புதன், அக்டோபர் 01, 2025

நெற்குன்றம் புத்தர்


அமைவிடம்:
ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரர் சிவன் கோவில்,
தயாசதன் சாலை, செந்தமிழ் நகர்
நெற்குன்றம், கோயம்பேடு, 
மதுரவாயல் வட்டம்
திருவள்ளுவர் மாவட்டம்

இந்த கோயில் கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து 900 மீட்டர் தொலைவில் உள்ளது. கோயிலின் கருவறையின் பக்கச் சுவரில் நிறுவப்பட்டுள்ளது.



சிலையமைப்பு:  
ஞான முடி (உஷ்ணீஷா) தலையின் மேல் சிறிதாக உள்ளது. அரை தோரணம், அசோக கொடிகளும் மேலே உள்ளது, இடது தோளில் சீவர ஆடை மங்கலாகத் தெரிகிறது. .நெற்றி திலகம் உள்ளது. நீண்ட காது, தியான முத்திரை, அரை தாமரை அமர்வு, பீடத்தின் அடிவாரத்தில் ஒரு தர்ம சக்கரமும் மங்கலாகத் தெரியுகிறது. 

காணாமல் போன புத்தர் சிலை

கரோண காலத்தில் பதிவிட்டு இருந்தார் ஐயா வேலுதரன். சிலை பாதுகாப்பாக இல்லை. பார்க்க விரும்புபவர் உடனடியா பார்க்கவ வேண்டி பதிவிட்டு இருந்தார். மிக காலா தாமதமாக நேற்று தான் அவர் வலைப்பதில் நெற்குன்றம் புத்தரை கண்டேன். இன்று மலை (01/10/2025) சென்று அந்த கோவில் (ஜீவா சமாதி) பார்த்து புத்தர் சிலை இல்லாதது கண்டு வருந்தினேன். அங்கு பணியாற்றிய நபரை விசாரித்தேன். புத்தர் சிலை எடுத்து செல்லப்பட்டது யார் எங்கே என்றெல்லாம் தெரியாது என்றுரைத்தார் .     

 நன்றி: வேலுதாரன் - வலைப்பதிவு

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக