வியாழன், ஜூன் 27, 2024

சபரிமலை கோவில் புத்த விகாராகும்


01. உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவில் தடைகளை நீக்கியது

01. இந்துக்கள் அல்லாதவர்கள், சபரிமலை ஐயப்பன் சிலைகளை வழிபடாதவர்களுக்கும் சபரிமலை கோவில்களுக்குள் செல்ல உரிமை இல்லை.  

02. இந்துவாக இருந்தாலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல உரிமை இல்லை. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு பழங்காலத்தில் தடை ஏதும் இல்லை. சபரிமலை கோவில் புத்த கோவிலாகும் என கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் இந்தத் தடைகளை நீக்கியுள்ளது.  

02.சரணம் மந்திரத்துடன் தொடர்புடைய வேறு எந்த கடவுளும் இந்து  மதத்தில் இல்லை.

சரணம் என்ற சொல் பௌத்த மதத்தில் இருந்து உருவானது. திரி சரணம் வழிபாடு.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
புத்தரை, அறிவொளியை, பௌத்த சங்கத்தை அடைக்கலம் புகுகிறேன் என்பது அதன் பொருள். இது துறவு மற்றும் மன ஒழுக்கத்தை பரிந்துரைக்கும் பௌத்த கொள்கை. இன்று இவை சபரிமலையில் சுவாமி சரணம் அய்யப்போ என மாறிவிட்டன.

03. இந்து மதத்தில் சாதிய வேறுபாடே முதன்மையானது.

சபரிமலையில் வர்க்கப் பாகுபாடு இல்லை. ஐயப்ப பக்தர்கள் தங்களை மற்றும் ஒருவரையொருவர் அய்யப்பாக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இது பௌத்தத்தின் அம்சமாகும். சமத்துவத்தை குறிப்பிடுகிறது. 

 04. சாஸ்தா வழிபாடு புத்தரின் வழிபாட்டிலிருந்து உருவானது

சாஸ்தா வழிபாடு புத்தரின் வழிபாட்டிலிருந்து உருவானது.  சாஸ்தா என்பது புத்தரின் பெயர்சாஸ்தா என்பதை தமிழில் சாத்தான் என்று குறிப்பிடப்படுகிறது. சாத்தான் என்பது இழிவான சொல் என்பது போன்று உருவாக்கப்பட்டுவிட்டது. மூதேவி என்பது மூத்த தேவி என்று பொருள். மூதேவி என்ற சொல் இழிவான சொல்லாக பார்க்கப்படுகிறது. இந்து மத நூல்களில், புராணங்களில் தர்ம சாஸ்தா கடவுளைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. சுவாமி சரணம், தர்மசாஸ்தா சரணம் என மாறிவிட்டன. அய்யப்பன் பெரும்பாலும் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். சாஸ்தா என்பது புத்தரின் மற்றொரு பெயர். இந்த ஐயப்ப வழிபாட்டு முறை இந்தியாவின் வட பகுதிகளில் காணப்படவில்லை. டி.ஏ.கோபிநாத ராவ் ஆரம்பகால இந்து இலக்கியங்களில் ஐயப்பனைப் பற்றிய குறிப்பு இல்லை என்றுரைக்கிறார்.

05. சீலம்

அய்யப்ப பக்தர்கள் புனித யாத்திரைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் சீலத்தை கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள். சீலம் (சீல) என்னும் பாலி மொழிச்சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். சீலத்தை  பஞ்ச சீலம் (ஐவகையொழுக்கம்), அஷ்ட சீலம் (எட்டு ஒழுக்கங்கள்) தசசீலம் (பத்து ஒழுக்கங்கள்) என்று மூவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

01 . பஞ்ச சீலம் - இல்லறத்தாருக்கு உரியது 

02 . அஷ்ட சீலம் - சற்று உயர் நிலை அடைந்தவருக்கு உரியது

03 . தச சீலம் - இல்லறம் துறந்த பிக்குக்கு உரியது. 

 

உடலால், நாவினால், மனதால் தவிர்க்க வேண்டிய தீவினைகள்

உடலால்  01. கொலை 02.களவு 03.காமம்

நாவினால் 04.பொய் கூறல் 05.புறங் கூறல் 06. கடுஞ் சொல் கூறல் 07.பயனில் சொல் கூறல்

மனதால் 08.வெஃகல் - பிறர் பொருள் விழையாமை 09. பொல்லாக் கட்சி 10.வெகுளல். 

அய்யப்ப பக்தர்கள் களவு,  பொய், உல்லாசப்பயணங்கள், சூதாடுதல், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல், விளையாட்டு வேடிக்கைகள் தவிர்த்தல், படுக்கை, தலையணைகளை நீக்கி தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுத்தல் போன்றவை பௌத்தர்கள் கடைப்பிடிக்கும் சீலத்தை ஒத்திருக்கிறது. இந்த சீலங்களை இந்து/வைதீக கடவுள்களே பின்பற்றுவதில்லை பக்தர்கள் பின்பற்றுகின்றனர் என்றால்  சபரிமலை  புத்த விகாரக இருந்தது என்பதற்கு சான்று. 

 06. சபரிமலை முதலில் பழங்குடியினரின் வழிபாட்டுத் தலம்

இன்றும் அய்யப்ப பக்தர்கள் அணியும் ஆடைகள் அட்டவணை படுத்தப்பட்ட/பழங்குடியினரைப்(SC/ST) பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

07. ஐயப்பன் முத்திரை (கற்பிக்கும் கை) புத்தரின் முத்திரை

அய்யப்பனுக்குக் கூறப்படும் முத்திரை கற்பிக்கும் கை. கையின் ஆள்காட்டி விரலை கட்டை விரலுடன் இணைத்து, மற்ற மூன்று விரல்களும் வானோக்கிய வண்ணம் நீண்டிருக்கும்.  கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒரு வட்டம் உருவாகும். இம்முத்திரையை வியக்கான முத்திரை, பாதி அறவாழி கை (தம்ம சக்கர முத்திரை) எனவும் அழைக்கப்படுகின்றது. புத்தர் தனது போதனைகளை விளக்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்பட்டது கற்பிக்கும் கை. கற்பிக்கும் கை அறிவுசார்ந்த வாத, விவாதத்திற்கான குறியீடு.