வெள்ளி, ஜூன் 03, 2016

தமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்

மைலாப்பூரில் பௌத்தாலயம்


அன்பு பொன்னோவியம் 
ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள்  சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள்.
01. புத்த கோஷர் 'விசுதி மக்க' என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என குறிப்பிட்ள்ளர் .
02. புத்த தத்த தேரர் 'பபஞ்ச சூடாமணி' என்ற நூலை மயிலையில்   இருந்த ஒரு விகாரையில் எழுதியனார்.( உணவில் ஒளிந்திருக்கும் சாதி  - பக்கம் 330)
ஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்த தத்த தேரர் குறிப்பிடும் மயூரபட்டணம் என்பது மாயவரமாக இருக்கலாம் என்றுரைக்கிறார். அதற்க்கு அவரின் விளக்கம்
01. மயூரபட்டணம் சில பிரதிகளில் மயூரரூபப் பட்டணம் என்றும் எழுதப்பட்டுள்ளது. எனவே  இது மாயவரம் ஆக இருக்கலாம்
02. இவ்வூரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பௌத்தவிகாரையும் பௌத்தர்களும் இருந்தனர்.
மயூரபட்டணம் என்பது சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாயவரம் என்றும் பல அறிஞர்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுகின்றது. உதாரணமாக

K.R.சினிவாசன் கண்காணிப்பாளர், சென்னை தொல்லியல் துறை 
மயிலாப்பூர் கிறிஸ்துவ நூற்றாண்டு முன் பௌத்த முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்ததாக தெரிகிறது.  மயில் ஆர்ப்பு என்ற சொல்லின் மருவு தான் மயிலாப்பூர். அதாவது மயில்கள் ஆரவாரம் செய்யும் இடம் என்று பொருள். புத்த கோஷர் எழுதிய 'விசுதி மக்க' (Way of Purity - தூய்மை வழி) என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என்ற சொல் பல இடங்களில் காணப்படுகின்றது.
Ayacito sumatina therena bhadanta Buddhamittena pubbe Mayurasuttapattanamahi saddhim vasantena;
Ayacito sumatina therena bhadanta jotipalena Kancipura disu maya pubbe saddhim vasantena;
விசுதி மக்க என்ற பாரதிய வித்யா பவன் பதிப்பு முன்னுரையில் (PP XVII and XVIII)  இந்த வர்ணனைகளில் இருந்து பௌத்த அறிஞர் புத்த மித்திரர் மற்றும் ஜோதி பால மயிலாப்பூர் தங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் அவரது சமகாலத்தவர்கள்

விசுதி மக்க (பாரதிய வித்யா  பவன் பதிப்பு பக் 506) புத்த கோசரின்  சொந்த ஊர் மொரண்டக கேதக (Morandakhetaka) என்றும் அவர் மயூர சத்த பட்டினத்தில் (அ) மயூரரூபா  பட்டினத்தில் சில காலம் வசித்தார் என்றும் கூறுகிறது.இதிலிருந்து ஒரு புத்த மடாலயம் மயிலாப்பூர் நிலவி வந்தது தெளிவாகிறது மொரண்டக கேதக - மயில் முட்டை கிராமம் என்று பொருள் (Story of Buddhisim with special reference to South India பக் 158). 

ஆனால் மதுரையில் உள்ள பிக்கு வண. போதி பாலா (தமிழகத்தில் தற்பொழுது தமிழ் மற்றும் பாலி மொழியில் புலமை பெற்று இருப்பவர்)  அவர்கள் மயிலை சினீ . வேங்கடசாமியின் கருத்தையே  ஏற்கிறார்.

மயிலாப்பூரில் பௌத்த ஆலயம் இருந்ததற்கு  "மயூரபட்டணம்" என்ற சொல்லை தவிர வேறு சான்றுகள் இல்லையா? பண்டித அயோத்திதாசரிடம் 1909 ஆம் ஆண்டு சமரபுரி முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்ததற்கான ஆதாரம் வேண்டி எழுதியதற்கு மகா பண்டிதர் அளித்த விளக்கங்களும் அவரின் கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சியும் மயிலாப்பூர் தொன்மையான பௌத்த தளம் என்றுரைக்கிறது.

பண்டித அயோத்திதாசர் 
பண்டித அயோத்திதாசர் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்தற்க்கு  அவர் அளிக்கும் விளக்கங்கள்.

01. மயிலாப்பூரில் உள்ள தெருக்களும் மடங்களும் பௌத்தர்களின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.
கணிதாதி சகல சாஸ்திர பண்டிதர் மார்க்கலிங்க நாயனார் "சுத்த ஞானம்" என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் 
02.மயிலாபூரில் பௌத்தர்கள் குடியிருந்தார்கள்
வள்ளுவர்கள், சாக்கியர்கள் என்ற வம்ச வரிசையோர்கள் விசேசமாக குடியிருந்தார்கள்    - மயிலை குப்புலிங்க நாயனார். 
03. புத்தர் ஆலயம் / புத்தர் சிலை 
கொன்றை ராஜன் என்ற சிற்றரசன் அந்நாட்டு பெயர் விளங்க அல்லமா என்னும் பிரபுவால் ஓர் மடம் கட்டி புத்தர் சிலை நிறுவினார். திரு மயிலை மடத்திற்கு அல்லமா பிரபு மடம் எனவும் குழந்தைவேற் பரதேசி  மடம் எனவும்  பெயர். 
04. பௌத்த பண்டிகை கொண்டாட்டம்  
பௌத்தர்கள் பகவன் புத்தரின் ஞபாக தினங்களை, பண்டு ஈகை, பண்டைய ஈகை, பண்டீகை என்று வழங்கி கொண்டாடி வந்தனர். மயிலாப்பூரில் அல்லமாப்பிரவால்   புத்தர் மடம் கட்டி மூன்று திங்கள்  பௌர்ணமி நாளில் ஆனந்தமாக கொண்டாடிய வந்தார்கள்.
  • பகவன் புத்தர் துறவடைந்த நாள் - மாசி மாத பௌர்ணமி
  • பகவன் புத்தர் மெய் ஞானம் (நிருவாண முற்ற) நாள் - பங்குனி மாத பௌர்ணமி
  • பகவன் புத்தர் இயற்க்கை எய்திய (பரிநிர்வாணமடைந்த) நாள் - மார்கழி மாத பௌர்ணமி
05. பௌத்தர்கள்  பாடிய கரபோலீஸன் பஞ்ச ரத்ன தியான படல் 
வருடந்தோறும் மயிலாபூரில் நடைபெறும் கபாலீஸன் கொண்டாட்டத்தைக் காண மணிவண்ணன் என்னும் அரசன் தனது மனைவி பூம்பாவையுடன் வந்திருந்தான். பூம்பாவை அங்கிருந்த சோலையில்  உலாவும் பொழுது பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். இதை வள்ளுவர்கள் துக்கங்கொண்டாடினார்கள். இதனை அவ்வருட கபாலீஸன் பாடலுடன் பாடி வைத்தார்கள். (சாக்கியர்கள் பாடிய கர போலீஸன் பஞ்ச ரத்ன தியான படலை இணைப்பில் பார்க்கவும்).
06. மயிலையை  தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை.
சிவனின் பிட்ச பாத்திரத்திற்கு பிரம கபாலம் என்று பெயர். கபாலம் என்பது மண்டையோடு.   மண்டையோடு எப்படி உணவு ஏற்கும் பாத்திரமாகும்?  
இந்த கபாலத்தை எப்படி பெற்றார்?  சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. அதைப்போல பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. இதனால் பார்வதிக்கு சிவனென்றும், பிரம்மனென்றும் பல நாளாக தெரியாமல் இருந்தது. ஒருநாள் இதை பார்வதி சிவனிடம் உரைத்தாள். இதனால் சிவன் பிரமனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அத்தலை சிவன் கையில் ஒட்டிக்கொண்டது.  எனவே சிவன் கையில் இருக்கும் பாத்திரத்திற்கு (கபாலம் -மண்டையோடு) பிரம கபாலம் என்று பெயர் வந்தது.  இந்த கபாலம் கையில் ஒட்டிக்கொள்ளும் முன் எவ்வாறு உணவு ஏற்றார்?
சித்தார்த்தர் துறவு ஏற்று கர பாத்திரம் கொண்டு உணவு ஏற்றதை, திரித்து  சிவனுக்கு ஏற்றப்பட்டுள்ளது. சதுர் என்பது சது எனவும், கர்ம்மா என்பது கம்மா எனவும், கர்ப்பம் என்பது கப்பம் எனவும் ரகரம் மறைந்து வரும்.   ஆனால் கர, கரம் என்ற சொற்கள் தமிழில் க என வர வேண்டும். அது கை என்று வழங்கப்படுகிறது. கர + போல் = கபோல், கைபோல், கரபோலம்   என்னப்படும். 
மயிலை கபோலீஸன் விழாவை தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை என்பதில் இருந்து திரித்து ஏற்றப்பட்டதை அறிந்துகொள்ளலாம்.   (க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று -தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸன்  சரித்திர ஆராய்ச்சி - பக் 85-106) 
தமிழக தொல்லியல் துறை கி.பி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகளை மயிலாப்பூரில் 1972 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அச்சிலைகள் தலையில்லாமல் இருப்பதால் சென்னை அருங்காட்சி காட்சி கூடத்தில் பார்வைக்கு வைக்காமல், பாதுகாப்பு கிடங்கு அருகில் வைத்து இருக்கின்றனர்.


சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு  சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 3  & 3 1/2 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 10 நூற்றாண்டு. 

இணைப்புகள் 
01. புத்த கோஷர் மற்றும் புத்த தத்த தேரர் பற்றி அறிய - ஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

02. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸ்ன் சரித்திர ஆராய்ச்சி

03. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி இரண்டு - மைலாப்பூரில் பௌத்தாலயம் - பக்கம் 102 முதல் 104. மைலாப்பூரில் பௌத்தாலயம் 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக