அதிக காய்ச்சலை உருவாக்கியது. ராபர்ட் கிளைவுக்கிருந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் அக்கோவில் அர்ச்சகரை ராபர்ட் கிளைவுக்கு பூஜை செய்ய வேண்டினார். அர்ச்சகர் துளசி தீர்த்தம் கொடுத்து அவருக்காக பூஜை செய்தார்.   

அடுத்த நாள் காலை ராபர்ட் கிளைவ் நோயின்றி இருந்ததை உணர்ந்தார். அதிசயமான ராபர்ட் கிளைவ் அர்ச்சகர் வரதராஜா ஆற்காட்டில் வெற்றி அளித்தால் அவர் கோயிலுக்கு கணிசமான பரிசை வழங்குவதாகவும் வேண்டினார். ஆற்காடு முற்றுகை ராபர்ட் கிளைவ் முழு வெற்றியை அளித்தது. ராபர்ட் கிளைவின் கைகளில் கருவூலம் விழுந்தது, கிழக்கு இந்திய கம்பெனி கர்நாடக மாகாணங்களின் முடிசூடா மன்னனார். 

வெற்றி பெற்ற கிளைவ் ஆற்காடு கோட்டையில் கருவூலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆபரணத்தை இறைவனிடம் வழங்கினார். மாக்கரே காந்தி (MAKARA KANDI) எனும் பெரிய நகை இன்று பிரசாதமாக இறைவன் வரதராஜனை அலங்கரிக்கிறது.


வெளிநாட்டினர்/  பிற மதத்தினர் அனுமதியில்லை
வெளிநாட்டினர் மற்றும் பிற மதத்தினரும் கோவிலில் நுழைய அனுமதிப்பதில்லை. அவர்கள் தொல்லியல் துறை அறிஞர்களாக இருந்தாலும் அனுமதியில்லை. 
சமஸ்கிருதம் / தமிழ்ப் பாடல்
இன்றும் சமஸ்கிருத பாடல்களைப் பாடுவதா? அல்லது தமிழ்ப் பாடல்களைப் பாடுவதா? என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மோதல் நிகழ்ந்துகொண்டுள்ளது. 
வடகலை மற்றும் தென்கலை 
மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதோருக்கு அனுமதி மறுப்பு. தங்களை கோவிலுக்குள் அனுமதித்து நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அவர்கள் காண்பித்தும் இறுதிவரை யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மதிக்கவில்லை.
படுகொலை
கா‌ஞ்‌சிபுர‌ம் வரதராஜ பெருமா‌ள் கோ‌யி‌ல் மேலாள‌ர் ச‌ங்கரராம‌ன் இக்கோவில் வளாகத்திலேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த அசுத்தத்தை நீக்க வழியில்லை வெளிநாட்டினர் மற்றும் பிற மதத்தினருக்கும் அனுமதியில்லை ஏற்புடையதாகயில்லை.    

பகவன் புத்தர் கோவில்
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பெரிய கோவில் இது. இக்கோவில் புத்தர் கோவில் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இங்கு பௌத்த பல்கலைக்கழகம் இருந்தது என்று கூறுகின்றார்.
கடம்பி மீனாட்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பல புத்தர் சிலைகளை புதைத்து பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது.
தல விருட்சம் என்பது அரசமரம் (போதி மரம்) புத்தருக்கு வரதர் என்ற சிறப்பு பெயர் உள்ளது. புத்தர் அரசர் என்பதால் வரதராசர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். போதி மரத்திற்கு பல பெயர்கள் உள்ளது. (சித்தார்த்தர்) அரசன் அமர்ந்த மரம் என்பதால் தமிழகத்தில் அரசமரம்  என்று அழைக்கப்படுகிறது. காஞ்சி வராதராசா பெருமாள் கோவில் தல விருட்சம் என்பது அரசமரம். அரசமரம் பௌத்த அடையாளம்.   
மேலும் விரிவாக படிக்க

திங்கள், மார்ச் 04, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXI மாங்காடு


அமைவிடம்
ஊர்                  : மாங்காடு (பூந்தமல்லிக்கு அருகில்)
வட்டம்          : திருபெரும்புதூர் வட்டம் (Sriperumbudur)
மாவட்டம்    : காஞ்சீவரம் மாவட்டம் -600122

கோவில்கள்:   

01. மாங்காடு காமாட்சியம்மன் கோயில்  (Kamatchi Amman Temple)
02.மாங்காடு வெள்ளீசுவரர் கோயில் (Valliswara Temple)
03. பட்டு விநாயகர் கோயில்  (Vinayagar Temple)
04. பட்டு தர்மராஜர் கோயில் (Dharmaraja Temple)

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் இருந்து பட்டு விநாயகர் கோயில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விநாயகர் கோயில் மற்றும் தர்மராஜர் கோயில் இவ்விரண்டு கோவில்களும் பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது. தர்மராஜர் கோயில் விநாயகர் கோயிலில் இருந்து 200 அடி தூரத்தில் உள்ளது. இங்கு தான் புத்த விகார் இருந்தது. பட்டு என்ற இடத்தில் இருந்த புத்தர் சிலையை பற்றி அறிய இங்கு அளித்துள்ள தொடர்பை பயன்படுத்துங்கள் காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் X பட்டு

தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையம், போரூர், வடபழனி மற்றும் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து (CMBT) மாங்காட்டுக்கு செல்லலாம். மாமரங்கள் நிறைந்த இடம் என்பதால் மாங்காடு என்று பெயர் பெற்றது. மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் ஒரு மாமரம் இல்லை. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் “அழகிய சோழ நல்லூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாங்காடு வெள்ளீசுவரர் கோயில். இது மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ளது. 

தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி
 கல்வெட்டு
வெள்ளீசுவரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சுந்தரபாண்டிய தேவர் (Sundarapandiyadeva) (1251-64) காலத்தில், அவரது 5ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் இங்கிருந்த பள்ளிக்கு (புத்த விகார்) மாங்காடு கிராமம், பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று எழுதப்பட்டுள்ளது. (788, 358 of 1908 Top. List Vol. 1.)
புத்தர் சிலைகள்
மூன்று புத்தர் சிலைகள் இவ்வூரில் இருக்கிறது. இவற்றில் ஒரு புத்தர் சிலை தலையுடைந்து கிடக்கிறது என தமிழும் பௌத்தமும் என்ற தம் நூலில் 1940ல் பதிவு செய்து இருக்கிறார். இன்றும் மாங்காடு புத்தர் சிலையை பற்றி குறிப்பிடும் நூலாசிரியர்கள் இன்றும் அங்கு புத்தர் சிலைகள் இருப்பது போன்று தமிழ் ஆராட்சி பேரறிஞரின் பதிவை அப்படியே பதிவு செய்கின்றனர்.
தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்
இந்த மூன்று புத்தர் சிலைகளும் 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும்,  இந்த மூன்று புத்தர் சிலைகளும் தற்பொழுது மாங்காட்டில் இல்லை, இச்சிலைகள் எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை என்றும் Buddhist Remains in South India என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 
இந்த மூன்று புத்தர் சிலை பற்றிய தகவல் சென்னை அருங்காட்சியகத்தில் மற்றும் அதன் அருகில் இருக்கும் தொல்லியல் துறையிடமும் கேட்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பௌத்த வரலாற்று அடையாளத்தை காப்பதில் சிறிது கூட அக்கறை இல்லை. 

திங்கள், ஜனவரி 14, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XX



சிலையமையப்பு 
செம்பு, வெள்ளி, பித்தளை ஆகியவற்றை கலந்து செய்யப்பட்ட சிலை. நிலத்தை தொடும் முத்திரை - உயரம் 9.5 cm அகலம் 6.5 cm.12 ஆம் நூற்றாண்டு - வலது கை (Right Hand), கழுத்து மற்றும் தலையில் ஆபரணங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. நெற்றி திலகத்துடன் காணப்படுகிறது (Urna) - தாமரை அமர்வு 
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம்
1966 விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியக விவரப்பதிவில் (Victoria and Albert Museum) இந்த புத்தர் சிலையை பற்றி பதிவு செய்யப்பட்டது. 
இந்த புத்தர் சிலை 1917க்கு முன்பு காஞ்சிபுரம் அருகே செங்கல்பட்டு வட்டத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இச்சிலை 13 (அ) 14ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டிருக்கலாம்.  
இந்த மாதிரியாக வடிவமைக்கப்பட்ட சிலை, (Pala Period) பால காலத்தின் பிற்பகுதியின் கிழக்கு இந்திய சிற்ப மாதிரியை மிக நெருக்கமாக கொண்டுள்ளது. இச்சிலை விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.