வெள்ளி, ஜூன் 24, 2022

சமத்துவ நாள் - குடியரசு தினம்

சேவா பி.எஸ்.என்.எல் SC/ST பணியாளர்கள் நலச் சங்கம் (SEWA BSNL SC/ST Employees Welfare Association) ஒரு நாள் கருத்தரங்கம் 26/01/2022 அன்று இக்சா மையம் (ICSA)  ஜீவன ஜோதி வளாகம், எழும்பூர், சென்னை-8ல் இரு தலைப்புகளில் நடத்தியது.

முதல் அமர்வு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை "பாபா சாகேப் அம்பேட்கர் அவர்களின் இந்திய அரசமைப்புச் சட்டமும்  குடியரசு தினமும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கியவர் S.ஜெயராஜ் MA ML  அகில இந்திய பொதுச் செயலாளர் BSNL SEWA  & தலைவர் ABI.

இரண்டாம் அமர்வு மதியம் 02.00 மணி முதல் 5.00 மணி வரை "பாபா சாகேப் அம்பேட்கர் அவர்களும், பூனா ஒப்பந்தமும்"  என்ற தலைப்பில்  கருத்துரை வழங்கியவர் N.முத்துராமன்  பயிற்சியாளர் BSP BVF  

அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மாலையில் உரையாற்றினார். பூனா ஒப்பந்தம் (1932) 90 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது, குடியரசு தினம் (1950) 72 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பதை ஒரு நாள் கருத்தரங்கமாக நடத்திய SEWA BSNL வாழ்த்தி உரையை துவங்கினார்.


 குடியரசு நாளுக்கும் காந்திக்கும் எந்த தொடர்புமில்லை

01) இரண்டு வாரமாக செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தமிழக தலைவர்களின் புகைப்படங்கள் தாங்கிய வாகனங்கள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டதை விவாதமாக நடத்தப்பட்டுள்ளது. குடியரசு நாள் தினத்திற்கும் நிராகரிக்கப்பட்ட தலைவருக்கும் எந்த தொடர்புமில்லை. 

02) 1967லிருந்து சமூக ஆட்சியை அமைத்தோம் என்னும் திராவிட ஆட்சி குடியரசு நாள் அன்று காந்தி படத்தை வைத்து கொடியேற்றியதும் உண்டு. 15/08/1947 சுதந்திரம் பெற்ற நாள். 5 மாதம் கழித்து 30/01/1948ல் காந்தியின் வாழ்வு முடிந்துவிட்டது. 26/01/1950 குடியரசு நாள். காந்தியின் இறப்புக்கு பின் குடியரசு நாள். காந்திக்கும், குடியரசு நாளுக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் காந்தி படத்தை வைத்து இன்றும் கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடி வருகின்றனர். 

 சட்ட நாள் (அ) Dr அம்பேத்கர் நாள் என்று கொண்டாடப்படவேண்டும்

குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் என்ன வேறுபாடு? திராவிட அரசியலை சார்ந்திருப்பதால் நாம் இதை தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். 2005ல் ஒன்றிய அரசு ஒரு GO (Government Order) கொண்டுவந்தது. நவம்பர் மாதம் 26ஆம் நாளை அரசியலமைப்பு தினமாக (Constitution Day) கொண்டாடவேண்டும் என்று. அன்று இருந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இந்த GO கொண்டுவந்தனர். மற்ற நாடுகளில் அரசியலமைப்பு தினம் எப்படி கொண்டாடிவருகின்றனர். இந்தியாவில் மக்கள் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கின்றனர். ஆகவே இந்த நாளை எப்படி கொண்டாடவேண்டும். ஆரம்ப பள்ளிகளிலிருந்து, நடுநிலைப்பள்ளிகளிலிருந்து, உயர்நிலை பள்ளிகளிலிருந்து, நிர்வாகத்திலிருந்து, மத்திய அரசு, மாநில அரசு, எப்படி கொண்டாடவேண்டும் என்று சுற்றறிக்கை (Circular) அனுப்பப்பட்டது. நவம்பர் மாதம் 26ஆம் நாள் அன்று கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, மாதிரி பாராளுமன்றம் நடைபெற வேண்டும், மக்கள் விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும். (Law Day  or Dr Ambedkar Day) சட்ட நாள் (அ) Dr அம்பேத்கர் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று 2005ல் சுற்றறிக்கை கொண்டுவரப்பட்டது.

நவம்பர் 26க்கும் ஜனவரி 26க்கும் என்ன வேறுபாடு? 

இந்த கேள்வி IAS தேர்வு வினா. நவம்பர் 26ல் 15 சரத்துகள் (Articles) மட்டுமே நடைமுறைபடுத்தினர். மற்ற சரத்துகள் 380 (395-15) ஜனவரி 26ல் நடைமுறைபடுத்தப்பட்டது. 

TT கிரிஷ்ணமாச்சாரி - இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும்-  

அரசியலமைப்பு தினம் என்று சொன்னால் Dr அம்பேத்கரை தவிர வேறு யாரையும் சொல்லமுடியாது. அரசியல் நிர்ணய சபையில் 7 பேர் கொண்ட உறுப்பினர்களை கொண்டது.  ஒரு உறுப்பினர் பதவி விலகினார் (Resigned). ஒரு உறுப்பினர் இயற்க்கை எய்தினார் (Death). ஒரு உறுப்பினர் வெளிநாடு சென்றுவிட்டார் (America). இரு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவேயில்லை.   ஒரு உறுப்பினர் உடல் நலம் குறைவு (Sick). இந்திய அரசியமைப்பு என்பது (One Man Job) ஒருவரால் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும்.

 முதலமைச்சர், பிரதம மந்திரி இவர்கள் Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தால் தான்

குடியரசு தினத்தை Dr அம்பேத்கர் தினமாக கொண்டாடப்படுகிறதா அல்லது பேசப்படுகிறதா? சமூக நீதியை கொண்டுவந்தவர் Dr அம்பேத்கர். Dr அம்பேத்கரை தவிர்ப்பது என்பது சமூக நீதியை தவிர்ப்பதாகும்.  

குடியரசு என்பது SCக்கு, BCக்கு மட்டுமல்ல பிராமணருக்கும். குடியரசு என்பது அனைவருக்குமானது. இந்திரா காந்தி பிரதம மந்திரியாகியபோது நான் வணங்கும் கடவுள் என்னை பிரதம மந்திரியாக்கவில்லை. Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் தான் என்னை பிரதம மந்திரியாகியது என்றுரைத்தார். இரண்டு ஆண்டுக்கு முன் குடியரசு தினத்தன்று மோடி (Modi) அவர்கள் தான் பிரதம மந்திரியாகியது Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தில் தான் என்றுரைத்தார்.  

தமிழகத்தில் 1950க்கு முன் முதலமைச்சரானவர்கள் எல்லோரும் வைசியர்கள் தான். 1920லிருந்து பனங்கள் அரசர் முதல்  ராஜகோபாலச்சரியர் வரை. காமராசர்,  எம். பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, MG ராமசந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி இவர்கள் முதலமைச்சர் ஆனது Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தால் தான்.

  வருண கோட்பாடு இல்லாத குடியரசு

நான்கு வருணம் என்பது கடவுளின் படைப்பு. எனவே நான்கு வருண கோட்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். என்றுரைத்தவர் காந்தி. அவரின் கருத்துப்படி பிராமணன் படிக்க வேண்டும், சத்திரியன் ஆட்சியாளக இருக்க வேண்டும், வைசியன் வியாபாரம் செய்ய வேண்டும், சூத்திரன் அடிமை தொழில் செய்யவேண்டும். இதனால் தான் பாபா சாகேப் காந்தியை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கருத்தை மறுத்து மாற்றத்தை கொடுத்தார் பாபாசாகேப்.

Dr.அம்பேத்கர் தன்னுடைய வாழ்க்கையை இரத்தின சுருக்கமாக நான்கு வார்த்தைகளில் சுருக்கமாக சொல்கிறார். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் Justice, Liberty, Equality, Fraternityஇது தான் அரசியல் சாசனம் முன்னுரையில் (Premable) இருக்கும். இந்த சொற்கள் பிரெஞ்ச் புரட்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றுரைக்கின்றனர் கம்யூனிஸ்ட்கள். ஆனால் இவை பகவன் புத்தர் புரட்சியில் இருந்து எடுக்கப்பட்டது.

 இந்த அரசியல் நிர்ணய சபை

2 வருடம் 11 மாதம் 18 நாள் இந்திய அரசியல் சட்டம் உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள். 

நான் ஒரு குழுவின் தலைவராக வருவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர். என்னை விட அறிவில் சிறந்தவர் எல்லாம் இந்த அரசியல் நிர்ணய சபையில் இருக்கின்றனர். எண்ணத்திற்கு எட்டாத அளவிற்கு என்னை புகழ்ந்து வருகின்றனர். ஏன் இந்தியா அரசியல் சாசனம் எழுத ஒத்துக்கொண்டேன் என்றால் என் மக்களின் விடுதலைக்காக தான் என்றுரைத்தார் Dr.அம்பேத்கர். 

இந்திய அரசியல் சாசனம் உருவாக்க 299 இருந்தனர். எல்லோரும் இந்திய அரசியல் நிர்ணய சபையில் கூடுகின்றனர். Dr அம்பேத்கர் நுழைவாயிலிருந்து உள்ளே நுழைகிறார். 5 ஒட்டு பெற்றால் மட்டுமே  Dr அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்க முடியும். Dr அம்பேத்கர் அவர்களிடம் அவரின் ஒரு ஓட்டு மட்டுமே உள்ளது.  மண்டல் (Jogendra Nath Mandal) Dr அம்பேத்கரிடம் சொல்கிறார், நான் எல்லோரிடமும் உங்களுக்கு ஒட்டு போடச்சொல்லியிருக்கிறேன் (Canvas). நீங்கள் கண்டிப்பாக அரசியல் நிர்ணய சபைக்கு செல்கிறீர். ஆனால் Dr அம்பேத்கருக்கு நம்பிக்கை கிடையாது. மண்டல் எல்லோரிடம் சென்று பேசிவிட்டு வருகிறார். Dr அம்பேத்கருக்கு ஓட்டு போட வேண்டடியார்களை காங்கிரஸ் கடத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். வங்காளத்தில் இருந்த அந்த ஓட்டரை கடத்திவிடுகின்றனர். வங்க தேசத்தில் Dr அம்பேத்கர்  முஸ்லீம் லீக் மூலம் போட்டியிட்டார் என்று சொல்லப்படுகின்றது. இது உண்மையல்ல. முஸ்லீம் லீக் மூலம் ஓட்டு போடவேண்டடியவரை மீட்டு மண்டலிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். 5 ஓட்டுக்கு 7 ஒட்டு பெற்று விடுகிறார். இது முதல் அரசியல் நிர்ணய சபை. பாகிஸ்தான் பிரிவினை வாதத்தால் இதனை புறக்கணித்து விடுகின்றனர்.

இரண்டாவது அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. பட்டேல் புறக்கணிக்கப்பட்டு Dr அம்பேத்கர் கலந்துகொள்ள முடியாமல் போகிறது.  மும்பை முதலமைச்சருக்கு அவசர அவசரமாக எழுதி அனுப்பிவைக்கிறார். ஒருவரை ராஜனமா செய்து உடனடியாக அனுப்பிவைக்கிறார். ராஜனமாக செய்தது எனக்கு பெருமகிழ்ச்சி ஏனென்றால் எனக்கு பதில் ஒருவர் செல்கிறார். என்றைக்கு இருந்தாலும் அவருக்கு ஒரு வரலாறு இருக்கும். அவ்வரலாற்றில் இந்த MR ஜெயகர் (M. R. Jayakar  Mukund Ramrao Jayakar) இருப்பார் என்று உரைத்தார்.

பெரியார்  ஏன் அரசியல் சாசனத்தை எரித்தார்?

பெரியார் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறார் பச்சை பார்ப்பனர்கள் ஒன்றாக கூடி இருக்காங்க. அசல் மனுதரும சட்டத்தை எழுதுவதற்காக இந்திய அரசியல் சாசனம் கூடி இருக்கிறது. இந்த சட்டம் எழுதி வந்தால் நான் எரிப்பேன் என்று சொன்னார். அவ்வாறே எரித்தார். ஏன் எரித்தார் என்றால் பெரும்பான்மையாக பார்ப்பனர்கள் இருந்தனர் என்ற காரணத்திற்க்காகத்தான்.

 நம் தலையெழுத்து அரசியல் சட்டத்தில் தான் இருக்கிறது

7635 (Amendments were proposed) முன்மொழிவுகள் வைக்கப்பட்டது. இதில் 2473 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது (Actually Discussed). 5162 நிராகரிக்கப்பட்ட முன்மொழிவுகள். 2473 முன்மொழிவுகள் முக்கியமானது 5162 முன்மொழிவுகள் முக்கியமானதல்ல என்று கருதவேண்டாம். 2473 முன்மொழிவுகள் மிக முக்கியமானது. இதிலிருந்து தான் 395 சரத்துக்கள் எழுதப்பட்டது.

அரசியல் சட்டம் வரைவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் 

ஆஸ்திரேலியா 10 வருடம்

அமெரிக்கா 4 மாதம்

கனடா  2 வருடம் 10 மாதம்

இந்த நாடுகளில் முன்மொழிந்தது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நம் நாட்டில் அவ்வாறு நிகழவில்லை. ஒவ்வொன்றுக்கும் விவாதம் நடந்தது. ஏன் முற்றுப்புள்ளி, ஏன் காற்புள்ளிக்கு என்றுகூட  விவாதம் நடந்தது. நம் தலையெழுத்து அரசியல் சட்டத்தில் தான் இருக்கிறது. சமூக நீதி வேண்டும் என்றால் பாபா சாகேப் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

காணொளி:-