புதன், ஜூன் 03, 2026

பௌத்த சமயத்தின் இருமொழிகள் (அ) இரு பிரிவுகள்

ஏன் திரிபிடகம் எழுதப்பட்டது?

கௌதம புத்தரின் தாய்மொழி மகதி பிராகிருதம் (Magadhi Prakrit) (அ) அர்த்தமகதி ஆகும். இது தற்கால பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசப்
பகுதிகளில் புழக்கத்தில் இருந்த ஒரு பழங்கால பேச்சு வழக்குப் மொழியாகும்.
 
பலர் புத்தரிடம் வேண்டியும் பௌத்த போதனைகளை எழுத்து வடிவில் பதிய புத்தர் விரும்பவில்லை. பகவன் புத்தர் காலத்தில் எந்த தத்துவங்களும் எழுத்து வடிவில் இல்லை. சூத்திரங்கள் பிக்குகள், பிக்குணிகள் மற்றும் இல்லறத்தோர் ஆகியோர் மனப்பாடம் செய்து வாய்மொழியாகவே அடுத்த தலைமுறைக்குக் கடத்தினர். கௌதம புத்தரின் பரிநிப்பாணத்திற்குப் பிறகு, அவரது போதனைகளைப் பாதுகாக்கவும், ஒழுக்க விதிகளைத் தொகுக்கவும் திரிபிடகம் பாலி மொழியில் எழுதப்பட்டது.
 
புத்தரின் போதனைகளை அழிக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், பிக்குகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் திரிபிடகம் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டது.
 
பௌத்த போதனைகள் முதன் முதலில் பாலி மொழியில் எழுதப்பட்டது பின்னர் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.

பாலி மொழி


முதல் பௌத்த சங்கம்
கௌதம புத்தரின் பரிநிப்பாணத்திற்குப் பிறகு, அவரது போதனைகளைப் பாதுகாக்கவும், ஒழுக்க விதிகளைத் தொகுக்கவும் முதல் பௌத்த சங்கம் கூட்டப்பட்டது. இந்தியாவின் ராஜகிருகத்தில் இச்சங்கத்தில், வணக்கத்திற்குரிய மகாகாசியபர் தலைமையில் 500 அரகந்த பிக்குகள் ஒன்று கூடினர். புத்தரின் போதனைகள் அனைத்தையும் ஓதிப் பார்த்தனர். வணக்கத்திற்குரிய உபாலி ஓதிய 'வினயம்' 'வினய பிடகம்' என ஏற்றுக்கொள்ளப்பட்டது. வணக்கத்திற்குரிய ஆனந்தர் ஓதிய 'தம்மம்' 'சூத்திர பிடகம்' என நிலைநிறுத்தப்பட்டது.

காலம் கிமு 483 (புத்தர் மறைந்த ஆண்டு).
இடம்: ராஜகிரகத்தில் உள்ள சப்தபர்னி (சத்தபானி) குகை, பிகார்.
தலைமை: மூத்த துறவி மகாகாசியபர்.
ஆதரவு: மகதப் பேரரசர் அஜாதசத்ரு.

இரண்டாவது பௌத்த சங்கம்
கௌதம புத்தரின் பரிநிர்வாணத்திற்குப் பிறகு, கிமு 383-ல் (சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்தியாவின், பண்டைய பீகாரின் வைசாலி நகரத்தில் நடைபெற்றது.

புத்தரின் பரிநிப்பாணம் நிகழ்ந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வினயம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை விவாதிப்பதற்காக இரண்டாவது பௌத்த சங்கம் வைசாலியில் கூடியது. அப்போது சங்கத்தில் முதல் பிளவு ஏற்பட்டது. இதில் மகாசங்கிகா பிரிவினர் (மகாயானம்), தேரவாதிகளை விட்டுப் பிரிந்து சென்றனர்.
 
புத்தரின் போதனைகளுக்குச் சூத்திரங்களையும் வினயத்தையும் மட்டுமே இறுதி அதிகாரமாகக் கொள்ள மகாசங்கிகா பிரிவினர் தயக்கம் காட்டியதே இப்பிரிவினைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
 
இப்பிரிவினையே பிற்காலத்தில் மகாயான பௌத்தத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இப்பிரிவே பின்னர் வட ஆசியப் பிராந்தியத்தில் (சீனா, திபெத், ஜப்பான், கொரியா) பௌத்தத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்தது.


மூன்றாவது பௌத்த சங்கம்
மூன்றாவது பௌத்த சங்கம் (Third Buddhist Council) கி.மு. 250-ல் மௌரியப் பேரரசர் அசோகரின் ஆதரவில் பாடலிபுத்திரத்தில் (இன்றைய பாட்னா) கூட்டப்பட்டது.

கொள்கை சார்ந்த கருத்துகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் மேலும் பல பிளவுகளுக்கு வழிவகுத்து. இச்சங்கத்தில் அபிதம்ம பிடகம் ஓதிப் பார்க்கப்பட்டது. நவீன பாலி திரிபிடகம் இப்போது அடிப்படையில் முழுமை பெற்றுள்ளது. 


நான்காவது பௌத்த சங்கம்
நான்காவது பௌத்த சங்கம் (Fourth Buddhist Council) என்பது பௌத்த மத வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இது கி.பி. 72-ஆம் நூற்றாண்டில் குஷான மன்னரான கனிஷ்கரின் (Kanishka) ஆதரவின் கீழ், காஷ்மீரில் உள்ள குண்டல்வனத்தில் (ஸ்ரீநகர்) நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு பௌத்த அறிஞர் வசுமித்ரர் (Vasumitra) தலைவராகவும், அஸ்வகோஷர் (Asvaghosa) துணைத் தலைவராகவும் தலைமை தாங்கினர்.

இந்தச் சங்கத்தின் போதுதான் பௌத்தம் அதிகாரப்பூர்வமாக ஹீனயானம் (Theravada) மற்றும் மகாயானம் (Mahayana) என இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிந்தது.

திரிபீடக (Tripitaka) நூல்களுக்கு விரிவான விளக்கவுரைகள் தொகுக்கப்பட்டு, 'மகாவீபாஷா' (Maha-Vibhasa) என்னும் தத்துவார்த்த நூல் சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டது.
பௌத்தக் கலப்பு சமஸ்கிருதம்


எப்பொழுது திரிபிடகம் எழுதப்பட்டது?

கௌதம புத்தரின் போதனைகளைக் கொண்ட திரிபீடக (Tipitaka) நூல், முதன்முதலில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் (1st Century BCE) இலங்கையில் பாலி மொழியில் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது.

அதன்பின், பொ.ஆ. 1-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், மகாஞான பௌத்த (Mahayana) பிரிவைச் சேர்ந்த அறிஞர்களால் புத்தரின் போதனைகள் சமஸ்கிருத மொழியில் (Buddhist Hybrid Sanskrit) மொழிபெயர்க்கப்பட்டு, அவை சமஸ்கிருத திரிபீடகமாக உருவாக்கத் தொடங்கின. 

நான்காவது பௌத்த சங்கம் பிறகு திரிபிடகம் பாலிமொழில் முதன் முதலில் எழுதப்பட்டது. பின்னர் சமஸ்கிருதத்தில் திரிபிடகம் எழுதப்பட்டது.  புத்தரின் போதனைகள் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அவை சமஸ்கிருத திரிபீடகமாக உருவாக்கத் தொடங்கின. இது பௌத்தக் கலப்பு சமஸ்கிருதம் (Buddhist Hybrid Sanskrit) என்று குறிப்பிடப்படுகிறது


பாலி மொழி (Pali) மற்றும் சமஸ்கிருத மொழி (Sanskrit) இடையே உள்ள வேறுபாடுகள்

01)தேரவாத பௌத்தம் திரிபிடகம் எழுதப் பாலி மொழியைப் பயன்படுத்தியது. மகாயான பௌத்தம் திரிபிடகம் எழுதப் வடமொழியைத் (சமஸ்கிருதம்) பயன்படுத்தியது.

02)பாலி மக்கள் மொழி, எளிதில் அணுகக்கூடிய வட்டார மொழி. சமஸ்கிருத மொழி பேச்சு மொழியல்ல. கடவுளை வழிபட, துதிக்க மந்திரங்களை ஓதிய வாய் மொழி.

03) பாலி மொழியில் தான் திரிபிடகம் முதன் முதலில் எழுதப்பட்டது. பாலி மொழிக்கு பிறகு சமஸ்கிருத மொழியில் திரிபிடகம் எழுதப்பட்டது.

04)இந்திய வட்டார மொழிகளில் ஒன்று பாலி மொழி. சமஸ்கிருத மொழி இந்தியவிற்கு வந்த அந்நிய மொழி.

05) பாலி மொழில் பகவன் புத்தர் வழிகாட்டி (தாதகர்). வரலாற்று ரீதியான, ஞானம் பெற்ற மனித ஆசிரியராகக் புத்தர் கூறப்படுகிறார். தேரவாத பௌத்தம் புத்தரின் அசல் போதனைகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறது. சமஸ்கிருத மொழில் பகவன் புத்தர் கடவுளாக கூறப்படுகிறார். பக்தியையும் உள்ளடக்கியுள்ளது சமஸ்கிருத மொழி.

06) பாலி மொழி வரலாறு மற்றும் சான்றுகளை கொண்டது. பாலி மொழி பகவன் புத்தர் மனிதர்கள் செய்யும் செயலை தவிர வேறு செயலை செய்ததில்லை. சமஸ்கிருத மொழி பல கற்பனைகளை கொண்டது, மனிதர்களால் செய்ய முடியாத செயலை பகவன் புத்தர் செய்துள்ளார். 

07)தேரவாத பௌத்தம் (இலங்கை, தாய்லாந்து, மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ்) ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மகாயான பௌத்தம் இந்தியா, திபெத், கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

08) பாலி மக்கள் மொழி, மொழியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. சமஸ்கிருதம் ஒரு பிராமண வழிபாட்டு மொழியாக இருந்தது. ஒரு சிலர் மட்டுமே வடமொழி படிக்க, ஓத தகுதியானவர்கள். தகுதியற்றவர்கள் சமஸ்கிருத மொழியை கேட்டாலோ, ஓதினாலோ கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்.

09) மகாயானம் இந்தியாவுக்கு வெளியே பரவியபோது, இதன் சமஸ்கிருத நூல்கள் பாரம்பரிய சீன மொழி, திபெத்திய மொழி, ஜப்பானிய மொழி மற்றும் கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தாமரை சூத்திரம் மற்றும் இதய சூத்திரம்.

10) பாலி சூத்திரங்கள் விநய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம். மகாயான சூத்திரங்கள் பிரஜ்ஞாபாரமித சூத்திரம் (Prajnaparamita Sutra) சூனியவாதம், சத்தர்ம புண்டரீக சூத்திரம் (Lotus Sutra), அவதம்சக சூத்திரம் (Avatamsaka Sutra).

 

 * சமஸ்கிருதம் (சம்ஸ்கிருதம்) என்ற சொல்லின் உண்மையான பொருளே செப்பனிடப்பட்ட மொழி அல்லது நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பதாகும்.

* மகாயான பௌத்தத்தின் மிகப்பெரிய தவறு சமஸ்கிருத மொழி தேர்வு    

வியாழன், மே 14, 2026

நீர் மற்றும் நதி வழிப்போக்குக் கொள்கையின் சிற்பி டாக்டர் அம்பேத்கர்

தாமோதர் பள்ளத்தாக்கு திட்டங்களில் பாபாசாகேப்பின் பங்கு

01.1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (DVC-Damodar Valley Project) நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் தான். தாமோதர் நதியானது ஹூக்ளி நதியின் துணை நதிகளில் ஒன்றாகும். இது மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அமைந்துள்ளது. இத்திட்டம் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோனார் ஆற்றின் குறுக்கே திறம்படக் கட்டமைக்கப்பட்டது.

02.பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் மார்ச் 1944 இல் CWINC மத்திய நீர்வழி மற்றும் நீர்ப்பாசன ஆணையத்தை (Central Waterways, Irrigation and Navigation Commission) அங்கீகரித்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 4, 1945 இல் வைஸ்ராயால் அங்கீகரிக்கப்பட்ட.து.

03.தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இந்தியாவின் முதல் நபர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரே ஆவார். இந்தியாவில் பல்நோக்கு நதித் திட்டங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவரே.

Ambedkar poses for a photo with other members of the Viceroy’s Council

04. எல்லாவற்றிற்கும் மேலாக, டாக்டர் பாபாசாகேப் பின்வரும் திட்டங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார், அவற்றிற்கான வரைவுத் திட்டங்களை வகுத்தார். 

1) தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (இந்தியாவின் முதல் பல்நோக்கு நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்) — 1944-ஆம் ஆண்டில், 'டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின்' (Tennessee Valley Authority) மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

2) பக்ரா-நங்கல் அணை (இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்; இந்தியாவின் மிக உயரமான ஈர்ப்பு விசை அணை Highest gravity dam in India  ).

3) சோன் நதிப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்.

4) ஹிராகுட் அணை (இந்தியாவின் மிக நீளமான அணை Longest dam in India ).

05. டாக்டர் பாபாசாகேப் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்திய திட்டமிடுபவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். 1946 ஆம் ஆண்டு வரை, தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்திற்கான பொறுப்பு பாபாசாகேப் அவர்களிடமே இருந்தது. அதன் பிறகு, அணை தொடர்பான முழுப் பணிகளும் 'தாமோதர் மேம்பாட்டுக் கழகத்திடம்' (Damodar Development Corporation) ஒப்படைக்கப்பட்டன.

06. 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், புது தில்லியில் பாபாசாகேப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தாமோதர் நதித் திட்டத்தின் கீழ் முதல் அணையின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்காக 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.

தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் 
01.நம் நாட்டின் பல பகுதிகளில் இருந்த அணை திட்டங்களை படித்தறிந்தார் பாபா சாகிப். பிறகு வெளிநாட்டு அணை திட்டங்கள் பலவற்றையும் ஆழ்ந்து படித்தறிந்தார். பிறகு தாமோதர் பள்ளத்தாக்கு  திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. 

02.எகிப்து நாட்டில் ஆஸ்வான் ஆற்றின் மீது கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய பொறியாளரை அழைக்கலாம் என்று வைஸ்ராய் வேவல்  பாபாசகிப்பிற்கு ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனையை நிராகரித்தார் பாபாசாகிப். ஒரு இந்தியப் பொறியாளர் ஒருவரால் தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும்  என்பது பாபா 
சாகிப்பின்  விருப்பம். 

03.பஞ்சாபில் இருந்த தலைமைப் பொறியாளர் ஏ.என். கோசலா A. N. Khosla (Ajudhia Nath Khosla) அவர்களிடம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டப்பொறுப்பை அளிக்க முன்வந்ததார். ஆனால் அப்பொறியாளர் பாபாசகிப் அம்பேத்கரின் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று மறுத்தார். இந்தியரால் தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் பார்வையைப் புரிந்து கொண்ட பின்னரே ஏ.என்.கோசலா அப்பணியினை ஏற்றுக் கொள்ள சம்மதித்திருக்கிறார். 

04.தாமோதர் நதி பள்ளத்தாக்கு திட்டம் பாபாசகிப் அம்பேத்கரால் தொடங்கி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய வரலாறு அத்திட்டத்துடன் தந்தையான அம்பேத்கரை இணைத்துப்பேச மறுத்து, கள்ள மவுனம் சாதிக்கிறது.

தாமோதர் பள்ளத்தாக்கு திட்ட பயன்கள்

01.வெள்ளப்பெருக்குப் பிரச்சினைகளின் காரணமாக, தாமோதர் பள்ளத்தாக்கு 'வங்காளத்தின் துயரம்' Sorrow of Bengal என்று அழைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலப் பகுதிகளில் வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை இத்திட்டம் வெகுவாக மேம்படுத்தியுள்ளது. 


02. விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மீன் வளர்ப்பு, காடு வளர்ப்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதிலும் இப்பள்ளத்தாக்குத் திட்டம் துணைபுரிகிறது.

03.நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களை அமைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதிலும் தாமோதர் நதிப் பள்ளத்தாக்குத் திட்டம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

ரயில்போக்குவரத்தும் நீர்வழிப் போக்குவரத்தும்

01. இந்தியாவின் வனங்களும் (Forests) நதிகளும் (Rivers) மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால், வெள்ளக்கட்டுப்பாடு, மண் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். 

02. நீர்வளம் சம்பந்தப்பட்ட நமது கொள்கை பாசன வசதி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகிறது. ரயில் போக்குவரத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கும் இடையே வேறுபாடு எதுவும் இல்லை. ரயில்வேக்களுக்கு மாகாண எல்லைகள் ஏதும் இல்லையென்கிற போது ஆறுகளுக்கும் அதேபோல் மாகாண எல்லைகள் எவையும் இருப்பதற்கில்லை. ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு பாய்ந்து செல்லும் ஆறுகளுக்கு முக்கியமாக இது பொருந்தும்.

04. இதற்கு மாறாக ரயில்வேக்களுக்கும் நீர்வழிப் போக்குவரத்துகளுக்கும் இடையே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வேறுபாடு இடம் பெற அனுமதித்து விட்டோம். இதன் விளைவாக ரயில்வேக்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு (Jurisdiction of the Central Government) உட்பட்டவையாகவும், ஆறுகள் மாநில அரசாங்கங்களின் அதிகாரவரம்புக்கு (Jurisdiction of the State Government)  உட்பட்டவையாகவும் ஆக்கப்பட்டுவிட்டன.

05. இந்தத் தவறால் ஏற்பட்ட பிரதிகூலங்கள், பாதகங்கள் அநேகம்; அவை கண்கூடானவை. இதற்கு இங்கு ஓர் உதாரணம்
ஒரு குறிப்பிட்ட மாநில அரசாங்கதுக்கு மின்விசை தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது இதன் பொருட்டு அந்த மாநில அரசு தனது நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. ஆனால் இதனை அது செய்ய முடியாது. ஏனென்றால் மின்விசை உற்பத்தி செய்வதற்கு அணைகட்ட வேண்டிய இடம் மற்றொரு மாநில அரசிடத்தில் அமைந்திருக்கிறது. அந்த மாநில அரசோ வேளாண்மையைப் பெரிதும் சார்ந்திருக்கும் மாநில அரசு அதற்கு மின்விசை தேவையில்லை. அதில் அதற்கு அக்கறையும் ஆர்வமும் இல்லை. மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதனிடம் போதிய பண வசதியும் இல்லை.

எனவே அணை கட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ள மாநில அரசை அவ்வாறு செய்ய அது அனுமதிக்காது. இது குறித்து நாம் என்ன புகார் செய்தாலும் சம்பந்தப்பட்ட அந்த மாநில அரசும் அதைப் பொருட்படுத்தாது. மாநில சுயாட்சி என்ற பெயரால் இத்தகைய நேசமற்ற போக்கை அது நியாயப்படுத்தவும் கூடும்.

06.ரயில்வேக்கள் விஷயத்தில் நாம் எத்தகைய நடைமுறையைக் கைக்கொள்கிறோமோ அதே நடைமுறையை நீர்வழிப் போக்குவரத்து விஷயத்திலும் பின்பற்றக்கூடிய விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரு மாற்றமாக இருக்கும்..


குறிப்பு
01. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18

02. Dr. Babasaheb Ambedkar Writings and Speeches English Volume 10 : Dr. Ambedkar as member of the Governor-General’s Executive Council (1942-46)




ஞாயிறு, மார்ச் 22, 2026

கடலியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு


தமிழர் தொன்மைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஐயா ஒரிசா பாலு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மார்ச் 21, சனிக்கிழமை, சென்னையில் எழும்பூரில் உள்ள இக்சா (ICSA) அரங்கதில் "தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்" நிகழ்ச்சியில் ஐயா ஒரிசா பாலு அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தது தமிழர் நடுவம்.

கடலியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு
01.தமிழர்களின் தொன்மை வெறும் இலக்கியத்தோடு நின்றுவிடாமல், அது கடல்சார் அறிவியலோடும், நிலவியல் மாற்றங்களோடும் பிணைக்கப்பட்டது என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் திரு. ஒரிசா பாலு அவர்கள்.

02.ஒரிசா பாலு அவர்கள் 1963-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி, திருச்சி உறையூரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு காவல் அதிகாரி என்பதால், தமிழகத்தின் பல்வேறு ஊர்களான விழுப்புரம், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் சென்னை போன்ற இடங்களில் வளரும் வாய்ப்பைப் பெற்றார்.

03.இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் பொறியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார். குறிப்பாக, சுரங்கம் மற்றும் வெளிநாட்டு இயந்திரங்களைப் பழுது பார்க்கும் பணிக்காக ஒரிசா மாநிலத்திற்குச் சென்றார். அங்கு பல ஆண்டுகள் பணியாற்றியதால், "ஒரிசா பாலு" என்ற பெயர் நிலைத்தது.

கடல்சார் ஆய்வுகளும் குமரிக்கண்டத் தேடலும்
01.ஒரிசா பாலு அவர்களின் தேடல் வெறும் தொழிலோடு நின்றுவிடவில்லை. ஒரிசா கடற்கரையில் ஆமைகள் முட்டையிட வருவதைக் கவனித்த அவர், அந்த ஆமைகளின் இடப்பெயர்ச்சிக்கும் தமிழர்களின் கடல்வழிப் பயணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயத் தொடங்கினார்.

02.லெமூரியா மற்றும் குமரிக்கண்டம் தமிழ் இலக்கியங்கள் கூறும் "கடல் கொண்ட தென்னாடு" மற்றும் "தென்புலத்தார்" போன்ற கருத்துகளை வெறும் கற்பனையாகக் கருதாமல், நவீன அறிவியல் தரவுகளோடு ஒப்பிட்டார்.

03.செயற்கைக்கோள் (Satellite) படங்கள் மற்றும் நவீன கடல்சார் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்து கடல் மட்டம் உயர்வால் மூழ்கிய பகுதிகளை அடையாளம் கண்டார்.

04.கடலில் மீன்கள் மற்றும் ஆமைகள் குறிப்பிட்ட இடங்களுக்குத் தேடிச் செல்வதை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய தமிழர்களின் கடல் வழிப்பாதைகளை (Sea routes) உலகிற்கு விளக்கினார்.

05.தமிழர்கள் வெறும் தமிழகத்திற்குள் மட்டும் முடங்கியவர்கள் அல்ல, அவர்கள் உலகெங்கும் கடல் வழியாகப் பயணம் செய்து நாகரிகத்தைப் பரப்பியவர்கள் என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க முயன்றார். ஆசியா முதல் அமெரிக்கா வரை தமிழர்களின் தொன்மை அடையாளங்கள் சிதறிக் கிடப்பதை அவர் ஆவணப்படுத்தினார்.

தமிழர் தொன்மை
சிந்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம் எகிப்து நாகரிகம் என எல்லாவற்றிலும் தமிழருடைய ஊடுருவல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கொரியாவைப் பார்க்கும் போது கொரிய மொழியில் 4000 சொற்கள் தமிழிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் சீனா, பர்மா, தாய்லாந்து, மலேசியா என வெகுவான மரபுகளில் தமிழர்களுடைய மரபு கலந்திருக்கிறது.

இவர் மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாகச் செய்தி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

இயற்கை எய்தினார்
இருதய நோய் காரணமாக  (Rela ரெலா மருத்துவமனையில்) 06.07.2023 மாலை இயற்கை எய்தினார். 

திருஉருவபடம் திறப்பு
கம்யூனிஸ்ட் திரு பாவலர் அவர்கள் ஐயா ஒரிசா பாலு அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். ஆனால் ஒரிசா பாலுவை அவர்களை பற்றி ஏதும் பேசவில்லை. அமைப்பாளர் திரு தங்கராஜ் பாண்டியன் ஒரிசா பாலுவை  பற்றி பேசினார். ஒரிசா பாலு அவர்களின் மனைவி ராஜேஸ்வரி அவர்கள், ஒரிசா பாலுவை பற்றி பேசினார்கள். ஐயா ஒரிசா பாலு அவர்கள் புத்தகமாக ஏதும் எழுதவில்லை, சமூக ஊடகங்களை தான் பயன்படுத்தினார் என்று. 

நான் பேரார்வத்துடன் சென்று இருந்தேன். ஐயா ஒரிசா பாலு அவர்கள் இறப்பதற்கு முன் 13 நூல்கள் எழுதியுள்ளேன் என்றுரைத்தார். ஒவ்வொரு நூலும் 120-160 பக்கங்கள் இருக்கும்.
1. கலிங்கத்தில் தமிழ்
2. ஆமைகளும் தமிழர்களும்
3 குமரிக்கண்டம்
4 கடலில் ஒரு தேடல்
5 தமிழர் மதம்
6  தமிழால் எழுந்தோம்
7. உலகத்தில் தமிழர்
8 தென்புலத்தார்
9 ராவணன்
10 வேந்தன் மரபினர்
11 நோயால் விழவில்லை 
13 தமிழ்தேயம்.
அந்நூல்கள் வெளிவரவில்லை. 

இக்சா (ICSA) அரங்கம்

சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைத்தளம் ஆய்வாளர் திரு ஜம்புலிங்கம் எனக்கு அறிமுகம் அளித்தது இக்சா (ICSA) அரங்கம். மிக குறைந்த நேரம் தான் அவர்களிடம் பேசியது. என் வலைதளத்தின் ஆணிவேர் அவர்கள். ASI Director அவர்களிடம் ஒரு வினா எழுப்பி அஞ்சல் அனுப்பி இருந்தேன். என்னை யார் என்றும் தெரியாமல் என் வினாக்களுக்கு பதில் அளித்தவர். அதை போன்று தான் ஐயா ஒரிசா பாலு அவர்கள், மிக எளிமையானவர், என் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். உடல் முதிர்ச்சி மற்றும் அறிவு முதிர்ச்சி உடைவார்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்    

ஐயா ஒரிசா பாலு அவர்களின் பேச்சு இக்சா (ICSA) அரங்கத்தில்

புதன், மார்ச் 18, 2026

பௌத்தர்களுக்கு மறுக்கப்படும் நீதி

 01.மகாபோதி விகாரின் வரலாற்றுப் பின்னணி

01).உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு மக்கா, இந்துக்களுக்கு காசி, கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஜெருசலேம் ஆகியவை எவ்வளவு புனிதமான யாத்திரைத் தளங்களோ, அதேபோல் பௌத்தர்களுக்கு புத்த கயா ஒரு தூய யாத்திரைத் தளமாகும். உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் ஒவ்வொரு ஆண்டும், கோடிக்கணக்கான மக்கள் உலகின் தொலைதூர மூலைகளிலிருந்து வந்து புத்தரை வணங்கி செலுத்துகின்றனர்.
 
02).சித்தார்த்த கௌதமர் ஞானம் பெற்று புத்தரானது புத்த கயாவில் உள்ளது மகாபோதி விகாரம்.
 
03).கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட ஒரு பழமையான பௌத்த விகாரமாகும். 

04).மகதப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகும், பௌத்தம் தொடர்ந்து செழித்து வளர்ந்தது, புத்த கயா பௌத்தர்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது.

05).இந்து மத ஆட்சியாளர்கள் மற்றும் இந்து மறுமலர்ச்சி ஆகியவற்றால் எழுச்சியடையத் தொடங்கியது வைதீகம் (இந்துமதம்).  ஆட்சியாளர்களின் ஆதரவின்மை மற்றும் துன்புறுத்தல் போன்ற காரணங்களால் பௌத்தம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 
 
கி.பி.7ஆம் நூற்றாண்டில் சைவ மன்னன் சசாங்கனின் ஆட்சியின் போது பௌத்தமும் புத்தகயாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், 13ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களின் தாக்குதலே அதன் இறுதி வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது, அப்போது புத்தகயா கைவிடப்பட்டது. 

06).விகாரத்தின் புத்தமத தோற்றம் உள்ளூரில் கிட்டத்தட்ட மறக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முழு இடமும் ஒரு சைவ வழிபாட்டின் வசம் சென்றது. இது கயாவிலிருந்து வந்த வைணவ யாத்ரீகர்கள் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் போதி-மரத்தை தங்கள் புனிதத் தலங்களின் சுற்றில் சேர்க்க அனுமதித்தது. பௌத்தத்தை அது தோன்றிய இந்திய மண்ணிலிருந்து அகற்ற பயன்படுத்திய பொய்க்கருத்து தான் புத்தர் விஷ்ணுவின் அவதாரமென்பது.
 
07). 16 ஆம் நூற்றாண்டில் ஒரு அலைந்து திரிந்த இந்து சாது மகாபோதிக்கு அருகில் ஒரு கோவிலை நிறுவினார். விஹாரா மற்றும் மகாந்த் என்று அழைக்கப்பட்ட அவர், அந்தப் பகுதியின் தலைமை நில உரிமையாளரானார், மகாபோதி விகார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் உரிமையையும் கூட கோரினார்.
 
08).16 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், பர்மாவின் மன்னர்கள் மகாபோதியின் அகழ்வாராய்ச்சி மற்றும் மறு சீரமைப்பிற்காக ஏராளமான நிதியுடன் பிரதிநிதிகளை அனுப்பினர். மகாபோதி விகார் மறுசீரமைப்பில் பல பிரிட்டிஷ் நிர்வாகிகளும் முக்கிய பங்கு வகித்தனர். அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், எட்வின் அர்னால்ட், ஹாமில்டன் புக்கனன், ராஜேந்திரலால் ஆகியோர் மிக முக்கியமான பங்கை வகித்தனர். மித்ரா மற்றும் இந்தியாவில் பௌத்த வரலாற்றை மீண்டும் கண்டுபிடித்து, நாட்டின் உன்னத பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பாதுகாக்கவும், சிறப்பிக்கவும் பணியாற்றிய பலர்.
 
09).1891 ஆம் ஆண்டு இலங்கை பௌத்த பிக்கு அனகாரிகா தர்மபாலர் ஒரு யாத்ரீகராக விகாரைக்குச் சென்றார். அங்கு அவர் கண்ட பரிதாபகரமான சூழ்நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மகாபோதியின் பராமரிப்பு அல்லது பராமரிப்பிற்காக எதுவும் செய்யப்படாத நிலையில், வழிபாட்டாளர்களின் தாராளமான காணிக்கைகளை பிராமணர்கள் பறிமுதல் செய்ததைக் கண்டு அவர் வருத்தப்பட்டார்.

10). விஹாரத்திலேயே, மகாந்தரின் பிடியிலிருந்து விகாரை விடுவிப்பதாக அவர் முடிவெடுத்தார். மகாபோதி கோயிலை விடுவிப்பதற்காக, உலகம் முழுவதிலுமிருந்து பௌத்தர்கள் தங்கள் புனித விகார் பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கோரத் தொடங்கினர். அனகாரிகா தர்மபாலாவின் நடவடிக்கைகள் மகாந்தரை மிகவும் கோபப்படுத்தியதால், அவர் மீது உடல் ரீதியான தாக்குதல்களுக்குக் கூட உத்தரவிட்டார்.  

11).1875 ஆம் ஆண்டில் ஜே.டி.பெக்லரின் கீழ் இரண்டு பிரிட்டிஷ் மிஷன்கள் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி விகாரை மீட்டெடுத்தன.
 
12). இப்பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்ததாலும், அந்த நேரத்தில் உள்ளூர் பௌத்தர்கள் யாரும் இல்லாததால், கோயில் பிராமண பூசாரிகளின் கைகளுக்குச் சென்றது. இதைத் தடுக்க ஆங்கிலேயர்கள் எதுவும் செய்யவில்லை, ஏனெனில் அவர்களுக்கு இந்துக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
 
13).சுதந்திரத்திற்கான தேசிய இயக்கத்தின் போது, எம்.கே. காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், 1922இல் நடைபெற்ற கட்சியின் கயா மாநாட்டில், மகாபோதி பௌத்தர்களுக்கு என்று உறுதியளித்தனர். சுதந்திரம் அடைந்த பிறகும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
 
14).மகாபோதி விகார் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு ஜூன் 2002 இல் இதை உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது. இந்தக் குழு இந்தக் விகாரை 'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த ஆரம்பகால விகாரை கட்டுமானங்களில் ஒன்றாகவும்' குறிப்பிட்டது. மகாபோதி விகாரையின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்காக பௌத்தர்களுக்கும் இந்து பேரினவாதிகளுக்கும் இடையே நிலவும் சர்ச்சை மற்றும் பதற்றத்தை யுனெஸ்கோ அங்கீகரிக்கவில்லை.

02.புத்த கயா கோயில் சட்டம் (BGT) 1949

01).புத்த கயா கோயில் மற்றும் அதன் சொத்துக்களை சிறப்பாக நிர்வகிக்கும் நோக்கத்துடன் பீகார் மாநில சட்டமன்றம் BGT (Buddha Gaya Temple Act) சட்டத்தை இயற்றியது. இது ஜூலை 6, 1949 அன்று நடைமுறைக்கு வந்தது.  

02). BGT சட்டத்தின் கீழ் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கோயில் நிர்வாகக் குழுவை அமைக்கிறது. இதில் ஒரு தலைவர், நான்கு பௌத்தர்கள் மற்றும் நான்கு இந்துக்கள். இதில் தலைவர் ஒரு இந்துவாக இருக்க வேண்டும்.  

03).BGT சட்டத்தின் இந்த விதி இந்துக்களுக்கு ஆதரவானது .இந்து மட்டுமே குழுவின் தலைவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். புத்த விகார் இந்து உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக புத்த உறுப்பினர்கள் இந்து உறுப்பினர்களின் முடிவுகளைப் பின்பற்ற வேண்டும்.

04).குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். கூட்டத்தில் முடிவுகளை எடுப்பதற்கு, குழுவின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை கோரம் (Quorum) நான்கு உறுப்பினர்கள். இதனால் புத்த உறுப்பினர்கள் அனுமதியின்றி முடிவுகள் எடுக்கலாம்.  

05.BGT சட்டம் கூறுகிறது, தற்போதைக்கு கோவிலையோ அல்லது கோவில் நிலத்தையோ பயன்படுத்தும் விதம் தொடர்பாக இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டால், மாநில அரசின் முடிவே இறுதியானது .


03.BGT நீதித்துறையின் அதிகாரத்தை பறிக்கிறது. 

01.இந்திய அரசியலமைப்பின் பிரிவு 12இன் படி, அது 'அரசு' என்ற வரையறையின் கீழ் வரலாம். அரசின் எந்தவொரு நடவடிக்கையும் நாட்டின் உயர் நீதித்துறையால் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நன்கு தீர்மானிக்கப்பட்ட ஒரு முன்மொழிவாகும். இந்த விதியும், குழுவின் நிர்வாக நடவடிக்கைகளின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டப்பூர்வத்தன்மையை மறுஆய்வு செய்யும் நீதித்துறையின் அதிகாரத்தை பறிக்கிறது.

02.இந்த இந்து, மகாபோதி கோயில் மற்றும் அதன் சொத்துக்களின் விவகாரங்களை தீர்மானிக்க முடியும். ஆனால் மகாபோதி கோயிலின் வளாகத்திற்குள் இருக்கும் இந்து மடத்தின் விவகாரங்களில் தலையிட எந்த பௌத்த உறுப்பினருக்கும் எந்த உரிமையும் இல்லை.         

04.BGT அடிப்படை உரிமைகளை மீறுகிறது 

01.இந்த BGT சட்டம், மதச்சார்பின்மை கொள்கைகள் மற்றும் நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தையும், அரசியலமைப்பின் கீழ் கருதப்படும் மத சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதால், அரசியலமைப்புச் சோதனையில் தோல்வியடைகிறது.

02.முன்பு நடைமுறையில் இருந்த சட்டங்களின் நோக்கத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் 13வது பிரிவின்படி, BGT சட்டம் உடனடியாக செல்லாததாக இருந்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவின் பிரதேசத்தில் நடைமுறையில் இருந்த அனைத்து சட்டங்களும் அடிப்படை உரிமைகளின் விதிகளுடன் முரண்படும் அளவிற்கு செல்லாது என்று அரசியலமைப்பு அறிவிக்கிறது. 

03.BGT சட்டத்தின் பல்வேறு விதிகள் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14இன் அர்த்தத்திற்கு முரணாகத் தெரிகிறது. புத்தகயா விகார் மேலாண்மைக் குழுவில் இந்து உறுப்பினர்களின் ஆதிக்கம் மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை விதிகளை மீறுகிறது.

04.BGT சட்டம் மற்ற ஒத்த சட்டங்களுடன் முரண்படுகிறது. பல இந்து கோயில்களுக்கான சட்டங்கள், இந்துக்கள் மட்டுமே தங்கள் நிர்வாகக் குழுக்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகின்றன.

உதாரணமாக 1955 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜகன்னாதர் கோயில் சட்டம்

*பிரிவு 5 மற்றும் 6 குழுவில் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியான அளவுகோல் இந்து மதத்தைப் பின்பற்றுபவராக இருக்கவேண்டும்.  

*பிரிவு 6(2) இந்து மதத்தைச் சேராத எந்தவொரு நபரும் ஜகன்னாதர் கோயில் மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகத் தகுதி பெற முடியாது என்று கூறுகிறது. 

*பிரிவு 6 மாவட்ட ஆட்சியர் இந்து மதத்தைச் சேராதவர் என்றால், ஒரு கூடுதல் பதவிக்குக் குறையாத இந்த மதத்தைச் சேர்ந்த மாநில அரசு அதிகாரி மாவட்ட நீதிபதி இந்தக் குழுவின் உறுப்பினராகவும் துணைத் தலைவராகவும் இருப்பார். இந்த விதி புத்தகயா சட்டத்துடன் தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. 

உதாரணமாக ஸ்ரீ சன்வாலியாஜே கோயில் சட்டம் 1992

*பிரிவு 6 இந்த கோயிலின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் மற்றும் தலைமைப் பதவியை இந்துக்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துகிறது .

05.பௌத்தர்களின் அடையாளத்தை இந்துமயமாக்குகிறது

01.BGT சட்டம் இந்துகள் பௌத்தர்களுக்கு ஆணையிடவும், அதன் நிதி விவகாரங்களை கட்டுப்படுத்தவும், தொடரவும் அதிகாரம் அளித்திருக்கிறது.

02.மகாபோதி கோயில் வளாகத்திற்குள் ஏற்கனவே ஒரு சிறிய சிவாலயம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது. ஒரு சிவலிங்கம் உட்பட சில இந்து கடவுள்களின் சிலைகளை நிறுவியுள்ளனர். மகாபோதிக்குள் அனைத்து வகையான இந்து சடங்குகளும் சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன.

04. பிக்கு பதந்த் ஆர்ய நாகார்ஜுனா ஷுரேய் மகாபோதியில் இருந்த சில புத்தர் சிலைகளை அசுத்தப்படுத்தியதற்கும் கொள்ளையடித்ததற்கும் இந்து பூசாரிகள் பொறுப்பு என்றார். கோயிலில் இருந்து விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் திருடப்பட்டுள்ளன.


முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், யூதர்கள் மற்றும் சீக்கியர்களுக்கான மிகவும் புனிதமான இடங்கள் முழுமையாக அவர்களின் சொந்த மதத் தலைவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன, ஆனால் பௌத்தர்களுக்கு மட்டுமே இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு மத சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதம் செய்து பாதுகாப்பதால், BGT ரத்து செய்யப்பட வேண்டும்.

வியாழன், மார்ச் 05, 2026

அயோத்தி அகழாய்வும் பௌத்தர்களின் உரிமைகோரலும்


இந்துக்களின் நம்பிக்கையும் குற்றச்சாட்டும்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் (UP) அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமி தான் இராமன் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இராமன் என்பவன் புராணத்தில் வருபவன் வரலாற்றில் இல்லை. முகலாயப் பேரரசர் பாபர் ஆட்சியின் போது அவரது படைதலைவர் மீர் கான் இராம ஜென்ம பூமியில் இருந்த இராமர் கோயிலை இடித்து அதன் மீது பாபர் மசூதி கட்டினார் என்பது இந்துக்களின் குற்றச்சாட்டாகும்.

பாபர் மசூதியை இடிப்பு
6 டிசம்பர் 1992 (பாபா சாகிப் நினைவு தினம்) அன்று VHP மற்றும் BJP 1,50,000 பேரை உள்ளடக்கி ஒரு பேரணியை ஏற்பாடு செய்து வன்முறையாக மாற்றி பாபர் மசூதியை இடித்தது. இது மதவெறி காரணமாக வேண்டுமென்று நிகழ்த்தப்பட்ட வன்முறை. பாபர் மசூதி இடிக்கப்படும் முன் வரை மிக முக்கியமான மசூதியாக இருந்தது. 
 
பத்து ஆண்டுகள் கழித்து 2003-ஆம் ஆண்டில் ராம ஜென்ம பூமி பாபர் மசூதி இடிப்பு வழக்கில், (Allahabad High Court) அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வின் பரிந்துரையின் படி இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அயோத்தில் உள்ள பாபர் மசூதி வளாகத்தில் அகழாய்வுகள் மேற்கொண்டது. 

அயோத்தியில் அகழாய்வுகள்:
அயோத்தியில் மொத்தம் நான்கு முறை அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. லக்னோ நீதிமன்றத்தின் படி ஐந்தாவது அகழாய்வு நடைபெற்றுது. 
  • முதல் அகழ்வாய்வு 1862-63
  • இரண்டாவது அகழ்வாய்வு 1889-91
  • மூன்றாவது அகழ்வாய்வு 1969-70
  • நான்காவது அகழ்வாய்வு 1975-76
  • ஐந்தாவது அகழ்வாய்வு 2003
முதல் அகழ்வாய்வு 1862-63 அலெக்சாண்டர் கன்னிங்காம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை நிறுவிய அலெக்சாண்டர் கன்னிங்காம் 1862-63ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் முதல் அகழ்வாய்வு ஆய்வு செய்தார்.
  • அயோத்தி நகரம் குறித்து பழம்பெரும் நூல்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அயோத்தியில் 1000 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் காணப்படவில்லை என்றார். அயோத்தி நகரத்தை தொன்ம நூல்களில் சாகேதம் என்று குறிப்பிட்டுள்ளனர். கௌதம புத்தர் தான் அயோத்தி நகரத்தில் 6 மாதங்கள் கழித்ததாகக் கூறுகிறார். விசாகா, சாகேதா மற்றும் அயோத்தி நகரங்கள் ஒன்றே என்றும் அவர் முடிவு செய்தார்
இரண்டாவது அகழ்வாய்வு 1889-91 அலோயிஸ் அன்டன் ஃபூரர்
ஜெர்மனிய இந்தியவியல் அறிஞர் அலோயிஸ் அன்டன் ஃபூரர் (Alois Anton Führer) அகழாய்வு 1889-91ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டார்.

அயோத்தி நகரத்தின் தெற்குப் பகுதியில் மணி பர்பத் (Mani Parbat), குபேர் பர்பத் (Kuber Parbat) மற்றும் சுக்ரிவ் பர்பத் (Sugriv Parbat) ஆகிய மூன்று பண்டைய குன்றுப் பகுதிகள் கண்டுபிடித்தனர். தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் காலத்தில் அயோத்தியில் இருந்த இந்து, சமண, பௌத்த கட்டிட அமைப்புகளை தகர்த்தனர். அயோத்தியில் தற்போது உள்ள இந்து, சமண கட்டிட அமைப்புகள் 1781-ஆம் ஆண்டுக்கு பிந்தையவைகளே.  
 
பாபர் ஆட்சியின் போது அவரது படைத்தலைவர் மீர் கான் என்பவர், அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயில் நிலத்தில் 1523-ஆம் ஆண்டில் பாபர் மசூதி நிறுவினார். அதற்கு ஆதரவாக இடிக்கப்பட்ட இராம ஜென்மபூமி கோயிலின் கருங்கல் தூண்கள் பாபர் மசூதி கொண்டிருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் அயோத்தியின் சொர்க்க துவாரம் மற்றும் திரேதா கே தாக்கூர் பகுதியில் உள்ள கோயில்களை இடித்து புதிய மசூதிகளை கட்டினார்.
 
மூன்றாவது அகழ்வாய்வு 1969-70
1969-70 ஆம் ஆண்டுகளில் பனாரஸ் இந்துப் பல்கழகத்தின் பேராரசிரியர் அவத் கிஷோர் நரேன் அயோத்தியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டனர். அகழாய்வின் முடிவில் கி.மு 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் நிறுவப்பட்ட அயோத்தி நகரத்தில், பௌத்த பிக்குகள் வாழ்ந்ததாக கூறுகிறார்

.
நான்காவது அகழ்வாய்வு 1975-76 பிரஜ் பாசி லால்
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறிஞர் பிரஜ் பாசி லால் தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணிகள் 1975-76 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டனர்.

இராம ஜென்மபூமி எனக்கருதப்பட்ட பாபர் மசூதி வளாகம், சிரிங்கிபேர புரம், நந்தி கிராமம், பரத்துவாஜர் ஆசிரமம், சித்திர கூடம் போன்ற 14 இராமாயண நிகழிடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டனர். நான்காவது அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை. அயோத்தியின் அகழாய்வின் போது சமணத் துறவியின் சுடுமண் சிற்பம். கண்டுபிடித்தார்.

வெறிச்செயலுக்கு காரணமாக இருந்தது பி.பா.லால் எழுதிய நூல்கள்.

01.இந்தியத் தொல்லியல் துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் பி.பா.லால், 1990-இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இதழில், பாபர் மசூதியின் கீழ் ஒரு பத்தியில் தான் ஒரு இந்துக் கோவிலின் எச்சங்களைக் கண்டுபிடித்ததாக எழுதினார்.

02.பி.பா.லால் 2008-ஆம் ஆண்டில் எழுதிய நூலில் இராமர், அவரது வரலாறு, ராம ஜென்மபூமி கோயில் மற்றும் இராமாயணம், தொல்லியல் மற்றும் பிற அறிவியல் சான்றுகள் குறித்து எழுதினார்.
பாபர் மசூதியின் தூண்களுடன் இணைக்கப்பட்ட பன்னிரண்டு கல் தூண்கள் இருந்தன. அவைகள் வழக்கமான இந்து சமய தெய்வங்களின் உருவங்கள் மற்றும் வார்ப்புருக்கள் கொண்டிருந்தன எனக்குறிப்பிட்டார். இந்தத் தூண்கள் பாபர் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்றும், ஆனால் அதற்கு வேறானவை என்பது சுயமாகத் தெரிகிறது என்றார்.

ஐந்தாவது (இறுதி) அகழ்வாய்வு 2003

2003ஆம் ஆண்டில் ஐந்தாவது அகழ்வாய்வு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இறுதி அகழ்வாய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள், 29 இசுலாமியர்கள் உள்ளிட்ட 131 நபர்கள் கலந்து கொண்டனர். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் குறித்த 574 பக்க அறிக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ரேடார் ஆய்வுகள் சனவரி 2003-இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் வளாகத்தின் தரையடியில் உள்ளதை கண்டுபிடிக்கும் ரேடார் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்தனர். இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கீழ் 0.5 முதல் 5.5 மீட்டர் ஆழத்தில் கட்டிட அமைப்புகளான தூண்கள், அடித்தள சுவர்கள், தரையமைப்பு போன்ற பழங்கால மற்றும் சமகால கட்டமைப்புகளுடன் தொடர்பு உடையவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.  
 
இந்தியத் தொல்லியல் துறை 22 மே முதல் 6 சூன் 2003 முடிய அகழாய்வு செய்த போது கண்டுபிடித்த தொல்லியல் எச்சங்கள் குறித்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டமைப்புகளில் கிழக்கு-மேற்கு திசை மற்றும் வடக்கு-தெற்கு திசைகளில் பல செங்கல் சுவர்கள், உடைந்த சிற்பங்கள் 'அலங்கரிக்கப்பட்ட வண்ணத் தரைத் தளம்', பல 'தூண் தளங்கள்' மற்றும் '1.64 மீட்டர் உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட உடைந்த கருங்கல் தூண்கள் ஆகியவை அடங்கும். தூண்களின் நான்கு மூலைகளிலும் அரபு மொழியில் குரான் வசனங்கள் செதுக்கப்பட்டிருந்தது.

ஐந்தாவது அகழாய்வு நடைபெறுவதற்கு முன் பீம் படை ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது, வினீத் குமார் மௌரியா ஒரு மனு தாக்கல் செய்தார். ஐந்தாவது அகழாய்வு முடிந்த பிறகு கர்நாடக புத்த சங்கம் (KBS) குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியது.

பீம் படை ரிட் மனு தாக்கல் (நவம்பர் 2018)

01. (Bhim Army) பீம் படை தலைவர் சந்திரசேகர் ஆசாத், பண்டைய காலங்களில், அயோத்தி புத்த மதத்தின் மையமாக இருந்தது, அது சாகேத் என்று அழைக்கப்பட்டது. அயோத்தியை சாகேத் என்று மறுபெயரிட வேண்டும் என்று  உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.

02.சந்திரசேகர் ஆசாத் பீம் ஆர்மி, பவுத் தம்ம சேனா மற்றும் தொடர்புடைய குழுக்கள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் புத்த கலாச்சாரத்தைச் சேர்ந்தவை எனவே அந்த இடத்தில் ஒரு புத்த விகாரை கட்ட வேண்டும் என்று கோரினர்.

03.அகழ்வாராய்ச்சியில் உச்ச நீதிமன்றமும் யுனெஸ்கோவும் தலையிட வேண்டும் என்று கோரின.
 
வினீத் குமார் மௌரியா மனு (டிசம்பர் 2018)
இதுவரை, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு இரண்டு உரிமைகோரல்கள் இருந்தன. ஒருவர் அங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும், மற்றவர் ஒரு மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். மூன்றாவது உரிமைகோரல் அயோத்தியில் உள்ள பவாரி மசூதிக்கு அருகிலுள்ள உள்ளூர்வாசியான வினீத் குமார் மௌரியா அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை புத்த விஹாராக அறிவிக்கக் கோரிய மனுவை தாக்கல் செய்தார். அவர் அந்த இடத்தில் ஒரு புத்தர் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது, மேலும் ஜனவரி 3, 2019 முதல் அயோத்தி வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்போது அது பரிசீலிக்கப்படும் என்றது. 
 
01. உறுதியான அறிவியல் சான்றாக வினீத், கடந்த 160 ஆண்டுகளில் 4 அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருள் ஆதாரங்களின் உரை, புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றைக் கொண்ட ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு மையம்) அறிக்கையின் 600 பக்கங்களை SC-யிடம் சமர்ப்பித்துள்ளார்.   
 
02.சாகேத்தில் (அயோத்தி) இந்து மதத்திற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

03. முகலாய மன்னர் பாபர் உஸ்பெகிஸ்தானில் கி.பி 1483 இல் பிறப்பதற்கு வெறும் 300 ஆண்டுகளுக்கு முன்பு, நாளந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட அதே ஆண்டில், பவாரி மசூதி கி.பி 1193 இல் கட்டப்பட்டது.  
 
04.பௌத்தர்களின் கலைப்பொருட்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டது, பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் அந்த நிலத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் தளமாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.  
 
05.2010 ஆம் ஆண்டில், புத்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் துறை ஒப்புக்கொண்டது, ஆனால் அது அமைதியையும் அமைதியையும் சீர்குலைக்கும் என்ற சாக்கில் இது பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, அயோத்தி விவகாரம் நீண்ட காலத்திற்கு முன்பே கையாளப்பட்டு வருவதாகவும், மௌரியா மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் பெஞ்ச் அதை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறியது. வேறு வழியில்லாமல், மௌர்யா பின்னர் மனுவை வாபஸ் பெற்றார்.
 
கர்நாடக புத்த சங்கம் (KBS) குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் (ஜூன் 2020)
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் நவம்பர் 9, 2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் மசூதிக்கு தனி 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது. 
 
அதன் பிறகு HR மகேஷ் தலைமையிலான (The Karnataka Buddhist Society (KBS)) கர்நாடக புத்த சங்கம், அயோத்தியில் உள்ள ராமர் மந்திர் தளத்தை புத்த தொல்பொருள் தளமாக அறிவிக்க வேண்டும் என்று  கோரியது. இந்தப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக ஆளுநர் மூலம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு KBS ஒரு கடிதம் அனுப்பியது.

01.ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனப் பயணி ஃபா-ஹியன் (Fa-Hien) இந்தியாவுக்கு வருகை தந்து அயோத்தியில் நூற்றுக்கணக்கான புத்த மடங்கள் இருந்ததை ஆவணப்படுத்தியதாக சுட்டிக்காட்டியது.

02.ஏழாம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்குச் சென்ற மற்றொரு சீனப் பயணியான ஹியூன் சுவாங் (Hiuen Tsang) இந்தப் பகுதியில் ஆயிரம் புத்த மடாலயங்கள் இருந்ததை ஆவணப்படுத்தியதாக சுட்டிக்காட்டியது. 
 
03.1862–63ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் மேற்கொண்ட கணக்கெடுப்பையும், அந்தப் பகுதியை ஒரு பௌத்த தளமாக அடையாளம் கண்டதாகவும் சுட்டிக்காட்டியது.

04.தம்ம சக்கரங்கள் மற்றும் ஸ்தூபிகள் உள்ளிட்ட பௌத்த சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி. கோயில் கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் 
என்று கோரினர்.
 
05. யுனெஸ்கோ அல்லது இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) அந்த இடத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்புகளை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
 
-தொடரும்-

புதன், ஜனவரி 28, 2026

இந்திய அரசியல் அமைப்பு வருணாசிரமத்திற்கு எதிரானது


மகாராஷ்டிரா நாசிக்கில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற (2026) 77வது குடியரசு தின விழாவில், ​​தேசியக் கொடியேற்றத்திற்குப் பிறகு மகாராஷ்டிர நீர்வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் (Girish Mahajan) (BJP) உரையாற்றும் போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை தவிர்க்கப்பட்டது. இந்த செயலுக்கு வனத்துறை பெண் அரசு அதிகாரி மாத்வி ஜாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.



BJP அமைச்சரின் ஆணவப் பேச்சு

இந்தியாவின் அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயர் குடியரசு தின விழா உரையில் தவிர்க்கப்பட்டது. வனத்துறை பெண் அரசு அதிகாரி மாத்வி ஜாதவ் குரல் கொடுத்து கேள்வி எழுப்பினார்.

01. சமத்துவம் மற்றும் நீதிக்கான அரசியலமைப்பு டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளிலிருந்து உருவானது என்றும் குடியரசு தினத்தன்று அவரது பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

02.நாட்டின் அரசியலமைப்போடு தொடர்பில்லாத பல தலைவர்களைக் குறிப்பிட்ட அமைச்சர் வேண்டுமென்றே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயரைத் தவிர்த்ததாகக் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.

03. குடியரசு தினம் என்பது அரசியலமைப்பின் கொண்டாட்டம் என்றும், இது டாக்டர் அம்பேத்கரின் பணியிலிருந்து உருவானது என்றும், அவரது பெயரை விடுபட்டதை அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இடையூறு ஏற்படாமல் இருக்க பெண் காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, அவரைக் காவலில் எடுத்தனர். பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

01.அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் பெயரையும், அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் யாராலும் அழிக்க முடியாது.

02.இன்று நாம் அனைவரும் அவரால் தான் இங்கே பதவியில் இருக்கிறோம், 

03.இதற்காக என்னை இடைநீக்கம் (Suspend) செய்தாலும் பரவாயில்லை, நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், அம்பேத்கரின் அடையாளத்தை மறைப்பதை என்னால் ஏற்க முடியாது," என்று அவர் ஆவேசமாகத் தெரிவிக்கிறார்.


குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்
அமைச்சர் கிரிஷ் மகாஜன், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயர் விடுபட்டது கவனக்குறைவினால், வேண்டுமென்றே அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். பெயர் தற்செயலாகத் தவறவிடப்பட்டது. இதற்குப் பின்னால் எந்த வேண்டுமென்றே நோக்கமும் இல்லை. நான் 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்', 'சிவாஜி மகாராஜ் கி ஜெய்' போன்ற கோஷங்களை மட்டுமே முழக்கமிட்டேன். அவரது பெயரைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. யாருடைய உணர்வுகள் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மகாராஷ்டிரா நீர்வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் பதிலளித்தார்.


டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை வெறுக்கின்றனர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை வெறுக்கின்றனர். ஏன் எனில் பாபா சாகிப் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பு மட்டுமே அனைவரும் சமம், சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. இது வருணாசிரமத்திற்கு எதிராக உள்ளது. அரசியலமைப்புச் சட்டம்  தான் நாட்டை ஆளும்.

01.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது என்று மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தார். பாபா சாகிப் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன படி உறுதிமொழி எடுத்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

02.அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்து, குறிப்பிட்ட அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், நீதித்துறை சட்டங்களுக்கும் மதிப்பளிப்பதை விட தன்னை ஒரு சனாதனி என்று கூறிக்கொண்டு அதன் படி நடப்பதில் பெருமைப்படுகிறார். எனவே தான் கீழக்கட்டு பதிப்பகம், 'திருப்பரங்குன்றம் விவகாரம்- ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ்., ரவுடியா' என்ற தலைப்பில் நுால் வெளியிட்டுள்ளது. அட்டைப்படம், நீதிபதியை ஒரு கை திரிசூலத்தை பிடித்து கொண்டு, மற்றொரு கை காவி கொடியை பிடித்து கொண்டு கேலிச்சித்திரமாக்குகிறது.

03. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், நீதிமன்ற வளாகங்களில் காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களைத் தவிர மற்ற படங்களை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு, நீதிமன்றப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர் டாக்டர்.அம்பேத்கரின் படங்கள் அகற்றப்படாது என தலைமை நீதிபதி உறுதி அளித்தார். 

04.ஜனவரி 26, 2022 அன்று கர்நாடகாவில் ராய்ச்சூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அம்பேத்கர் படத்தை அகற்ற நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அம்பேத்கர் படத்தை வைக்க உத்தரவிட்டது. 

05. ஜனவரி 2023-ல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்து வழங்கிய உரையிலிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், மற்றும் சில தலைவர்களின் பெயர்களைச் சட்டமன்றத்தில் வாசிக்காமல் தவிர்த்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர்.அம்பேத்கர் பெயரை ஆளுநர் உச்சரிக்க மறுத்தது, அவரை அவமதிக்கும் செயல் என சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுகவினர் விமர்சித்தனர்.

06.காவி உடை அணிந்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மதச்சார்பற்ற கொள்கைக்கு மாறாகச் செயல்படுகிறார். 

 
நீதிமன்ற நீதிபதிகளில் 78% உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். 640 நீதிபதிகள் ஒரே ஜாதி. உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையாக பதவி வகிக்கின்ற பார்ப்பனர்கள் இத்தகைய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 124, 217 மற்றும் 224 ஆகியவற்றின் கீழ் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள், இதில் ஜாதி வாரியான இட ஒதுக்கீடு இல்லை. பெரும்பாலான நீதிபதிகள் உயர் சாதியினர் எனவே அவர்கள் மனுநீதியை முதன்மையாக கொள்கின்றனர்.

//குடியரசு தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி குறிப்பிடுவது அவசியம். இந்த மக்கள் அரசியலமைப்பையும் அதன் படைப்பாளர்களையும் மதிக்க வேண்டும்.//