வெள்ளி, அக்டோபர் 28, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVIII காஞ்சி கொடை



பீகாருக்கு காஞ்சியின்  கொடை 

பீகார் என்ற ஒரு மாநிலத்தின் சொல்லே விகார் என்ற சொல்லின் மருவு. காஞ்சீவரம் (Conjeevaram) என்ற சொல்லும் சீவரம் என்ற சொல்லின் மருவுதான். காஞ்சீவரத்தில் இன்றும் பழைய சீவரம் என்ற இடம் இருக்கிறது.

சீவரம் என்பது பௌத்த துறவிகள் (பிக்கு மற்றும் பிக்குணி) அணியும் ஆடை. சீவரம் மூன்று ஆடைகளை கொண்டது.
ஒன்று உள்ளாடை (Antarvasaka)
மற்றோன்று மேலாடை (UttaraSanga)
மூன்றாவது  வெளியாடை (Sanghati). 
இந்த மூன்று சீவர ஆடையை திரிசீவரம் என்பவர். இந்த திரி சீவரம் என்ற சொல் தான் மருவி திருச்சி (திரிசீ-  திரி சீவர பள்ளி) யாக மாறியிருக்கலாம் என்பது என்கருத்து. 01. திரி 02. சீவரம் 03.பள்ளி இந்த சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை. இவை பாலி மொழி சொற்கள். இது மேலும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது          


குர்கிஹார்க்கு  காஞ்சியின்  கொடை 
குர்கிஹார் ஒரு மலை கிராமம். இது கயா மாவட்டத்தில் உள்ளது. பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பௌத்த இடமாக இருந்தது. இது கயாவில் இருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

சீன அறிஞர்கள் பாகியான் மற்றும் யவங் சுவாங் இங்கு வந்து இருக்கின்றனர். ஜெனரல் டிட்டோ (Ditto) இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார். அவர் இங்கிருக்கும் தொல்பொருள்களை முதன் முதல் (1847) கவனத்திற்கு கொண்டுவந்தார். இரண்டாவது முறை இந்திய தொல்பொருள் துறையை உருவாக்கிய ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காம் அவருடன் இணைந்து அகழாய்வு குழிகள் எடுத்து  பல பௌத்த சிற்பங்களை வெளி கொண்டுவந்தார்.  ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காமும் இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார் (1861-62  மற்றும் 1879-80).

திடீர் என 1930 ஆம் ஆண்டு இக்கிராமத்திலிருந்து 226 வெண்கல தொல்பொருள்களும் 5 பிற பொருள்களும் குர்கிகரில் உள்ள ஒரு அறையில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு வெளி கொண்டுவந்து உலகறிய செய்யப்பட்டது. அவைகள் புத்தர், அவலோகித்தர், லோகநாதர், தாரா தேவி, மணி, குவி மாடம், பீடம். இவைகள் அனைத்தும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. பெரும்பாலும் வெண்கலத்தால் ஆனவை. ஒரு சில மட்டும் தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பூசப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தும் பாட்னா பொருட்காட்சியாகத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. 231ல் 93ல் நாகரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. .

இந்த குறிப்பில் இருந்து கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொடையாக அளிக்கப்பட்ட வெண்கல சிலைகளும், பீடங்களும், மணிகளும் தெரிய வந்திருக்கிறது. பல எழுத்துக்கள் தெளிவாக இல்லை. சில இரண்டு அல்லது நான்கு எழுத்துக்கள் மட்டுமே இருக்கிறது. எனவே அவ் எழுத்துக்களை கொண்டு கொடை அளித்தவர் மற்றும் எங்கிருந்து அளிக்கப்பட்டது என அறிய முடியவில்லை.

கொடை அளித்த பௌத்த பிக்குகளின் பெயர்களும் கொடையின் விவரங்களும்.

01. அம்ருதவர்மன்
நாகரி எழுத்தில் இருந்து அறியப்படும் செய்தி : இவர் அகிலா (Akkila) என்று தொடங்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார். தலைமை பொருளாளர் அவதத்த நாகாவை (Avadata Naga) போன்று பிரபலமானவர் இவர் காஞ்சியில் நன்கு அறியப்பட்டவர்
கொடை: நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை, காக்கும் கை பஞ்ச ரத பீடத்தின் மேல் இரு தாமரை பீடம் (Double Lotus Pedestal). நெற்றி திலகம், ஞான முடிமீது சுடர் - உயரம் : மூன்று அடி பத்து அங்குலம் ( 3' 10") - அகலம் ஒரு அடி ஏழு அங்குலம் ( 1' 7") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9589 - நூல் 
குறிப்பு S.No 6 பக்கம் .No 126

02. புத்தவர்மன் 03. தர்மவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி அரை அங்குலம் (1' 1/2") - அகலம் ஒன்பது அங்குலம் ( 9") - தொல்பொருள் பதிவு எண் : 9597 - நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு -  நூல்  குறிப்பு  S.No 20 பக்கம் 130
04. தூதசிம்மன் 
கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஐந்து முக்கால் அங்குலம் ( 5 3/4") - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") - நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9602 - நூல்  குறிப்பு : S.No 114 பக்கம் 146
05. பிரபாகரசிம்மன்
(A) கொடை:அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை - ஒரு தாமரை பீடம் - மூன்று ரத பீடம் - உயரம் : எட்டு அங்குலம் ( 8" ) - அகலம் : மூன்று அங்குலம் ( 3") - நூற்றாண்டு பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9637 - நூல்  குறிப்பு : S.No 50 பக்கம் 135

(B) கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஆறு அங்குலம் ( 6" ) - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") -நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9604 -  நூல்  குறிப்பு - : S.No 115 பக்கம்146
06. மஞ்சுஸ்ரீ வர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : பன்னிரண்டு அரை அங்குலம் ( 12 1/2" ) - அகலம் : ஏழரை அங்குலம் ( 7 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9618 -  நூல்  குறிப்பு : S.No 79 பக்கம் 139

(B) கொடை: நின்ற நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலாம் ( 1' 1" ) அகலம் ஆறரை அங்குலம் ( 6 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9619 - நூல்  குறிப்பு : S.No 79 பக்கம் 139
07. வீரியவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் :பத்து அங்குலம் (10") - அகலம் ஐந்து அங்குலம் ( 5") - தொல்பொருள் பதிவு எண் : 9633 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : ஒன்பது அங்குலம் (9") - அகலம் : ஐந்து அங்குலம் (5") - தொல்பொருள் பதிவு எண் :9725 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 17 பக்கம் 129

(B)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, அறவழி முத்திரை - உயரம் : ஏழு அங்குலம் (7") - அகலம் நான்கு அங்குலம் ( 4") - தொல்பொருள் பதிவு எண் : 9634 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : எட்டு அங்குலம் (8") - அகலம் : நான்கு அங்குலம் (4") - தொல்பொருள் பதிவு எண் :9810 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 14 பக்கம் 128
08.  புத்தவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஐந்தரை அங்குலம் (5 1/2") - அகலம் மூன்றே கால் அங்குலம் ( 3 1/4 ") - தொல்பொருள் பதிவு எண் : 9775 - - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 11 பக்கம்128

(B) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9650 நூல்  குறிப்பு: S.No 207 பக்கம் 159
09  புத்த ஞானர் 10. சுகசுகர் 
கொடை: பீடம் - அளவு : 11" x 5 1/2" x 8" தொல்பொருள் பதிவு எண்: 9728 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 166  பக்கம்156
11. விரோசன சிம்ம ஸ்தவிரர் 
கொடை: பீடம் - அளவு : 13" x 7" x 7 1/2" தொல்பொருள் பதிவு எண்: 9729 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 164 பக்கம் 155 -
இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில், பிறந்து, வேத வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் அன்னும் பௌத்தகுருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுபெயர் கொண்டவர்
12. நாகேந்திரவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலம் (1' 1") - அகலம் ஏழு அங்குலம் (7")- தொல்பொருள் பதிவு எண்: 9789 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 15 பக்கம் 129
13.  சந்திரவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒன்பதே கால் அங்குலம் (9 1/4") - அகலம் ஐந்து அங்குலம் (5")- தொல்பொருள் பதிவு எண்: 9759 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 21 பக்கம் 130
14.  ரகுலவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : எட்டரை கால் அங்குலம் (8 1/2") - அகலம் நான்கரை அங்குலம் (4 1/2")- தொல்பொருள் பதிவு எண்: 9752 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 49 பக்கம் 134
15.  வீரவர்மர்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை- உயரம்: பத்து அங்குலம் (10 ") - அகலம் நான்கு அங்குலம் (4")- தொல்பொருள் பதிவு எண்: 9632 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 9 பக்கம் 127
16.  அவலோகித சிம்மர்
கொடை: பீடம் - அளவு : 2 1/2" x 4" தொல்பொருள் பதிவு எண்: 9806 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு -  நூல்  குறிப்பு : S.No 165 பக்கம் 156
 இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்
17.  புத்தவர்மன் (கந்த குடி )
(1) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9648 நூல்  குறிப்பு: S.No 205 பக்கம் 159
(2) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9649 நூல்  குறிப்பு: S.No 206 பக்கம்159
(3) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9651 நூல்  குறிப்பு : S.No 208 பக்கம் 159
இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்.


~*~
01. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் .என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.

02. நூல் குறிப்பு பக்கம் Patna Museum Catalogue of Antiquities (1965)


நூல் குறிப்புகள்



04. பௌத்தமும் தமிழும்  தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி

சனி, அக்டோபர் 15, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVII சாக்கிய நாயனார் கோவில்

சாக்கிய நாயனர்  கோவில்  (அ) திருமிகு வீரட்டானேசுரர்   கோவில்


அமைவிடம் 
ஊர்                            : கோனேரி குப்பம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்
சாக்கிய நாயனர்  கோவில் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனேரிகுப்பத்தில் உள்ளது. மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில் உள்ளது இக்கோவில்.

பௌத்த அடையாளங்கள் 
மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இங்குள்ளது. இக்கோயில் உள்ளே புத்தரது பாதபீடிகை மற்றும் சாக்கிய நாயனார் படிமம் (அஸ்தி) உள்ளது.


டாக்டர் ம. இராசமாணிக்கனார் 
நம்பியாண்டார் நம்பிக்கு ( கி. பி 985 - 1014) ஏறத்தாழ 100 ஆண்டுகள் பின் வந்த சேக்கிழார் (கி. பி 1113 - 1150) பெரிய புராணத்தை எழுதினார். அப்பர் மற்றும் சம்பந்தர்க்கு காலத்திற்கு முற்பட்டவர் சாக்கிய நாயனார். சாக்கிய நாயனார் காலம் கி, பி 400 - 600. சாக்கிய நாயனார் காஞ்சிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார்.  காஞ்சிக்கு சென்று பல சமயங்களை ஆய்வு செய்தவர். சாக்கியர் என்பது காரணப்பெயர்.  பௌத்த வேடத்துடன் சிவலிங்க வழிபாடு செய்தவர். சிவனை கல் எறிந்து வழிபட்டார்.  ( நூல் பெரிய புராண ஆராய்ச்சி )  

 எழுத்தாளர் மு.நீலகண்டன் 
பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் இருந்தமையால் வெளிப் படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலாமற்போயிற்று. இதனால், பௌத்தத் துறவிக்கோலத்தை மாற்றாமல் ஒரு சிவலிங்கத்தைச் சிறுகல்லால் எறிந்து பூசை செய்து வந்தார். 

அறிஞர் அண்ணாவின்  வினாவும்  விளக்கமும்
01. சாக்கியர், முதலில் எந்தச் சமயவழி நின்றார்?
சாக்கியர் முதலில் எந்தச் சமயவழி நின்றார் என்பதனை அறிய புராணத்தில் எவ்வித சான்றும் இல்லை. சாக்கியர் வேளாளர் மரபிலே தோன்றியவர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று எப்படிக் கூறமுடியும்? 
பெரியபுராணம் எழுதுவதற்கு முதல் நூல் வகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பிக்கும், பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாருக்கும் சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தை சேர்ந்தவர் என்று தெரியாதா அல்லது தெரிந்தும் மறைத்தார்களா?
02. சாக்கியர்  என்ன ஆராய்ச்சி செய்தார்?
சாக்கியர் எந்தச் சமயம் உண்மையான சமயம் என்று ஆய்வு செய்தாரா அல்லது  துன்பங்களை நீக்கக்கூடிய சமயம் எது என்று ஆய்வு செய்தாரா?
03. சாக்கியருக்குத் துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்  ன்ற எண்ணம் ஏன் தோன்றிற்று? எப்படித் தோன்றிற்று? 
எந்த ஒரு சமயத்தையும் சாராது பொதுநெறியில் நிற்கும் ஒருவருக்குப், பிறப்புத் துன்பங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றாது. காரணம் பிறப்பினாலும் இறப்பினாலும் துன்பங்களே உண்டாகின்றன என்ற கோட்பாடு சமய நூற்களில் தான் வலியுறுத்தப்பட்டுள்ளன. பொது அறிவு நூல்களில் அது கூறப்படவில்லை.
சாக்கியர் தாம் இருந்த முதல் சமயத்தில் துன்பங்களை நீக்குவதற்குரிய வழிகள் காணப்படவில்லை என்பதால் துன்பங்களை நீக்கிக்கொள்ள வழிகளை காட்டும் ஒரு சமயத்தை நாட விரும்பியிருக்க வேண்டும்.
04. சங்கமங்கை என்னும் ஊரில் இருந்த சாக்கியர் காஞ்சீபுரத்துக்குச் சென்றதற்கு காரணம் என்ன? 
இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. 01. சாக்கியர் கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார். 02. சாக்கியரின் ஊரில் சமய நூல்களைக் கற்றுத் தெளிந்த எவரும் இல்லை அதனால் அவர் தம்முடைய ஊரைவிட்டுக் காஞ்சீபுரம் சென்றார்.
முதல் காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், சாக்கியர் கல்வியறிவில் சிறந்தவர். அவர் ஓர் ஆராய்ச்சி நிபுணர். இதனை பெரியபுராணமே கூறுகிறது.  எனவே, அவர், கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார் என்று கூறமுடியாது.
இரண்டாவது காரணம்  ஏற்புடையதாக இருக்கிறது. தம்மை விட கல்வியறிவிலும், சமய ஆராய்ச்சியிலும் திறமையுடையோர் காஞ்சீபுரத்தில் இருக்கின்றனர் எனவே அங்கு சென்று தம்முடைய ஐயப்பாட்டினை நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக் காஞ்சீபுரம் சென்றார் என்பது சரியானதாக இருக்கும். 
05. சாக்கியரை பிக்குவாக (பௌத்த துறவியாக) மாற யாராவது அவரை கேட்டார்களா?
காஞ்சி சென்ற  சாக்கியர் பல வழிகளில் தம்முடைய ஆராய்ச்சியைச் செய்து பௌத்த சமயத்தைத் தழுவினார். பௌத்த பிக்குவாகவும் மாறினார். பௌத்தம் ஏற்றும் அவர் தம்முடைய ஆராய்ச்சியை நிறுத்தாமல் நடத்தி வந்தார். கடைசியில் சைவமே சிறந்த சமயமெனக் கண்டு அச்சமய வழி நின்றார் என்றும் கூறப்படுகின்றது.
முதலில் அவர் செய்த ஆராய்ச்சியினால்தான் பௌத்தம் ஏற்றார். ஏற்ற பின்னரும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என்பது விந்தையானது. தம்முடைய ஐயப்பாட்டினை பௌத்தம் நீக்கவில்லை என்றால் பௌத்தம் தழுவிய சாக்கியர் பிக்குவாக மாறியது ஏன்?
சாக்கியரை பிக்குவாக மாற யாராவது அவரை கேட்டார்களா? அப்படி கேட்டிருந்தாலும், இன்னும் என்னுடைய ஐயம் நீங்கவில்லை, ஆராய்ச்சியும் முடியவில்லை, இன்னும் பல சமயங்களை ஆராயப்போகின்றேன் என்று கூறியிருக்கலாம்.
06. சாக்கியர் சைவ சமயத்தை பின்பற்ற அச்சப்பட்டாரா?
பௌத்தம் ஏற்ற பின் சாக்கியர் தொடர்ந்த ஆராய்ச்சியால் சைவமே உண்மைச் சமயமெனக் கண்டறிந்த பின்னர் அதனை பின்பற்ற  அச்சப்பட்டார் என்பது தெரியவில்லை. பொய் எது மெய் எது என்று கண்டறிந்த ஒருவர் பொய்யை புறக்கணித்து விட்டு மெய்யை பின்பற்ற வேண்டும்.

சாக்கியர் தம்மை பிக்குவாக பிறருக்கு காட்டிக்கொண்டார்.(சீவர ஆடையை தவிர்க்கவில்லை. சாக்கியர் என்ற காரண பெயரையும் நீக்கவில்லை. பிக்கு சங்கத்தில் தான் தாங்கினார். இறந்த பின்னும் அவரின் படிமம் அருகில் புத்த பாதம் வைக்கப்பட்டது )

சைவ சமயத்தைப் பின்பற்றுவதற்கு அறிகுறியாக எதையும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. (திருநீறு  பூசிக்கொள்ளவில்லை அக்கமணியை அணியவில்லை)
07. சைவத்தை ஆராய்ச்சி செய்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாதா? 
பல சமயங்களை ஆராய்ந்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாமல் இருக்குமா? உண்மை என்னவென்றால் சினம் கொண்டு சிவலிங்கத்தை  கல்லால் அடித்தார் என்பது தான் உண்மை.
08. பௌத்தரான சாக்கியர் எவ்வாறு பெரிய புராணத்தில் இடம் பெற்றார்? 
பெரிய புராணம் என்ற ஒரு நூலை வெளியிட்டு அதன் வாயிலாகச் சைவ சமயத்துக்கு உயர்வு தேட முயன்றவர்கள் பல கதைகளைப் புனைந்தும், மாற்றியும் திரித்தும் தமக்கேற்றபடி தொகுத்துக் கொண்டார்கள். திரித்துக் கூறப்பட்ட கதைகளில் சாக்கியர் நிகழ்ச்சியும் ஒன்று. பௌத்த பிக்குவின் வரலாற்றைத் தலைகீழாக்கி அதனை ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டனர்
சிலையமைப்பு
பௌத்தத்தில் புத்தருக்கும் போதிசத்துவர்க்கும் தான் சிலைகள் அமைப்பது வழக்கம். என்வே சாக்கிய நாயனாருக்கு சிலை அமைந்த்திருக்க வாய்ப்பு இல்லை.  கோவில்களில் காணப்படும் சாக்கிய நாயனாரின் சிலைகளில் பௌத்த அடையாளங்கள்  ஏதும் இல்லை. அவரின் சிலை சைவராக அமைக்கப்பட்டுள்ளது. 

நின்ற நிலை. வணங்கும் கை. தொங்கிய முடி. கால் அணி (தண்டை). கை அணி. கழுத்து அணிகள். இடையணிகள். முப்புரி நூல். தோள்பட்டை அணி.       

உதாரணமாக 63 நாயன்மார்களில் சாக்கிய நாயனாரின் தலைமுடியை (இரு பக்கமும் தொங்கும் தலை முடி) சடைமுடியாக மாற்றினால் அவர் திரு நீலகண்டர் ஆவார்.   இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  திருமுடியாக மாற்றினால் அவர் இயற்க்கை நாயனார் ஆவார்.  இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  வலது பக்கம் சாய்ந்த சடைமுடியாக மாற்றினால் அவர் இளையான் குடி மாறனார் ஆவார். இரு பக்கமும் தொங்கும் தலை முடியை உருத்திராக்க முடியாக மாற்றினால் அவர் மெய்ப்பொருள் நாயனார் ஆவார். திருமுடியும் தொரட்டி இருந்தால் அவர் வீரன் மீண்டார் ஆவார்  

விளக்கம் 
01. பௌத்தம் ஏற்பது எளிது. அனால் பௌத்த பிக்குவாக மாறுவது எளிதானது இல்லை. காரணங்களில் ஒன்று மனதையும் செயலையும் மாசு அற்றதாக செய்ய பௌத்தம் இல்லறத்தாரை ஊக்குவிக்குமே தவிர கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் பிக்குவாவது எளிதானது அல்ல. ஒருவரை கட்டாயப்படுத்தி பிக்குவாக்க முடியாது. பிக்குகள் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. திரி பிடகத்தில் (முக்கூடை) ஒரு பிடகம் பிக்குகளுக்கு உரியது. பிக்குவான ஒருவர் துறவை துறந்து இல்லறம் ஏற்பது என்பது மிக எளிது. எனவே சாக்கியர் விரும்பினால் பௌத்த துறவு வாழ்வை நீக்கி வாழ்ந்திருக்கலாம்

02. சாக்கிய நாயனர்  கோவில் தூண்கள் பல அக்கோவில் அருகில் புதர் போன்று இருக்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதர்கள் இல்லாமல் இருந்தால் வேறு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்று கண்டறிய உதைவியிருக்கும் 

மேலும் விரிவாக படிக்க உதவும் வலைத்தளங்கள் 
அறிஞர் அண்ணாவின் வினாவும் விளக்கமும்
எழுத்தாளர் மு.நீலகண்டன்