திங்கள், மார்ச் 21, 2011

பள்ளூர் புத்தர் சிலைகள்

காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பள்ளூர்.  பள்ளூர் பேருந்து நிற்கும் இடத்தில் இருந்து 1 கி. மீ தொலைவு நடந்து செல்லவேண்டும்.  பள்ளூர் புத்தர் தெருவில் உள்ள மூன்று சிலைகள் ஒரே மேடையில்  உள்ளன. 77 ஆண்டுகளுக்கு முன்பு திரு பு. நாகப்ப முதலியார் புல் வெட்டும் பொழுது, பூமியில்  இச்சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிடைத்தன. இவ்வுரைச் சுற்றிலும் அகழ்வராயச்சி செய்தால் மேலும் பல சான்றுகள் கிடைக்கும். இச் சிலை பற்றி தமிழ் ஆராட்சி அறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் "தமிழும் பௌத்தமும் " என்ற தம்முடைய நூலில் பக்கம் 322 குறிப்பிட்டு இருக்கிறார். 



1996  வாக்கில் ICFயில் இருந்து ஓய்வு பெற்ற திரு S . கோதண்டன் என்பவர் பள்ளுருக்கு  சென்றிருந்த போது, இச்சிலைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை அறிந்தார். தாய்லாந்தை சேர்ந்த  சோம்சாய் குசல சிட்டோ (Ven. Somsai kushala chito) பிக்கு அவர்களின் வழிகாட்டுதலின் படி பள்ளுரில் ஒவ்வொரு பௌர்ணமி (Full Moon Day ) அன்றும் திரி சரணம், பஞ்சசீலம், புத்த வந்தன ... சொல்லியும்,


மக்களுக்கு சிறு சிறு உதவிகளும் புத்தரை பற்றியும் சிறு சிறு விளக்கங்களும் செல்லிக்கொண்டு வந்தனர். பின்னர்  1998யில் விகார் கட்டப்பட்டது. 

ஞாயிறு, மார்ச் 13, 2011

மகா தம்ம ஊர்வலம் கன்ஹெரி






02-03-2011 அன்று மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு எதிராக மும்பையில் உள்ள கன்ஹெரி புத்தர் குகையில் அமைதி புரட்சி.
கன்ஹெரி ஒரு பழமையான பல்கலைக்கழகம் கிரீஸ் (Greece) மற்றும்
சிரியா (Syria ) மாணவர்கள் தானங்கள்
கொடுத்துள்ளனர். அவர்களுடைய பெயர்கள் மற்றும் விவரங்கள் இந்த குகையில் குறிப்பிடபட்டுவுள்ளன. இங்கு 118 குகைகள், 30 அடி உயரமுள்ள இரண்டு புத்தர் சிலைகள் அமைந்துள்ளது. 
அரசியல், அரசியல் சாராத தன்னார்வ தொண்டர்கள் சுமார் 200 ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.

சிவசேனா அல்லது பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய ஆந்திர பிரதேசத்தில் இருந்து அறியா தெலுங்கு மக்கள் அவர்களுடைய கடையை அமைத்துள்ளனர்.

வாயில் கதவு அருகில் புத்தர் பதாகை வைக்க Bharat Leni Sanwardhan Samittee (BLISS) அடியெடுத்துக்கொடுத்தது. மேலும் இந்த மகா சிவராத்திரி நாளை மகா தம்ம ஊர்வலம் "Maha -Dhamma Yatra " என்று அறிவித்தது.

"Chalo Buddha ki Or " (புத்தரிடம் செல்வோம்) என்ற பதாகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.  
இந்த வருடம் Archeaological Survey of India (ASI) இந்திய தொல்லியல் துறை இஸ்துபாவின் முன் ஒரு தகவல் வைத்து இருக்கிறது. அந்த இஸ்துபா தொல்லியல் துறையினால் துணியால் மூடப்பட்டுள்ளது. ஏனெனில் பார்க்க வரும் இந்துக்கள் பிராமணர்களின் தூண்டுதலினால் தேங்காய்களை இஸ்துபத்தின் மீது எறியும் பழக்கம் கொண்டிருந்தனர்.
குகைக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) 1992ம் ஆண்டு கணேஷ் நாய்க்யை (Ganesh Naik) சிவன் கோவிலை கன்ஹெரி குகையில் கட்ட தூண்டிவிட்டிருக்கிறது . திரு பிரதீப் கைக்வாடு (Pradeep Gaikwad) மற்றும் நாக்பூர் & மும்பையிலிருந்த அவருடைய துணைவர்களின் முயற்சியினால் இந்த கோவில் வனத்துறையினால் தகர்க்கப்பட்டது. இப்பொழுது லிங்கம், சிலை அல்லது தெய்வம் போன்ற ஏதும் அங்கில்லை. இருந்தும் அறியா இந்துக்கள் ஒவ்வொரு சிவாராத்திரி அன்றும் இங்கு வழிபட வருகின்றனர்.

இந்த வருடம், (BLISS) இளைஞர் அணியை அறிமுகப்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரிகள் பாதுகாத்து விழாவை சிறப்பித்தனர். அறியா இந்துக்கள் மகா சிவராத்திரிக்காக வருகைபுரியும் சிவன் கோவில் என்று அழைக்கப்பட்ட  இடத்தின் உள்ளே புத்த வந்தனா போய்க்கொண்டு இருந்தது. இந்துக்களும் புத்த வந்தனாவை சொல்லிக்கொண்டு இருந்தனர். 
தெலுங்கர் நடத்தும் கடை ஒன்றின் உள்ளே உள்ள சிவன் படம் உடைய பதாகை அகற்றப்பட்டது. புத்தம் சரணம் கச்சாமி அடங்கிய சிறு துண்டு பிரசுரம் வந்திருந்த இந்துக்களுக்கு அளிக்கப்பட்டது. எல்லோரின்  பைகளிலும் தேங்காய், 
பால், தயிர், எண்ணெய், சந்தானம்
 இருக்கிறதா என  சோதனை படுத்தப்பட்டு, அவைகளை 
அனுமதிக்கவில்லை.

மாலை நிகழ்ச்சியில் சில இந்துக்கள் கைகளை கூப்பியும், சிலர் திரி சரணம் சொல்லியும் நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
இது குறைந்தது ஒரு மணி நேரம்
எடுத்து கொண்டது, இந்த நிகழ்ச்சியில்  ஓய்வு பெற்ற நிதிபதிகள் (Judge),  ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் (DCP),  ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்  (IG) பலரும் கலந்துக்கொண்டனர். இந்திய தொல்லியல் துறை ஆவணத்தின் படி ( கிள்ளாக்கு (Token)இன்றி உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை) சென்ற வருடம் 2010  மகா சிவராத்திரி அன்று வந்த இந்துக்களின் எண்ணிக்கை 22,913 பேர், இந்த ஆண்டு 10,130 மட்டும் வந்திருந்தனர்

இது தம்மத்தின்  சாதனை,
அனைத்து பௌத்த இடங்களிலும் இதை செய்வோம்.

நன்றி Dr.Param Anand BE., M.Tech.,Master in Human Rights  

படங்கள்

புதன், மார்ச் 02, 2011

தமிழகத்து நாளாந்த

   
புத்தவேடு

புத்தவேடு கிராமம், இரண்டாம் கட்டளை ஊராட்சி
குன்றத்தூர் ஓன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்.

சென்னைலிருந்து 20 கி. மீ தொலைவில் குன்றத்தூர்
அருகில் (அ) போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையின் இடது புறத்தில் அமைந்துள்ளது புத்தவேடு கிராமம்.

மண்ணை உழும்போது கிடைத்த 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட சோழர் காலத்தினுடைய புத்தர் சிலையை 11 தேதி மே மாதம் 2003ல் சிலை திறந்து தொடக்கி வைக்கப்பட்டது.

இவ்வூரில் கிடைத்த தமிழ் கல்வெட்டு முதலாம் கோனேரின் மெய்கண்ட சுந்தர பாண்டிய தேவர் (கி.பி 1251- 64 ) காலத்தில் இந்த கிராமம் கொடையாக வழங்கப்பட்டது எனவும். புத்தவேடு கிராமத்தில் மூன்று புத்தர் திருமேனிகள் நிறுவப்பட்டதாகவும் மற்றும் போதி மரங்கள் நிரம்ப இருந்தது எனவும் மாற்றோருச் செய்தி கூறுகிறது.

பண்டைகாலத்தில் பௌத்த கோட்டையாக விளங்கியது காஞ்சிபுரம். காஞ்சிபுரம் என்பது சீவரம் என்பதின் மருவு. சீவரம் எனபது புத்தரும் புத்தரின் சங்கத்தினரும் (பிக்குகள்) அணியும் ஆடை.

அறிஞர்கள்

01. யுவாங் சுவாங் தனது 20 ஆவது வயதில் ஒரு முழுமையான புத்த துறவி ஆனார். அக்காலத்தில் சீனாவில் இருந்த பௌத்த நூல்களில் இருந்த பெரும் தொகையான முரண்பாடுகள், அவரை இந்தியாவுக்குச் சென்று, புத்த சமயத்தின் பிறப்பிடத்திலேயே கல்வி கற்கத் தூண்டின. புத்தர் பிறந்த பூமியான இந்தியாவிற்கு கி.பி 629-ல் வந்தார்.
 - காஷ்மீரத்தில் கி.பி 632 வரையிலும்
 - கன்னோசியில் கி.பி 636 வரையிலும்
 - நாலந்தாவில் கி.பி 637 வரையிலும்
 - ஆந்திராவில் கி.பி 639 வரையிலும்
 - காஞ்சியில் கி.பி 640-ல் வரையிலும்
 - மஹாராஷ்ட்ராவில் கி.பி 641 வரையிலும்
 - மீண்டும் நாலந்தாவில் கி.பி 642 முதல் 643 வரையிலும் ஹர்ஷருடனும் இருந்தார்.

கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவாங் சுவாங்
 - கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட 100 அடி உயரம் கொண்ட ஒரு பௌத்த தூபியும்.

 - 100 பௌத்தப்பள்ளிகளும் 10,000 பிக்குகளும் இருந்ததாகக் கூறுகிறார்.

 - இலங்கையிலிருந்து 300 பௌத்த பிக்குகள் யோக தத்துவத்தை கற்றுக்கொள்ள வந்து இருந்தார்கள் என்றும் கூறுகிறார்.

02. நாகர்ஜுனர் மகாயானத்தை காஞ்சியில் அறிமுகப்படுத்தினார். இவர் பல தென்னிந்திய மன்னர்களையும் ஏராளமான பிராமணர்களையும் பௌத்ததிற்கு மாற்றினார்.

03. தின்னகர் யோகம் பற்றிய தத்துவத்தை உருவாக்கினார். இத்ததுவத்தை மணிமேகலையில் கூறப்படும் அறவணடிகள் பின்பற்றினார்.இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவருக்கும் இவருடைய குருவுக்கும் கொள்கை முரண்பாடு ஏற்பட்டு, குருவைவிட்டுப் பிரிந்து, காஞ்சியிலிருந்து வடநாட்டிற்குச் சென்றார். அங்கே சிறந்து விளங்கிய வசுபந்து என்பவரிடம் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின்னர், நாளந்தாப் பல்கலைக்கழகஞ் சென்று அங்கும் பல நூல்களைக் கற்றார். பின்னர் நாளாந்த பல்கலைக்கழகத்தில் சிறந்த தத்துவ ஞானியாக விளங்கினார்.
a. வடமொழியில் இயற்றிய தர்க்க நூல்கள்
 - நியாயப் பிரவேசம்
 - நியாயத்துவாரம்
b. இவரது சிறந்த மாணவர்கள்
 - சங்கர சுவாமி
 - ஆசாரிய தரும பாலர் என்பவர்கள்.

04. தர்மபாலர் (கி.பி. 528-560) (தர்மபாலாவின் ஆசிரியர் தின்னகர்) நாளந்தாவில் மாணவராக சேர்ந்து நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக அமர்ந்தார். இவர் ஒரு சிறந்த தர்க்க வாதி. இலக்கான நூலில் வல்லவர். காஞ்சியில் பிறந்தவர்.

05. அநுருத்தர் கி.பி 12ம் நூற்றாண்டு- காஞ்சியில் பிறந்தவர். அபிதம்மாத்த சங்கிரகம் நூல்களை இயற்றியவர். இவர் காஞ்சியில் இருந்த மூல சோம விகாரையில் இருந்தவர்.

06. அறவண அடிகள் கி.பி 2ம் நூற்றாண்டு- காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பௌத்தத்தைப் போதித்து வந்தார்.
     a. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கியிருந்த சேரி (சேரி = தெரு) ஆதலின், அத் தெரு இப்பெயர் பெற்றது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு எனமாற்றப்பட்டிருக்கிறது.

     b. அன்றியும், 'புத்தேரித் தெரு' என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அது 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங் கேட்டுத் துறவு பூண்டபின் காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது.


07. புத்தகோஷ ஆசாரியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். திரிபிடகநூல்களுக்கு உரைகளை எழுதியவர்.

   a. புத்தகோஷர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்ததாகவும், அந்நூல் தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.

   b. தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்குகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்தார். தமது நண்பர்களின் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றார் என்று தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார்.

08. இவர்கள் அன்றியும்,காஞ்சிபுரத்தில், கி.பி 9முதல் 11ஆவது நூற்றாண்டு வரையில் இருந்த சில பௌத்தப் பெரியார்கள்.
o அம்ருதவர்மன்
o புத்தவர்மன்
o தர்மவர்மன்
o தூதசிம்மன்
o பிரபாகரசிம்மன்
o மஞ்சுஸ்ரீ
o வீரியவர்மன்
o புத்தவர்மன்,
o புத்த ஞானர்
o சுகசுகர்
o விரோசன சிம்ம ஸ்தவிரர்
o ரகுலவர்மர்
o சந்திரவர்மர்
o நாகேந்திரவர்மர்
o வீரவர்மர்
o அவலோகித சிம்மர்

பாடலிபுரத்தில் உள்ள பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த உருவங்கள், கயா ஜில்லாவில் உள்ள குர்கிஹார் என்னும் இடத்தில் இருந்து கிடைத்தன. இங்கிருந்து கிடைத்த பௌத்த உருவங்களில் 17 உருவங்கள் காஞ்சிபுரத்திலிருந்த பௌத்தப் பெரியவர்களால் அளிக்கப்பட்டவை. (Ninety Three Inscriptions on the Kurkihar bronzes. Patna Museum. by A. Banerji Sastri. The journal of the Bihar andOrissa Research Society Vol. xxvi. 1940 ).

09. நாதகுத்தனார் குண்டலகேசியின் ஆசிரியர்- கி.பி 4ஆம் நூற்றாண்டு

10. போதி தர்ம கி.பி 6ஆம் நூற்றாண்டு -இவர் காஞ்சிபுரத்தை அரசாண்ட ஓர் பல்லவ அரசனுடைய குமாரர். 'தியான மார்க்கம்' என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீன தேசம் சென்று தியான மார்க்கத்தைப் போதித்தார். இவரது தியான மார்க்கத்திற்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (Ch'an) மதம் என்றும் பெயர் கூறுவர். ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோவில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன

11. மணிமேகலை கி.பி 2ம் நூற்றாண்டு -அறவணடிகளிடம் பௌத்தத்தை ஏற்று மக்களுக்கு சேவை செய்தும் வந்தார். இவருக்காக ஒரு தனி விகாரா காஞ்சியில் கட்டப்பட்டதாகவும், இந்த மணிமேகலை விகாரா தான் பிற்காலத்தில் திரெளபதி அம்மன் கோயிலாக மாற்றப்பட்டதாகவும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்

அரசர்கள்

01. இளங்கிள்ளி கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழனின் தம்பி
     a. காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், 'பைம்பூம் போதிப் பகவற்கு' ஒரு தேசியம் அமைத்தான் என்றும்

     b. இளங்கிள்ளி அரசாண்ட நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், 'தருமத வனம்' என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலை கூறுகின்றது.

02. புத்தவர்மன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் பௌத்தத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறான். இவன் பௌத்தர்களுக்காகப் பள்ளிகளைக்கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும்.

பௌத்த விகாரங்கள்

01. கச்சீஸ்வரர் கோயில்
   a. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன.
   b. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியாமல் இருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.
   c. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன.
   d. இக்கோயில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு 'புத்தேரி' என்றும், வீதிக்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன." (பக்கம் 126. திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைனசமய சித்தாந்தமும், தி.அ.அநந்தநாத நயினார் எழுதியது. 1932)
   e. புத்தேரித்தெரு புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன.

02. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில்
   a. வெளிமதில் சுவரில் சில புத்த உருவங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது

   b. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.

   c. கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தின் கட்டடத்தில் ஒரு புத்த உருவம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் நிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது.


03. காமாட்சியம்மன் கோயில்
   a. ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம்.

   b. இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.

   c. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட "சாஸ்தா" (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் இருக்கிறது.

   d. சென்னை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தியதற்கு முன்னரே 1915 ஆம் ஆண்டில் அறிஞர் டி.ஏ. கோபிநாதராவ் அவர்கள் காமாட்சி கோயிலின் உள் பிரகாரத்தில் நடத்திய ஆய்வில் 7 அடி 10 அங்குல உயரமுள்ள கி.பி 7 ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையைக் கண்டு எடுத்தார்.


   e. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது காணப்படவில்லை.

   f. இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்தது. ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டது. இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை.


   g. காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த உருவம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் இப்போது உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த உருவங்களைப் புதைத்துவிட்டார்களாம்.

   h. 1971 ஆம் ஆண்டு கஞ்சியில் முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலத்திய பௌத்த ஸ்தூபி, கஞ்சி காமாட்சி அம்மன் கோயில் மத்தியில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தியாவில் பௌத்தம் ஒரு பூர்வாங்க கண்ணோட்டம்

1954 டிசம்பர் 4 ம் தேதி சர்வ தேச பௌத்த மாநாடு பர்மாவில் உள்ள ரங்கூனில் நடைபெற்றது. அறிவர் அண்ணல் அம்பேத்கர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு நிகழ்த்திய உரை.

01 . இந்தியாவுக்கு வெளியே பௌத்தத்தை பரப்புவது சாசனக் கவுன்சிலின் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வகையில் இந்தியாவை தங்களது முயற்சிக்கான முதல் நாடாகத் தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவை போல் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு உருப்படியான பலனை தராது. இதற்கான காரணம் தெளிவானது.

   -இந்தியா பௌத்த மார்க்கத்தின் பிறப்பிடம்

   -கி.மு 543 லிருந்து கி.பி 1400 வரை ஏறத்தாழ 2000
   ஆண்டுகாலம் அது அங்கு செழித்து வளர்ந்தது. அங்கு
   எல்லையற்ற மரியாதையோடு போற்றப்படுகிறது.

   -இந்தியாவில் பௌத்தம் பட்டுப் போன ஒரு தாவரமாக
    இருக்கக்கூடும். ஆனால் அது தனது வேர்களை இழந்து
   மடிந்து  போய்விட்டதாக எவரும்  கூற முடியாது.

   -புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக இந்துக்களால்
    கருதப்படுகின்றது

   -நேபுர்ச்நேரரர் யூதர்களிடையே தமது கடவுளர்களுக்குச்
    செய்ய வேண்டி  இருப்பதை போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின்
    பால் பயபக்தியை உண்டாக்க வேண்டிய அவசியம்
   ஏற்ப்படவில்லை.    தாங்கள் செய்ய  வேண்டியதெல்லாம்
   அவருடைய மார்க்கத்தை திரும்ப கொண்டு வருவது தான்.

   -ஒரு பயனுள்ள முயற்சிக்கு இத்தகைய எளிய
   சூழ்நிலைமைகளை வேறு எந்த நாட்டிலும் காண
  முடியாது.மற்ற நாடுகளில் நீண்ட நெடுங்காலமாக
  வேரூண்டி போன மதங்கள் இருக்கின்றன.

   -இந்நிலையில்தான் அந்நாடுகளில் பௌத்தம் பயண
    அனுமதிச் சிட்டு இல்லாத அழையா விருந்தாளியாகத்தான்
    நுழைந்தது. இந்தியாவை பொறுத்தமட்டில் புத்தருக்குப்
    பயண அனுமதிச் சிட்டோ அல்லது நுழைவு  உரிமைச்
   சிட்டோ தேவையில்லை.

 02 . இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மார்க்கத்தை தழுவ விரும்பும் பல பகுதியினர் இந்துக்களில் இருக்கின்றனர். தீண்டப்படாதர்களையும், பின் தங்கிய வகுப்பினர்களையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். படிநிலை அடிப்படையில் அமைந்த ஏற்றத்தாழ்வு சித்தாந்தங்களை இந்து மதம் கடைபிடிப்பதால் இம்மதத்தை அவர்கள் எதிர்கின்றனர். அறிவுத்துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் இந்த வகுப்பினர் இந்து மதத்துக்கு எதிராகப் போர்கோடி தூக்கினார்கள். அவர்களது அதிருப்தியை பயன்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு நல்ல தொரு சந்தர்ப்பமாகும்.

கிறித்துவ மதத்தை விட பௌத்தத்தை விரும்புவதற்கு 3 காரணங்கள் உண்டு.

 01 . புத்தரும் அவரது போதனைகளும் இந்தியாவிற்கு
      அன்னியமானதமல்ல.

02 . புத்தரின் கோட்பாட்டின் மையக் கருத்து அல்லது
       அவரது சித்தாந்ததின் மையக் கருத்து சமத்துவம் ஆகும்.
      இதைத் தான் அவர்கள் விரும்புகின்றனர்.

03 . புத்தரின் போதனைகள் பகுத்தறிவை சார்ந்தது. அதில்
      மூட நம்பிக்கைக்கு இடமில்லை.

ஆரம்ப கட்டத்தில் பௌத்தத்தில் சேருபவர்கள் பெரும்பாலோர் கீழ்தட்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்காக இயக்கத்தை தொடங்குவதில் எந்த வித தயக்கமும் காட்டக்கூடாது.

இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தினர் செய்த தவறை சாசன கவுன்சில் செய்யக்கூடாது. கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர்கள் முதலில் பிரமணர்களை மதம் மாற்றம் செய்யும் முயற்சியோடு தங்கள் பணிகளை துவக்கினார்கள். பிரமணர்களை முதலில் மதம் மாற்றம் செய்து விட்டால் இந்துக்களில் மற்றவர்களை கிறிஸ்துவ மதத்தின் பிடியில் கொண்டு வருவது எளிது என்று அவர்கள் நம்பினர்.

பிரமணர்களை முதலில் மதம் மாற்றம் செய்யப்பட்டால் பிராமணர்கள் அல்லாதோரிடம் நாம் சென்று பிராமணர்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டு விட்டார்கள், அதே போல் நீங்களும் ஏன் கிறிஸ்துவ மதத்தை ஏன் ஏற்றுகொள்ள கூடாது என்று கூறி அவர்களை நம் பக்கம் இழுக்கலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது.

கிறிஸ்துவ சமய பணியாளர்களின் இந்த திட்டம் அவர்களுக்குள் ஒரு சிலருக்கு எட்டிகாயைப் போல் கசப்பாக இருந்தது. பிராமணர்களை ஏன் நாம் நம் பக்கம் கொண்டுவர வேண்டும் ?. அவர்கள் தான் சுளை சுளையாக எத்தனயோ சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்கின்றார்களே என்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. கிறிஸ்துவ சமய பணியாளர்கள் தங்கள் தவறான கொள்கையை நீண்ட நாட்களுக்கு பின்னரே உணர்ந்தனர்.

பிராமணர்களை மதம் மாற்றம் செய்வதில் நூற்றுகணக்கான

ஆண்டுகளை வீண் விரையம் செய்த பிறகு தங்கள் கவனத்தை தீண்டதகதவர்கள் பக்கம் திருப்பினர். 
இதற்குள் நாட்டில் பெறும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. தேசபக்தி உணர்வு நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த கால கட்டத்தில் கிறிஸ்துவ சமயம் உட்பட அந்நியமானவையாக கருதப்பட்டது. இதன் விளைவாக தீண்டப்படாதோரில் ஒரு சிலரை தான் கிறிஸ்துவ சமயம் மதமற்றம் செய்ய முடிந்தது. சமய பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் 400 ஆண்டு காலத்தில் இந்தியாவில் கிறிஸ்துவ மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. மதமற்ற முயற்சியை அவர்கள் முதலில் தீண்டப்படதவர்கள் மற்றும் பின் தங்கிய மக்களிடம் இருந்து துவங்கி இருந்தால் அவர்கள் அனைவரையும் மத மற்றம் செய்து இருக்க முடியும்.

ரோமபுரில் கிறிஸ்துவ மதம் அடியெடுத்து வைத்த  வரலாற்றை
இப்போது நாம் நோக்க வேண்டும். என்னென்றால் இது நமக்கு நல்ல படிப்பினை அள்ளிக்க கூடியதாய் இருக்கக்கூடும். ரோம் சம்ராஜத்தின் சிதைவும் விழ்ச்சியும் எனும் ஜப்பானின் நூலில் இருந்து ஒரு விஷயம் தெள்ள தெளிவாகிறது. அதாவது ரோமபுரி மக்களில் மிகவும் கீழ்த்தட்டு வர்க்கத்தினரிடம் தான் கிறிஸ்துவ மதம் முதலில் பரவியது என்பது தான் அந்த செய்தி.

மேல் தட்டு வர்க்கத்தினர் இதற்கு பிறகுதான் கிறிஸ்துவத்திற்கு வந்தார்கள். கிறிஸ்துவ மதத்தை ஏழைகளின் மதம் என்று கிப்பான் என்பவர் தனது நூலில் ஏளனம் செய்துள்ளார். கிப்பனின் இந்த கருத்து மிகவும் தவறானதாகும். ஏழைகளுக்குத்தான் மதம் தேவை என்பதை அவர் உணர்ந்து கொள்ள தவறிவிட்டார்.

மேலும் விரிவாக படிக்க கிழ்க்கண்ட தொடர்பை அழுத்தவும்